Wednesday 17 November 2021

பாம்புகளின் கோடை

பாம்புகளின் கோடை மழை முடித்து கோடை துவக்கம் காடுகளில் வாழ்ந்த பாம்புகளெல்லாம் சூடு தாங்காமல் வெளியேறத் துவங்கி விட்டன குளங்களில் நீரில்லை பாம்புகளின் தாகமோ பெரிது அறுவடை இல்லாத வயல்களிலும் நிழலுக்கெனவே வளரும் கருவேல மரங்களையும் வேட்டிவிட்டார்கள் காய்ந்த விறகுக்கென பசிக்கு இரையும் அருந்த நீரும் இணைய துணையும் கிடைக்காத பாம்புகளை கல்லால் அடித்து கொல்கின்றனர் சிறுவர்கள் அப்போதெல்லாம் இப்படியில்லை ஏரிகள் குளங்கள் குட்டைகளென பாம்புகளின் வாழ்க்கை நர்த்தனங்களோடிருந்தது மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் கருகிக் கிடக்கின்றன பாம்பின் சட்டைகள் இப்போது