Monday 8 July 2019

பால்

கதை





‘‘ நம்மைக் கடந்து செல்லும் பாம்பு என்பது பாம்பாகத்தான் பார்க்கப்படுகிறதே தவிர இது ஆண்பாம்பா பெண்பாம்பா என்றெல்லாம் பார்க்கப்படுவதில்லை. ஆணோ பெண்ணோ எது தீண்டினாலும் மரணம் உறுதி. அதேபோல் ஆணோ பெண்ணோ பாம்புகளில் ரெண்டும் அழகு. பெரும்பாலும் நாம் சினிமாவில் காட்டப்படும் ரப்பர் பாம்பு அல்லது கிராபிக்ஸ் பாம்பைப் பார்த்திருப்போம். அல்லது சர்க்கஸில் பார்வைக்கு வைக்கப்படும் பல் பிடுங்கப்பட்ட பாம்புகளை. அவை அநேகமாக எனக்கு அருவருப்பைத்தான் உண்டு பண்ணியிருக்கின்றன. வயல் வெளிகளில் நீர்க்கரையில் எதேச்சையாக நம் கொல்லைப்புறத்தில் தென்பட்டுவிடும் பாம்புகளை பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு நின்று நிதானித்து ரசித்திருக்கிறாயா...அவ்வளவு அழகு. நம்மைப்போல்’’ அவன் கண்களில் பாம்பின் சிரிப்பு. ‘‘ பாம்பாட்டிகள் சில சமயங்களில் பல் பிடுங்குவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மகுடி நிறமும் பாம்பின் நிறமும் பாம்பு உறங்கும் கூடையின் நிறமும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். மனிதர்களுக்கு ஆணென்ன... பெண்ணென்ன... பாம்பு. அவ்வளவுதான். நம்மைப்போல்’’ பெரிதாகச் சிரித்தான் இவன்.

அவனின் வாயிலிருந்த மதுவைக் கொப்பளித்து இவனின் உதடுகளில் ஒட்டிப் பொருத்தி திறந்த இவனின் வாயினுள் கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டினான். கண்களை மூடி அவன் வாயிலிருந்து தன் நாக்கில் பட்டு இறங்கும் மதுச் சுவையை ரசித்து விழுங்கிய இவன், தொண்டைக்குள் இறங்கிய அவனின் எச்சிலை மதுவிலிருந்து பிரித்து ரசித்தான். அவனுக்குத் தெரியும் இவனின் எச்சிலின் தனித்தன்மை. அது சற்றே சூடாய், வெகு சொற்பமான தருணங்களில் மட்டுமே நுரையுடன் கூடிய எச்சில் இவன் நாக்கில் படும். பெரும்பாலும் அவனின் உதடுகளுக்குள்ளிருந்து நாக்கின் அடியிலும் பற்களிலும் ஈறுகளிலும் நாக்கிலும் என்று இவன்தான் பிசுபிசுப்பான திரவத்தை சேகரித்து விழுங்குவான்.   

 ‘‘ நம்மில் ஆண் யார்? பெண் யார்?’’

‘‘ இது என்ன மிக அபத்தமான கேள்வி.ஆமாம் ஏன் திடீரென்று?’’

 ‘‘ ஒரு கட்டுரையில் படித்தேன். ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் இருந்து புணர முடியாது என்று. அப்படியென்றால் நம்மில் யார் ஆண்? யார் பெண்?’’

‘‘ சிரிப்புதான் வருகிறது. நம்மில் யாருமே பெண்ணில்லை. நீ எனக்கான ஆண். நான் உனக்கான ஆண்.எப்போதாவது உன் வாசனையை நீ உணர்ந்திருக்கிறாயா?’’

‘‘ ம்...பலமுறை’’

‘‘ அனுபவித்து...?’’

‘‘ யெஸ். மிகவும் பிடிக்கும் எனக்கு. அழுக்கைக்கூட நுகர்ந்திருக்கிறேன். குறிப்பாக...’’

‘‘ போதும்... அதேதான். உன் வாசனை உனக்குப் பிடிக்கிறது. உன்னை நீ ரசிக்கிறாய். என் வாசனை எனக்குப் பிடிக்கிறது. என்னை நான் ரசிக்கிறேன். என்னைப் போலவே வாசனை உள்ள உன்னை நான் ரசிக்கிறேன். உன்னைப் போலவே வாசனை உள்ள என்னை நீ ரசிக்கிறாய். அவ்வளவுதான்.’’

இவனின் கக்கத்து முடிகள் மழிக்கப்பட்டு லேசாக வியர்வை தென்படும் தோலில் அவன் உதடுகள் பொருத்தி சப்பிக் கடிக்கும்போதும் அதே கக்கத்தில் ரோமங்கள் நீக்காமல் வியர்வை காய்ந்து வெளிப்படும் அவனின் அப்பட்டமான மணத்தை ஒளித்து வைத்திருக்கும் அவ்விடத்தில் முகம் புதைத்து நாவால் தீண்டி ஈரப்படுத்தி மீண்டும் மீண்டும் நுகர்ந்து ரோமங்களைப் பற்களால் கடித்து இழுத்து...

‘‘ கடவுள் ஆணைப் படைக்கும்போது அலட்சியமாகவும் பெண்ணைப் படைக்கும்போது அதி சிரத்தையாக கவனமாகவும் படைத்திருப்பானோ?’’

‘‘ ஹா ஹ... உனது சந்தேகத்தைத் தீர்க்கும் வழியில் எனது சந்தேகத்தையும் தீர்த்துக்கொள்கிறேன் எப்போதும். எந்த விதத்தில் பெண்ணைவிட ஆண் தாழ்ந்துவிட்டான்?’’

‘‘ குழந்தை பெற்றுக்கொள்ளும் வழியில்...’’

‘‘ ஷிட்...பெண் தானாகவே பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது தெரியுமா...ஒரு ஆண் வேண்டும் அதற்கும்.’’

‘‘ குழந்தையைத் தாங்கும் சக்தியும் பெற்றுக்கொள்ளும் வலிமையும் பெண்ணுக்குத்தானே தந்திருக்கிறான்.’’

‘‘ இதெல்லாம் பழங்கதை. இன்னும் நீ இதையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறாயா...சரி ஆணுக்கு கர்ப்பப்பை தராத கடவுள் எதற்கு மார்பகங்களைத் தந்திருக்கிறான்?’’

‘‘ எதற்கு?’’

