Thursday 19 July 2012

உயிர் துரத்தல்

அத்தனை உயிரும்
செத்தொழிந்த இரவில்
அவன் மட்டும் பிழைத்திருந்தான்
ஆதி பிரபஞ்ச கதகதப்பில்
ஒளிந்திருந்தான் பாதுகாப்பாய்
சூரியன் கண்ட கணத்தில்
தொடங்கியது உயிர் துரத்தல்
வேட்டையெங்கும்
சிதறிய அவனை சேகரித்து
உருவான உயிரிடம்
புத்துலகின் முதல் துளி
ஆழ் இருளில் தேடித் தேடி
அடைந்ததொரு பெருவெளியில்
அத்தனை உயிரும் பிழைத்தலைந்த பொழுதில்
நிகழ்ந்ததவன் உயிர் துரத்தல்.

நன்றி தீராநதி

No comments:

Post a Comment