Monday 16 July 2012

பேருதட்டில் எழுதப்படும் நம் பெயர்



சுழன்று கொண்டேயிருக்கும்
ஒரு கூர்வாளில் சிக்கிச் சின்னாபின்னமாகிறது
ஈரமுத்தமொன்று
சிதறிக்கிடக்கும் உதட்டுத் துண்டுகளில்
கசியும் குருதி பார்த்து கலங்குபவன்
ஒரு துண்டில் உன் பெயரையும்
இன்னொரு துண்டில் என் பெயரையும் எழுதுகிறான்
நம் பெயர் எழுதப்பட்ட
வேறொரு துண்டு முழு உதடாகி
பின் பேருதடாகி மிகப்பேருதடாகி
அந்த வாளையே விழுங்கிக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு முறையும்.

No comments:

Post a Comment