‘‘ இதற்குத்தான்’’ என்றபடி அவனுக்கு வலதுபுறம் படுத்திருந்த இவன் ஒரு தாவு தாவி அவனின் மேல் படர்ந்தான். அவனின் இடது மார்பின் மீது தன் மீசையால் லேசாகத் தீண்டினான். தனது நாசியால் மார்பின் மேலும் கீழும் இடதுபுறம் வலதுபுறம் சுவாசித்தவன் மார்புக் காம்பினைத் தனது மேல் கீழ் உதடுகளால் கவ்வி சப்பத் தொடங்கினான்.  குழந்தை பால் குடிப்பதைப் போல் காம்பினை மென்றபடி முழுமையாக அவன் ஒற்றை மார்பை வாயால் சப்பி உறிஞ்சத் தொடங்கினான். அவன் மண்டைக்குள் ஆயிரம் குட்டிப்பாம்புகள் நெளிந்து நெளிந்து நழுவின. இது புதிதில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் அவனுக்குள் இப்படித்தான் நிகழ்கிறது. அவனின் மார்புக் காம்பினை மெல்லக் கடித்து இழுத்த இவன் நிமிர்ந்து இரு கைகளையும் இரு புறமும் ஊன்றியபடி அவன் மூக்கின் மீது தன் மூக்கை வைத்தபடி ‘‘ புரியுதா...எதுக்குன்னு?’’ என்றான்.
 
‘‘ என்ன இது... நீயும் தினமும் இதேபோல்தான் செய்கிறாய். இப்படிச் செய்து செய்து என் மார்பே தளர்ந்து போய்விட்டன. எனக்கொன்றும் பெரிதாய் இதில் ஏதும் தெரியவில்லை. நீ காம்பினைச் சப்பும் நேரம் என்னால் தாங்க முடியாத சந்தோசம் உண்டாகிறது. அவ்வளவுதான்.’’

‘‘ அவ்வளவுதான் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டாய். உன் மார்புக் காம்பிலிருந்து நான் பால் உறிஞ்சுகிறேன். குடிக்கிறேன். அவ்வளவு சந்தோசம் எனக்கு. பால் குடித்த மயக்கத்தில் சிறு ஏப்பம் விட்டுத் தூங்கி விடுகிறேன். நீயோ இதைத் தாங்க முடியாமல் துடிக்கிறாய். நெளிகிறாய். என் முதுகைக் கீறுகிறாய். இறுதியாய் உறிஞ்சி முடித்து உன் மார்புக் காம்பைக் கடிக்கும்போது ஒரு எம்பு எம்பி என்னைக் கடிக்கிறாய். பின்பு நீயும் களைப்பில் தூங்கிவிடுகிறாய். இவ்வளவு சந்தோசம் கிடைக்கிறதே... போதாதா...சரி. நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். எவ்விதத்திலும் உபயோகமற்ற மார்புகளை ஆணுக்குக் கொடுத்ததே இன்னொரு ஆண் அவன் மார்புகளில் உதடுகளால் விளையாடத்தான். பால் ஊறுவதையும் குடிப்பதையும் நான் உணர்கிறேன். உன்னால் உணர முடியவில்லையென்றால் காலப்போக்கில் நீயும் உணர்வாய்’’ அவன் வாயிலிருந்து இவன் வாயை எடுத்துவிட்டு மல்லாந்தான்.

‘‘ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றுவிட்டாய்.’’

‘‘ என்னது?’’

‘‘ பெண் ஆணாய் உணர்வதும் ஆண் பெண்ணாய் உணர்வதும்... அதுதானே இங்கே நடக்கிறது.’’

‘‘ புலம்பாதே. நான் என்னைப்போலவே வாயும் மூக்கும் மார்பும் புட்டமும் குறியும் உள்ள இன்னொருவனுடன்தான் உறவு கொள்கிறேன். இதுபோல் இல்லாத பெண்ணுடன் அல்ல. உணவின் ருசி கனவில் தெரியாது என்பதுபோல்தான் இது. இது வேறு உலகம். வேறு காற்று. வேறு இருள். நீயும் நானும் வாழும் வாழ்க்கை அவ்வளவு எளிதில் எவரும் வாழ முடியாத ஒன்று.’’

‘‘ ஓஹோ... அது எளிதான வாழ்வு இல்லைதான். இங்கே ஆண்பால் உண்டு பெண்பால் உண்டு. இரண்டும் அல்லாத மூன்றாம் பால் உண்டு. நமக்கென்ன பெயர்?’’

‘’ தன்பால் புணர்வாளர்கள்.’’

‘‘ அப்படியென்றால் நீ உன்னையும் நான் என்னையுமா புணர்கிறோம்?’’

‘‘ இல்லையே...’’

‘‘ அப்புறம் எதற்கு அந்தப்பெயர்? தன்னைப்போலவே இருக்கும் இன்னொரு உடலுடன் என்றால் உலகில் நடமாடும் அத்தனை உடல்களுடனா உச்சம் எய்கிறோம். உனக்கு நானும் எனக்கு நீ மட்டுமே வாழும் இவ்வாழ்க்கைக்கு இன்னும் சரியான பெயர் சூட்டப்படவில்லை. இப்படிப் பல ஆண்டுகாலமாக பெயரே இல்லாத ஒன்றுக்காகத்தான் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். நாம் இதை வெளிச் சொல்வதற்குள் எவ்வளவு ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது...எத்தனை பெரிய உயர் அந்தஸ்தை அடைய வேண்டியிருக்கிறது...’’

‘‘ புரியவில்லை.’’

‘‘ இப்போது உன்னால் வீதியின் நடுவில் நின்று என் உடம்புடனான தேடல் இவனுடன்தான் என்று உரக்கச் சொல்ல முடியும். ஏனென்றால் நீ அடைந்திருக்கும் உயரம், பெயர், பதவி, பணத்தின் வெளிச்சம் என்பதன் அர்த்தம் வேறு. வெளித்தெரியாத பல கிராமங்களில் பண வசதி இல்லாத சாதாரண கூலி வேலை செய்யும் ஒருவனுக்கு இந்த இச்சை இருக்காதா என்ன...அவன் இன்னொரு ஆணுடன் முத்தம் பகிர மாட்டானா, அவனுக்குத் தன்னைப் போலவே இருக்கும் இன்னொரு ஆணின் புட்டத்தின் சதையாட்டம் மோகம் தூண்டாதா... எங்காவது கேள்விப்பட்டிருக்கிறாயா? ஒரு கிராமத்திலிருந்து மூன்றாம் பாலினத்தவரோ தன்பால் ஈர்ப்பு கொண்டவரோ வெளிவந்து தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்களா? அப்படி வெளிப்பட்டாக வேண்டுமென்றால் அவர்கள் முதலில் அந்தக் கிராமத்தை விட்டு வெளிவர வேண்டியிருக்கிறது. சிறு வயதில் நான் கிராமத்தில்தான் வளர்ந்தேன். இப்போது போனாலும் அந்தக் கிராமம் சூரியன் மறைந்த பிறகு காட்டும் நிறம் எனக்கு சற்றே பயம் கூட்டக் கூடியதாய்தான் இருக்கும். என்னவென்றே தெரியாமல் வலிக்க வலிக்க என் பின்புறத்துளையில் இறுகிய ஆண் ஒருவன் தன் வலிமையைச் செலுத்தியது கிராமத்தின் பால்யத்தில். கால மாற்றத்தில் என்ன நடந்தது. இப்போது பார்... உனக்காக நான் ஷேவ் செய்து சுத்தமாக வைத்திருக்கிறேன் ரகசியங்கள் கசியும் ஒரு துளையை. எத்தனை முறை என்றாலும் உனக்காக இறுக்கமாகும் ஒரு சொர்க்கத் துளையை.’’

