Tuesday 6 August 2013

பெருந்திணைக்காரன் அழுகிறான்

துஞ்சா மட நெஞ்சே

பெருந்திணையில் பாலையுண்டு..
பெருந்திணைக்கு தூதுமுண்டு..
தூது சென்ற நிலவு
கெடு செய்தி கொண்டு  திரும்பியது.
சாஸ்திரத்தின் இரும்புக் கதவு அடித்துச் சாத்தியதில்
அதற்கு ஆறாத நெற்றிக்காயம்
.
பெருந்திணைக்கும் நினைவுகளுண்டு.
அவற்றைத் தூக்கி அட்டாலியில் எறிந்து விடமுடியாது

 பெருந்திணைக்காரன் அழுகிறான்
 அதில் அசலான கண்ணீரின்
 அதே அளவு  உப்பு.

 துஞ்சா மட நெஞ்சை துயில் அமர்த்த‌
 பாடத் துவங்குகிறான்..
 " இவ் அளவு  இட்டதே  பெரும்பிச்சை.. "
 என்று   தளும்புகிறதப்பாடல்.

- இசை.