செத்தொழிந்த இரவில்
அவன் மட்டும் பிழைத்திருந்தான்
ஆதி பிரபஞ்ச கதகதப்பில்
ஒளிந்திருந்தான் பாதுகாப்பாய்
சூரியன் கண்ட கணத்தில்
தொடங்கியது உயிர் துரத்தல்
வேட்டையெங்கும்
சிதறிய அவனை சேகரித்து
உருவான உயிரிடம்
புத்துலகின் முதல் துளி
ஆழ் இருளில் தேடித் தேடி
அடைந்ததொரு பெருவெளியில்
அத்தனை உயிரும் பிழைத்தலைந்த பொழுதில்
நிகழ்ந்ததவன் உயிர் துரத்தல்.
நன்றி தீராநதி
No comments:
Post a Comment