‘‘ இப்படித்தான் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் படிப்படியாக உனக்கு உள்ளுக்குள் ஊற ஆரம்பித்துவிடும். எனக்கு புட்டத்துளையில் புணர்வது குறித்து பெரிதாய் ஆச்சர்யம் எதுவுமில்லை. வேறு வழியில்லாத வழியில் கண்டடையும் வழிதானே அது. ஆனால், குழந்தையாய் இருக்கும்போது அம்மாவும் அப்பாவும் தொட்டுக் கழுவிய அருவருப்பான இடமமில்லையா அது. ஒரு காலகட்டத்துக்குப் பின் அவரவராலே சரியாய் காண முடியாத மறைந்திருக்கும் ரகசியம் அது. அங்குதான் எவ்வித அருவருப்பும் இல்லாமல் உன் மூச்சு படுகிறது. உன் நாவின் நுனியால் அத்துளைக்குள் எதையோ தேடுகிறாய். வெளிச்சம், இருள், ஏன் இந்த உலகம் அறுந்துபோய் பல் கடித்துக் கிடக்கிறேன். உன் பிசுபிசுப்பான எச்சில் ஈரம் துளை சுற்றிலும் படிந்து வழியும்போது எழும் வாசனை என் நாசியையே எட்டி உலுக்குகிறது. அங்கே கண் விழித்துக் கிடக்கும் உன் நாக்கு இரண்டாய் பிளவுற்று என்னை ரெண்டாய் கிழிக்கிறது. நமக்குள் எந்த அருவருப்பும் இல்லாமல் போனதே நம் காதலை அதிகப்படுத்துகிறது. புனிதப்படுத்துகிறது. ஆனால் இச்சமூகம் இது எதையுமே புரிந்துகொள்ளாமல் நம் உடல் கண்டு முகம் சுளிக்கிறது.’’

அவன் சிரித்தான். ‘‘ ஏன் சிரிக்கிறாய்?’’

‘‘ நான் சிரிக்கிறதுக்கு ஒரு காரணம் உண்டு. நாம் யார் என்று தெரிந்தபின்புதான் நம்மை இவ்வுலகம் அருவருப்பாய் பார்க்கிறது. தெரியாதவரை நம் அருகில் அமர்ந்து பயணிக்கிறது. தியேட்டரில் பக்கத்து சீட்டில் அமர்ந்து சினிமா பார்க்கிறது. கடவுளுக்கான பிரார்த்தனையில் வரிசையில் நிற்கிறது. இந்த ஜனத்திரளில் நாமும் ஒன்றுதான்...எல்லாம் தெரியும்வரை. தெரிந்தாலும் ஒன்றும் நிகழப்போவதில்லை. சட்டம் சரியென்று சொல்லப்பட்ட எத்தனையோவற்றை இந்த உலகம் விலக்கி வைக்கவில்லையா... அதுபோல்தான். முன்பு ஒருமுறை கேட்டாய் அல்லவா...பாம்பு என்பது பாம்பாய்தான் பார்க்கப்படுமே தவிர ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. அதுபோல்தான். மனிதர்களில் ஆண் பெண் வித்தியாசம் இருந்தாலும் எல்லோருமே பாம்புதான். நிறைய விஷமுள்ள இரட்டை நாவுள்ள பாம்புகள். சிலருக்கு விஷத்தின் நிறமும் மணமும் சுவையும் மிகப் பிடித்திருக்கிறது. இதைப்போல்.’’

தளும்பி நின்று வழிந்த சுக்கிலத்தை நாவினால் நக்கி சுவைத்து உள்ளிழுத்துக்கொண்டவன் அவனின் விறைப்பை முழுவதுமாய் உள் வாங்கினான். சூடாய் பொங்கி வழிந்த உயிர்ப்பிசுபிசுப்பை உறிஞ்சி விழுங்கினான். இவன் ‘‘ போதும் போதும்’’ என்று முனகிய பின்பும் விடாது உறிஞ்சி விழுங்கியவன் ‘‘ உன் மார்பிலிருந்து வரும் பாலுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது’’ என்றான்.

‘‘ கடைசி வரைக்கும் ஒத்துக்கொள்ள மாட்டாய்’’ என்றான் சின்னச் சிரிப்புடன் இவன்.

‘‘ என்னவென்று?’’ என்றபடி தொடை இடுக்கிலிருந்து நிமிர்ந்தான் அச்சதையினை மென்மையாய் கடித்தபடி அவன்.

‘‘ என் மார்பில் பால் என்று ஏதுமில்லையென்று.’’

இவனின் கையை எடுத்து தன் மார்பின் மீது வைத்து அழுத்தியவாறு ‘‘ புரியும். உனக்கும் உன் உலகத்துக்கும் ஒருநாள்’’ என்றான் அவன்.

‘‘ எப்போது?’’

‘‘ நீயோ நானோ அல்லது எதுவுமே இல்லாமல் போகும்போது.’’

அவன் இறந்து பல வருடங்களுக்குப் பிறகான ஒருநாள் நிசியில் தன் மார்பிலிருந்து பெருகி வழிந்து வீதியெங்கும் பெருக்கெடுத்தோடிய பாலின் பிசுபிசுப்பைப் பார்த்தவாறு தன் இரண்டு கைகளாலும் மார்பினை அழுந்தப் பிடித்தபடி அழுதுகொண்டிருந்தவனின் நிர்வாண அழுக்கின் மீது சோடியம் வேபரின் மஞ்சள் தன் நிறத்தை மாற்ற முடியாமல் தவித்தபடி கிடந்தது.




