இசை உண்டு வாழும் பறவையின்
சாகசம் கைகூடவில்லை
தண்ணீரையும் பாலையும் பிரித்தருந்தும்
சாமர்த்தியம் வசப்படவில்லை
துணையின் பிரிவினைத் தகிக்கமுடியாமல்
சிறு பாறை விழுங்கி விழுந்து சிதறும்
மனோதிடம் வாய்க்கவில்லை
பறந்து அலைந்து திரிந்தாலும்
வளர்ந்த இடம் திரும்பும்
விசுவாசம் நிலையாயில்லை
ஒரு கூண்டில் அடைபட்டு கொஞ்சம் சொற்கள்
கொஞ்சிப் பேசி பழகவில்லை
இருப்பதும் பறப்பதும் வானமென்று தெரிகிறது
எத்தனை முறை எரிந்தாலும்
மீண்டும் எழுந்து பறக்கும்
சாம்பல் சாபம் மட்டும்
அளிக்கப்பட்டிருக்கிறது விமோசனமின்றி.
நன்றி மலைகள் .காம் இணைய இதழ்
No comments:
Post a Comment