Tuesday 17 July 2012

பறவை



இசை உண்டு வாழும் பறவையின்
சாகசம் கைகூடவில்லை
தண்ணீரையும் பாலையும் பிரித்தருந்தும்
சாமர்த்தியம் வசப்படவில்லை
துணையின் பிரிவினைத் தகிக்கமுடியாமல்
சிறு பாறை விழுங்கி விழுந்து சிதறும்
மனோதிடம் வாய்க்கவில்லை
பறந்து அலைந்து திரிந்தாலும்
வளர்ந்த இடம் திரும்பும்
விசுவாசம் நிலையாயில்லை
ஒரு கூண்டில் அடைபட்டு கொஞ்சம் சொற்கள்
கொஞ்சிப் பேசி பழகவில்லை
இருப்பதும் பறப்பதும் வானமென்று தெரிகிறது
எத்தனை முறை எரிந்தாலும்
மீண்டும் எழுந்து பறக்கும்
சாம்பல் சாபம் மட்டும்
அளிக்கப்பட்டிருக்கிறது விமோசனமின்றி. 



நன்றி மலைகள் .காம் இணைய இதழ் 

No comments:

Post a Comment