தூக்கம்

கதை







இரவு 10 மணிக்கு மேல் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. 9 மணிக்கு செட்டிநாடு ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டான். அப்போது கவனமெல்லாம் பரோட்டாவின் மேல் ஊற்றப்பட்ட சால்னாவில் லேசாய் தென்பட்டுக்கொண்டிருந்த கறி வாசனையில் இருந்தது. அதைத் தவிர்த்து பரோட்டா சாப்பிடக் காரணமாயிருந்த ஊருக்குச் சென்றுவிட்ட மனைவி மகன் மீதிருந்தது. இருவரும் இருந்திருந்தால் இந்த பரோட்டா டின்னர் நிகழ்ந்திருக்காது. இவ்வளவுக்கும் இவன்தான் அறிவுரை கூறுவான், பரோட்டா சாப்பிடுவது எத்தனை கெடுதலென்று. ஒரே ஒருநாள் மட்டும் என்று மனைவியும் மகனும் கெஞ்சினாலும் பிடிவாதமாய் மறுத்துவிடுவான். அவர்கள் கண்ணுக்கு அப்போது அவன் எப்படித் தெரிவானென்று நினைத்து சிரித்துக்கொள்வான். அவன் ஏன் சிரிக்கிறான் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் ஒரு ரகசிய ஆசையாய் கல்லில் கிடந்து வெந்துகொண்டிருக்கும் அவனுக்கான பரோட்டா. மனைவியும் மகனும் ஊருக்குச் செல்லும்போது மட்டுமே அந்த பரோட்டா புரட்டிப்போடப்படும். அது ஒரு அபூர்வ நிகழ்வு. அந்த அபூர்வமென்பது இவனுக்கான பரோட்டா தட்டில் வைப்பதை விட அரிதாய் நிகழும் ஒன்று.
நான்கு பரோட்டாக்களை சால்னாவில் முக்கியடித்து உபரியாய் ஒரு ஆஃப் பாயிலுடன் இரவுணவை முடித்தபோதுகூட அவனுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தான். கையில் இருந்த ரிமோட் கூட ஓர் அபூர்வ நிகழ்வுதான். மனைவிக்கு சீரியல், மகனுக்கு ஏதோ ஒரு கார்ட்டூன் சேனல் என்று ஒதுக்கப்பட்டுவிட்டதால் இவன் அதிகம் டிவியைத் தேடுவதில்லை. அதுவுமில்லாமல் ஆபீஸ் முடிந்து இந்நகரத்தின் போக்குவரத்து சிவப்பையும் பச்சையையும் அணைத்து முடித்து வீட்டுக்கு வந்தால் போதும் என்று அலுத்து வருபவனுக்கு இந்தத் தொலைக்காட்சி விருப்பமற்ற ஒன்று. தொலைக்காட்சியில் ஏதோ பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. கறுப்பு வெள்ளை காட்சிகளை வைத்துதான் பழைய படமென்று தீர்மானித்திருந்தான். அப்போதுதான் ஒரு காட்சியாகவோ எழுத்துருவாகவோ அவன் மூளைக்குள் சில நொடிகள் தோன்றி மறைந்தது ஒரு பிம்பம் அல்லது எண்ணம். ’விடியறதுக்குள்ள நாம செத்துடுவோமோ...’ 

ஒரு ஃபிளாஷ் வெளிச்சம் போல் இப்படி ஒன்று அவனுக்குள் தோன்றிய அடுத்த நொடி அவனுக்கு வயிறு வலித்தது. மலம் கழிக்க வேண்டுமெனத் தோன்றியது. மனைவி மகனுக்குத் தெரியாமல் சாப்பிட்ட பரோட்டா மீது பழியைப் போடாமல் வெஸ்டர்ன் டாய்லெட் சென்று அமர்ந்தான். அந்தக் குழப்பமான எண்ணம் அதிகமானது. எதற்கு இப்படித் தோன்றுகிறது என்ற பதற்றத்திலே அவசர அவசரமாய் வெளியே வந்தான். டிவியை அணைத்தான்.  அவனுக்குள் அந்த எண்ணமே மீண்டும் மீண்டும் சுற்றியடித்தது. இப்படி தான் மட்டும் தனியாய் இருக்கும்போது தோன்றிய எண்ணம் எதன் பொருட்டு என்று திரும்பத் திரும்ப நினைத்தான். எதுவும் புரியாமல் தலையை அழுந்தப் பிடித்துக்கொண்டான். படுக்கையில் வந்து படுத்தான். லேசாக மூச்சுத் திணறுவதுபோல் இருந்தது. எழுந்து வந்து மீண்டும் சோபாவில் அமர்ந்தான். அறை லைட் எரிந்துகொண்டிருந்தது. ஹாலிலும் அப்படியே. பாத்ரூம் லைட் ஏற்கெனவே எரிந்துகொண்டுதான் இருந்தது. பாத்ரூம் கதவு மூடியிருந்தது. வீடு முழுவதும் வெளிச்சத்தில் இருக்க அவன் விடிவதற்குள் மரணித்துவிட மாட்டோம் என்று முழுமையாய் நம்பினான். பெயின்ட் தயார் செய்யும் கம்பெனியில் உயர் பதவி. நேரிடையாக பெயின்ட்டுக்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென்றாலும்  பிரமாண்டமான கட்டடத்தையோ மிகப்பெரிய வண்ணமயமான வீட்டையோ கடக்கும்போது இவனுக்குள் புதிதாய் ஒரு வண்ணம் லேசாய் ஒரு தீற்று தீற்றிவிட்டுச் செல்லும்.  புன்னகைத்துக்கொள்வான். மனைவி என்பதற்கு இவனுக்கு சரியான அர்த்தம் தெரியாது. ஆனால் அழகான மனைவியின் கம்பீரம் என்றால் அது  அவன் மனைவிதானென்று உறுதியாய் நம்பினான்.  அவனின் பால்ய நாட்களையெல்லாம் ஞாபகப்படுத்தியபடி வளரும் அவன் மகனின் சிரிப்பு நினைவுக்கு வந்தது. இவர்களையெல்லான் விட்டுவிட்டு அவன் மட்டும் இறந்துபோகிறதுபோல் அத்தனை பலமாய் ஒரு வரி மனதில் உதிர்ந்ததும் தலையை வேகமாய் ஆட்டி அவ்வெண்ணத்தைக் கலைத்தான். இதற்கு மேல் வேகமாய் சுற்றமுடியாது என்றபடி சுற்றிக்கொண்டிருந்த ஃபேனையே கவனித்தவன் அவனது நெற்றி, முகம் எங்கும் படிந்திருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டபடி எழுந்தான். இன்னொரு ஃபேனின் சுவிட்சினைப் போட்டான். 

