Monday 16 July 2012

உறைந்த கடைசிச் சொட்டில்...






திரும்பிப் பார்த்து விலகும் 
கொண்டாட்டங்கள் இழந்தவனின் 
மிதக்கும் பொன்னிறக் கண்களில் 
உடைந்து சிதறும் 
கண்ணாடிச் சில்லுகள் 

சொட்டு சொட்டாய் ஊறிய வாழ்க்கையை 
உயரத்தில் வைத்திருந்தவர்கள் 
சிறகுகளைப் பரிசளித்தார்கள் 
பெரும் பாரம் சுமந்த அடிமைகளுக்கு 

அரிவாளும் கைகத்தியும் 
அணைமட்டப் பலகையும் 
பதுக்கி வைக்கப்பட்டதென்னைக்காட்டின் நிலவறைகளில் 
ஒலித்துக் கொண்டிருக்கிறது 
பதிவாகாத தனிமைப்பாடல் 

பனைகளின் வேரில் 
சிக்கிக் கொண்டிருக்கலாம் 
அவனிநார் கால்வளையங்கள் 

அரிவாள் பெட்டியில் 
உறைந்திருக்கும் 
கடைசிச் சொட்டினை நம்பி 
உயிர்த்திருக்கிறது 
எம் குல சாமியின் சன்னதம்.



No comments:

Post a Comment