Tuesday 17 July 2012

நகர வீதிகளில் அலையும் குரல்கள்











ஒரு நிறுவனம் ஒருவனைக் கொன்றுவிட்டது


அவன் கவிஞன் என்பதால் 
மூளையின் வலது பக்கத்தில் சிறிது அகற்றி 
கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டித் தொங்கவிடப்பட்டு 
நிறுவன அடிமை அட்டை பளிச்சென்று தெரிய 
பாதாள அறையில் அவன் பணிகள் நியமிக்கப்பட்டன 
அவன் விளிப்பு அவன் செவிகளிலேயே
விழாமல் போனது 
பசியின் துரத்தலில் பதுங்கியவன் நிழல் 
நிறுவன கரங்களின் அணைப்பிலிருந்தது 
அவன் புன்னகையைக் களவாடி 
யாழினைத் தந்தனர் கையில் 
இறந்தது தெரியாதது போல் நடிக்கிறவன்
சிறந்த நடிகனாகிவிட்டான் கவிஞன் 
அவனுடைய ஒப்பமில்லாமல் தயாரிக்கப்பட்ட 
ஏவல் பத்திரத்தில் அடிமைப் பாத்திரமென 
பொறிக்கப்பட்டிருக்கிறது 
சுயம் அழித்து வெறித்த விழிகளுடன் 
சிக்னல்களில் சிக்காமல் இயக்கப்படுகிறவன் 
பாதங்களில் சங்கிலிச் சத்தம் 

நிறுவனங்கள் நிறைந்த நகரமெங்கும் 
சுற்றித் திரிகின்றன 
விதை நசுக்கப்பட்ட வெற்றுக்குரைப்புகள்.
   தீராநதி 2011 நவம்பர் இதழில் 

No comments:

Post a Comment