நிறைந்த சம்பளத்தில் உயர் பதவி, எவ்விதப் பிரச்சினையுமில்லாத குடும்ப வாழ்வு இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அவன் மட்டும் இவ்வளவு சீக்கிரம் இறந்துபோவதை நினைத்து முதலில் பயமாகவும் பிறகு வெறுப்பாகவும் பின் வருத்தமாகவும் இருந்தது. மனவிக்கு போன் செய்து சொன்னால் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்குமென்று நம்பினான். ஊருக்குச் சென்றிருப்பவர்களை ஏன் பயமுறுத்த வேண்டும் என்று உடனே அந்த எண்ணத்தை அழித்தான். தான் அவவளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டோம்...இது ஏதோ ஒருவித பிரச்னை, தற்காலிக பயம் சிறிது நேரத்தில் உடலும் மனதும் இயல்பாகிவிடும் என்று நம்பும்போதே வேறு ஏதோ ஒன்று அவ நம்பிக்கையாய் உள் எழுவதைக் கவனித்தவன் இரண்டு ஃபேன் சுற்றியும் ஏன் இப்படி வியர்க்கிறது என்று குழம்பினான். ஜன்னலைத் திறந்துவைத்தால் கொசு வந்துவிடும் பயமும் இருந்தது அவனுக்கு. கொசு வந்து அவனைத் தூங்கவைக்கப் போவதில்லை, அவனது மரணத்திலிருந்து அவனைக் காப்பாற்றப் போவதுமில்லையென்று அழுத்தமாக ஓர் எண்ணம் வந்தது. அதே நேரம் அபத்தமாகவும் பட்டது அவனுக்கு. நகரத்தில் ஏழை, பணக்காரன், குடிசை, அபார்ட்மென்ட் வித்தியாசமில்லாமல் வாழும் ஒரே உயிரினம் கொசு மட்டும்தானே என்று சம்பந்தமில்லாமல்  அவன் ஞாபகத்தில் வந்துபோனது. நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட உணர்வு  பயமுறுத்தியது. பெட்ரூமில் ஏசி இருக்கிறது. உள்ளே செல்ல சின்னதாய் ஒரு பயம் இருந்தது. இந்த வயதிலேயே இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்த தனக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு மரணம் நிகழ வேண்டும் என்ற கேள்வி மட்டும் மீண்டும் மீண்டும் அவனுக்குள் தன்னை எழுதிக்கொண்டே இருந்தது. எங்கேயோ படித்ததோ யாரோ சொன்னதோ அவனுக்குள் தோன்றி புதிதாய் ஒரு பூட்டு திறக்கும் செயலை நிகழ்த்திக்கொண்டிருந்தது. 

நிறை வாழ்வு வாழ்பவர்கள் மனதில் அவ்வப்போது இதுபோன்ற எண்ணம் தோன்றி மறைவது உளவியல் ரீதியாக சாதாரணமான ஒன்றுதானே என்ற குரல் அவன் காதுக்குள் கேட்ட சமயம் யதேச்சையாக பார்வை கடிகாரத்தின் மீது சென்றது. அவன் இதயத்தில் நொடி முள் மிக மெதுவாய் நகர்ந்து நின்றது. 12. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாய் இதைப்பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறோமா... ச்சே என்ன இது? தான் இறந்துவிடுவதுபோல் எந்தச் சம்பவமோ பேச்சோ கனவோ முந்தைய நாட்களில் எதுவும் நிகழவில்லையோ என்பது வேறு குழப்பமாய் இருந்தது அவனுக்கு. அவனுக்குத் தெரிந்த கடவுள்களை மனதுக்குள் வழிபடத் துவங்கினான். காலையில் சிடியில் கேட்கும் சுப்ரபாதமோ காயத்ரி மந்திரமோ கணபதி அகவலோ இளையராஜாவின் புத்தம் புது காலையோ வரிசைப்படி ஊர்வலம் போயின. சிறுவயதில் ஊரில் இருக்கும்போது கெட்ட கனவு கண்டு நடு ராத்திரி விழித்து கத்தினால் அவன் அம்மாதான் சாமி ரூமிலிருந்து விபூதி எடுத்துவந்து நெற்றியில் பூசிவிடுவாள். அதுபோல் இப்போது செய்தால் தூக்கம் வருமா? நகரத்துக்கு வந்த பிறகு சாமி ரூம் என்று தனியாய் அமைந்த பிறகு பெரிதாய் சாமியெல்லாம் பற்றி யோசிப்பதில்லை. அது சாமியின் அறையாயிற்று. அவ்வளவுதான். விபூதி பற்றிய யோசனையைக் கைவிட்டான். மற்ற எந்த பிளாட்டிலும் எந்தச் சத்தமும் இல்லாமல் இத்தனை அமைதியாக இருக்குமா இந்த இரவு? ஏன் மற்ற பிளாட்டில் எல்லோரும் தூங்கிவிட்டார்களா? 12 மணிக்குள் இந்த நகரம் இப்படியான மெளனத்துக்குள் தனனைப் புதைத்துக் கொள்ளுமா? கேள்விக்குறியின் அளவு அவனுக்குள் பெரிதாகிக்கொண்டே போனது.  அவனது மரணம் குறித்து ஏதோ செய்தி சொல்வதாய் இருந்தது அவனுக்கு அவ்விரவு. அவனுக்குதான் இந்நகரின் நடுமை என்பது எப்படி இருக்குமென்று தெரியாதே. கதவு திறந்து வெளியே சென்று பார்க்கலாமா...வராந்தாவில் நடந்து சென்று இந்த மூன்றாவது மாடி சிட் அவுட்டின் மேலிருந்து இந்நகரத்தின் இரவை உற்று கவனிக்கலாமா... அவன் தொந்தரவில் விழித்துக்கொள்ளும் இந்த இரவாவது அவன் மரணத்தைத் தள்ளிப்போடாதா... ஏதேனும் ஒரு நாயின் குரைப்புச் சத்தம் அவனது இத்தகைய மனநிலையைக் குலைத்துப் போட்டு விடாதா...தலையில் பட்டென்று அடித்துக்கொண்டான். என்ன யோசித்தாலும் அவனுக்கு மீண்டும் மீண்டும் அவனது மரணம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. இப்போது வெளியே சென்று உறங்கிக்கொண்டிருக்கும் மற்றவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டுமா என்ற யோசனையும் அவனுக்குள் ஓடியது. நாளை விடிவதற்குள் அவன் இறந்துவிடுவான் என்று அவர்களிடம் சொன்னால் அவனைப் பைத்தியம் என்று நினைக்க மாட்டார்களா... அது மேலும் அசிங்கமாகிவிடாதா... ஏன் ஒரு சாட்சியை வைத்துக்கொண்டு அவன் இறந்துபோக வேண்டும் என்று சிந்தித்தான். எழுந்தான். 

