Monday 16 July 2012

தெரிந்தும் தெரியாமலும்...



தெரிந்தேதான் கண்களை மூடிக்கொண்டோம்
தெரிந்தேதான் குழிக்குள் வீழ்ந்தோம்
தெரிந்தேதான் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டோம்
தெரிந்தே புதைந்தோம் 
தெரிந்தே மூச்சுத் திணறினோம்
தெரிந்தேதான் செத்துபோனோம்

தெரியாமல் உரமானோம்
தெரியாமல் வேர்களுக்குப் பயணப்பட்டோம்
தெரியாமலே அம்மரத்தின் கனியானோம்
தெரியாமல் ஒரு பறவையின் பசி தீர்த்தோம்
தெரியாமலே  அப்பறவையின் கழிவானோம்
எல்லாம் தெரிந்தேதான்
மீண்டும் பிறந்தோம்.

No comments:

Post a Comment