உறங்காமல் விழித்தபடி இருந்தால் இப்படித்தான் கண்டபடி எண்ணம் ஓடும். படுக்கையறைக்குள் நுழைந்தான். மொபைலை எடுத்து பாடல்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று ஓப்பன் செய்தான். இளையராஜா பாடல்கள். எத்தனையோ பேருக்கு இரவுத் தாயாய் தாலாட்டி தூங்கவைக்கும் இளையராஜா அவனை உறங்கவைத்து அவன் மரணத்தைத் தள்ளி வைக்க மாட்டாரா... சின்னதாய் புன்னகைத்தான். இப்படியெல்லாம் எப்போதும் தான் இல்லையே என்பதை நினைத்து கவலை கொண்டான். இந்த இளையராஜா பாடல்கள் கூட மற்றவர்கள் சொல்லியதுதான் அவனுக்கு. படுப்பதற்கு முன் பாடல்கள் கேட்டால் தூக்கம் வரும் என்றெல்லாம் அவனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும்  தலையாட்டியபடி பாடல்களைத் தேர்வு செய்து மெளனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம் என்ற பாடலை குறைவான சவுண்டில் வைத்தான் எஸ். ஜானகியின் குரல் அறையின் செயற்கை குளிரை மேலும் குளிராக்கியது. லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு படுத்தான். கண்ணை மூடினான். கைக்கெட்டும் தூரத்தில் மொபைலை வைத்துக்கொண்டான். தூக்கம் கண்ணைச் செருகும்போது கவனமாய் மொபைலை அணைக்க அதுதான் வசதியாய் இருக்கும். மெளனமான நேரம் முடிந்தது. அடுத்த பாடல் துவங்கியது. புரண்டு படுத்தான். பாடல்கள் வரிசை கட்டி வந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு பாடலும் அப்பாடல் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்றை அவன் மூளையில்  பழைய ஞாபகங்களின் சாட்சிகளாய்  ஓடவைத்துக்கொண்டிருந்தன. மல்லாந்து படுத்து மார்பின் மீது இரு கைகளையும் வைத்தபடி நீளப் பெருமூச்சு விட்டவன் வினோதமாய் ஏதோ ஒன்று உறுத்த மொபைலை எடுத்துப் பார்த்தான். மணி 2: 30 என்று காட்டியது. லேசாகக் கை நடுங்கியது. எழுந்து உட்கார்ந்து இரண்டு கைகளாலும் தலையை இறுகப் பிடித்துக்கொண்டான். அப்படியென்றால் இரண்டு மணி நேரம் பாட்டு மட்டுமே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறோம். தூங்கவில்லை . தூக்கமும் வரவில்லை. ஆழ்ந்த உறக்கம் என்பதே 12 லிருந்து 3 வரக்கும்தானே...அப்படிப்பட்ட உறக்கத்தைக் காணாமலடித்துவிட்டதை உணர்ந்தான். இனிமேல் உறங்கி என்னாகப்போகிறது. கண்கள் எரிச்சலில் மிதப்பதை வெறுத்தான். இதயத்தின் படபடப்பு அவன் உள்ளங்கையில் தெரிந்தது. மொபைல் எடுக்கும்போது கை நடுங்கியதை கவனித்து அதிர்ந்தான் . எதற்கான அறிகுறி இது? மரணத்தை நோக்கிய பயணத்தில் இருக்கிறானோ. அவ்வளவுதானா எல்லாம்... வாழ்ந்தது போதுமா... அழுகை வந்தது அவனுக்கு. பாட்டை நிறுத்திவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான். 

ஹாலில் லைட் எரிந்துகொண்டிருக்க ஒரு நொடி தயங்கினான். லைட்டையும் ஃபேனையும் அணைக்காமல் சென்றுவிட்டதை அவன் மூளை தாமதமாக உணர்ந்தது. மனம் குழம்பியதுதான் இதற்குக் காரணமா என நினைத்தவன் இல்லை இல்லை இது வேறு விதமானது இப்படி ஒரு ராத்திரி தூங்காவிட்டாலெல்லாம் எவரும் செத்துவிட மாட்டார்கள் என்பதை மனதுக்குள் வலிமையாய் நிறுத்திக்கொள்ள முயன்றான். கூடவே அப்படிச் சாவதில் தான் ஏன் முதல் ஆளாக இருக்கக் கூடாது என்றொரு எண்ணமும் வால் பிடித்தபடி வந்தது. எந்த வியாதியும் இல்லாமல் எத்தனையோ பேர் இறப்பதில்லையா... அதுபோல் இவனும் இறந்துவிடுவானா...அவனுக்குத் தோன்றிய எண்ணம் உண்மைதான். அதுதான் தூக்கம் இல்லாமல் இப்படி வதைக்கிறது. அவன் தன் எண்ணத்தை முழுமையாக நம்பினான். இப்படி நம்பி நம்பித்தான் வாழ்க்கையில் முன்னேறினான். இப்போது சாவிலும்.  இவனது மரணம் என்பது இப்படித் தூங்காமல் விடிய விடிய விழித்திருந்து நடக்கப் போகிறதோ... தனது மரணம் வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டுமென எப்போதோ விரும்பியவன்தான். அது எப்படிப்பட்ட வித்தியாசம் என்பதை இப்போது உணர்ந்தான். ஒருநாள் தூங்காமல் இருந்தால் எதுவும் விபரீதமாய் நடந்துவிடப் போவதில்லை என்று உள் மனம் நம்பியது. அதே ஆழ்மனத்தில் உருவான விடிவதற்குள் தான் செத்துவிடுவோம் என்ற எண்ணம்தான் இப்படிப் பாடாய்படுத்துகிறது என்பதையும் அறிந்தான். இப்படி இருப்பது நோயா, மூளையில் நிகழும் ரசவாதமா என கூகுளில் தேடலாமா என்று யோசித்தான். மூன்று மணிக்கு மேல் எதற்கு தேவையில்லாமல் நெட்டை ஆன் செய்ய வேண்டும் என வேண்டாமென்று தீர்மானித்தான். மணி மூன்றுதானா என்பதை உறுதி செய்துகொள்ள கடிகாரத்தைப் பார்த்தான். 3: 51 என்று நியான் பச்சை ஒளிர்ந்தது. இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடுமோ... வாக்கிங் கிளம்பிப் போகலாமா என்று நினைத்தான். வீட்டுக்குள்ளே இருப்பதனால் இப்படியெல்லாம் மோசமான எண்ணம் வந்து தூங்காமல் படுத்துகிறதோ என்று யோசித்தவன் அப்படியே சோபாவில் சாய்ந்தான். 

தலையை வலிப்பது போல் இருக்க அடிவயிறு கனத்திருந்தது. எரிந்துகொண்டிருந்த லைட்டை அணைத்து விடலாமென எழுந்தவன் டாய்லெட் சென்று சிறுநீர் கழித்து வந்தான். பசித்தது. ஃப்ரிட்ஜைத் திறந்து பார்த்தான். ப்ரெட்டும்  ஜாமும் இருந்தது. எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்துக்கொண்டு  டைனிங் டேபிளில் அமர்ந்தான். இப்படி யாராவது விடியவிடிய தூங்காமல் விழித்திருந்து 4 மணிக்கு ப்ரெட் சாப்பிடுவார்களா...ப்ரெட்டை பிட்டு ஜாமில் தோய்த்து வாயில் திணித்தவனின் யோசனை அப்படியே ஒரு நொடி நின்றது. ஒருவேளை திடீரென மரணிப்பவர்களுக்கு இப்படித்தான் சம்பந்தமில்லாமல் பசிக்குமா? மூளையைப் பிறாண்டிய கேள்விகளுடன் சாப்பிட்டு முடித்தான். உடலில் புத்துணர்ச்சி கூடியது போல் இருந்தது. வாஷ் பேசின் சென்று கை கழுவியவன் டவலில் கை துடைத்தபடி ஜன்னல் கண்ணாடி பார்த்து புருவங்கள் சுருக்கினான். சாம்பல் நிறத்தில் இருந்தது ஜன்னல். லேசாக நீர் படிந்திருந்தது. ஒரு நீரின் ஆரம்பம் கண்ணாடி மேலிருந்து வழிந்ததைக் கவனித்தான். விடிந்தே விட்டதா... வாக்கிங் போகலாம் என ஆவல் எழுந்ததை ஆச்சர்யமாய் கவனித்தவன் தூங்காமல் வாக்கிங் போனால் எதுவும் ஆகிவிடாதாவென கேள்வி தொக்கி நிற்க வேண்டாமெனத் தீர்மானித்தான். போகிற உயிர் இந்த வீட்டிலேயே போகட்டும். ஆமாம் அப்படியே இப்போது இறந்துவிட்டாலும் மற்றவர்களுக்கு எப்படி தெரியப்படுத்துவது? இதென்ன மடத்தனமான யோசனையாய் உள்ளது. தலையின் பின்புறம் தட்டிக்கொண்டான். எல்லோரும் தாங்கள் இறந்ததைத் தாங்களேவா தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பெரும் குழப்பமாய் இருந்தது அவனுக்கு. ஒன்று மட்டும் முடிவெடுத்தான். கதவைத் திறந்துவைத்துவிட்டு இறந்துபோய் விடலாம். அனாவசியமாய் ஏன் கதவை உடைத்துக்கொண்டு மற்றவர்கள் உள்ளே வர வேண்டும். பிணவாடை வெளியே தெரிந்து யாராவது வந்து கதவை உடைக்க வேண்டியதில்லை. அந்தச் சிரமத்தை ஏன் அவர்களுக்குத் தர வேண்டும் என்று வாய்விட்டு மெதுவாய் முனகினான். உடல், மன அளவில் மிகத் தளர்ந்திருந்தான். சிறிது நேரத்துக்கு முன்பிருந்த உற்சாகம் எங்கே என ஆச்சர்யப்பட்டான். எழுந்தான். லேசாகத் தள்ளாடியவன் கதவைத் திறப்பதற்காக அதன் உட்புற லாக்கில் கை வைத்தான். கதவு திறந்தே இருந்தது.




Wednesday 19 June 2019

எனது திருவிளையாடலில் இதுவும் ஒன்று





எனது திருவிளையாடலில் இதுவும் ஒன்று- கதை 






சிவகுமார்தான் இந்தக் கதையின் நாயகன். கதைநாயகன் சிவகுமார் என்பதாலே சிவகுமாரின் அப்பா யார், அவர் என்ன வேலை பார்க்கிறார் என்பதெல்லாம் தேவையற்ற தகவல். அதுபோல் சிவகுமாரின் அம்மா யார், ஹவுஸ் ஒய்ஃபா, வேலைக்குப் போகிறாரா என்பதும் அநாவசியம். நாம் சிவகுமாரின் கதையை மட்டும் பார்ப்போம். தொட்டில் பழக்கம் சுடுகாடு முற்றும் என்பார்கள். ஆனால், சிவகுமாருக்கோ தொட்டிலுக்கு முன்பே தொற்றிக்கொண்டுவிட்டது ஒரு பழக்கம். தொட்டில் பழக்கமே சுடுகாடு வரை என்றால் அதற்கு முன்பான பழக்கம், சுடு
காட்டையும் தாண்டித்தானே. ஆரம்பத்திலேயே சுடுகாடு என்று அமங்கலமாய் எதற்கு. நாம் மங்கலமாய் சிவகுமார் பிறப்புக்குச் செல்வோம். நார்மல் டெலிவரியில்தான் சிவகுமாரைப் பெற்றெடுத்தாள் சிவகுமாரின் தாய் ரஞ்சிதம். இந்த இடத்தில் சிவகுமாரின் அம்மா பெயரைச் சொல்லாமல் இருக்க முடியாதல்லவா. ரஞ்சிதம் பெயருக்கேற்றார் போல் அழகி. சிவகுமார் பிறந்ததும் அவனை மடியில் ஏந்தி பால் கொடுத்தாள் உதடு கடித்து. மார்புக் காம்பில் குழந்தையின் உதடு பட்டதும் பால் பெருகிட எழுந்த உணர்வில் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். புதிதாய் பிறந்த சிசுவோ கை காலை உதறிக்கொண்டுதான் பால் குடித்தது. அது இயல்பான ஒன்றுதானே. நம் சிவகுமாரோ அவ்வாறு கை காலை உதறிப் பால் குடிக்கும்போது ரஞ்சிதத்தின் மார்பின் மீது வேகமாய் பட்டுத் திரும்பியது அவன் கை. அப்படிக் கை பட்டதும் சிவகுமார் வாய்க்குள் பால் அதிகமாய் பீய்ச்சப்பட்டதுபோல் உணர்ந்தான். பூமிக்கு வந்த சில நிமிடங்களில் இச்செயல் நிகழ்ந்ததால் அத்தனை புதிதான மூளையில் அச்சாய் பதிந்துபோனது. தானாகவே பால் பெருக்கெடுத்து சிவகுமாரின் தொண்டையை நிறைக்க எமப்பசியிலிருந்த சிவகுமாருக்கோ தன் கை மோதியதில்தான் பால் அதிகமானது என்ற நம்பிக்கை உண்டானது. பசு மரத்தாணியல்லவா. பச்சக்கென்று பதிந்துபோனது. பின்பு எப்போது பால் குடித்தாலும் சிவகுமாரின் கை ரஞ்சிதத்தின் மார்புமீது மோதித் திரும்பும். சிவகுமார் 9 மாதக் குழந்தையாய் இருந்தபோது சிவகுமாரின் சித்திக்குக் கல்யாணம். அதாவது ரஞ்சிதத்தின் தங்கை. உங்களுக்குப் பிடித்த பெயரை அந்தச் சித்திக்கு வைத்துக்கொள்ளலாம். ஆமாம்... இதற்குப்பின் அவர் வர மாட்டார். காலையில் கல்யாண டிபன். இலையே தெரியாத அளவுக்கு 5 ஸ்வீட், 6 காரம், இட்லி, பூரி, பொங்கல் என்று ஏகப்பட்ட அணிவரிசை. டிபன் பிரமாதம் என்று மண்டபம் முழுவதும் பேச்சு, ஒலித்துக்கொண்டிருந்த நாயனச் சத்தத்தை மீறிக் கேட்டது. ரஞ்சிதம் தன் மடியில் சிவகுமாரை வைத்துக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள். டைனிங் டேபிளில் பேப்பர் விரித்து அதன் மேல் இலை போட்டு அதன்மீது காலை விருந்து. மைசூர் பாக்கு, நெய் கேசரி என்று ரஞ்சிதத்துக்குப் பிடித்த அய்ட்டம்ஸ். குட்டியோண்டு வாட்டர் பாட்டில் இலைக்குப் பக்கத்தில் வைத்திருந்தார்கள். ரஞ்சிதம்தான் அதைத் திறந்துவைக்கச் சொல்லி டிபன் பரிமாறுபவரிடம் சொன்னாள். அவரும் திறந்து இலைக்குப் பக்கத்தில் வைக்க மடியில் அமர்ந்து துள்ளிக்கொண்டு இருந்தான் சிவகுமார். ரஞ்சிதம் ஆசையாய் மைசூர்பாக்கில் கை வைத்த நேரம் ஒரு துள்ளு துள்ளிய சிவகுமாரின் கை அந்த வாட்டர் பாட்டிலைத் தட்டிவிட்டது. தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக பாட்டிலின் மூடியை பாட்டிலின் மேலே மூடியதுபோல் வைத்துவிட்டுச் சென்றிருந்தார் அந்த நல்ல மனிதர். பாட்டில் அப்படியே இலையில் சாய்ந்து அதனுள்ளே இருந்த தண்ணீரெல்லாம் இனிப்பு, காரம், புளிப்பு வித்தியாசம் பார்க்காமல் இலை முழுவதும் நனைத்து ஓடி சாம்பார், சட்னி, பூரிக்கிழங்கு எல்லாம் ஒன்றாய் கலந்து ஒரே நிறக்கரைசலாய் மாறி வழிந்து ரஞ்சிதத்தின் புது பட்டுப்புடவையின் முழங்கால் பகுதியை நனைத்தது. சுவிட்ச் போட்டதுபோல் நின்றுபோனது ரஞ்சிதத்தின் பசி. 


சிவகுமார் வளர்ந்தான். அதற்குமுன் தவழ்ந்தான். மண்டி போட்டபடி வீடெங்கும் ஓடி கைக்கெட்டும் பொருள்களையெல்லாம் தட்டிவிட்டுக்கொண்டிருந்தான். அந்தப் பொருள்கள் நிலத்தில் சாயும்போதோ சாய்ந்து உடைந்து நொறுங்கிச் சிதறும்போதோ அதைக் கண்ணுறும் சிவகுமாருக்குத்  தாளமுடியாத உற்சாகம் ஏற்பட்டது. பொக்கை வாயில் நீர் வடிய `ஹெக்ஹெக் ஹெக் ஹெக்' என்று சிரித்தான். பிள்ளை அழகாய் சிரிக்கிறான் என்பதற்காக சிவகுமாரின் அப்பா பரமானந்தம் எத்தனையோ பீங்கான், பிளாஸ்டிக் பொருள்களை வாங்கி வீடெங்கும் அடுக்குவார். விளையாடுவதற்கு பொம்மை வாங்கித் தராமல் தரையில் தட்டிவிட்டு உடைப்பதற்காகவே பொருள்கள் வாங்கித் தந்தார் பரமானந்தம். பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்க்கும் பரமானந்தம், தான் கையூட்டாய் பெறும் பணத்தையெல்லாம் பிள்ளை உடைத்து வீணாக்குகிறானே என்று கவலைப்படாமல் மேலும் மேலும் அதிகமாகக் கையூட்டு பெற்றார். சிவகுமாரின் குறும்புத்தனம் தாள முடியாமல் இரண்டரை வயதிலேயே பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார். ப்ரீகேஜியில் ஏதும் விபரீதம் நிகழவில்லை; ஒரே ஒருமுறை டீச்சரின் மூக்குக் கண்ணாடியை டேபிள் மீதிருந்து தட்டிவிட்டு உடைத்ததைத் தவிர. எல்கேஜியில் சிவகுமாரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள் நித்யா. நித்யாவுக்கு அவள் பெற்றோர்கள் ஏன் அந்தப் பெயரை வைத்தார்கள் என்றால்... வேண்டாம் இந்தத் தகவல் சிவகுமாருக்கு மட்டுமல்ல; இந்தக் கதைக்கும் எவ்விதத்திலும் உதவப் போவதில்லை. அந்த நித்யா பூஞ்சை உடம்பு. பயந்தாங்கொள்ளி. குண்டாய் கொழுகொழுவென்றிருந்த சிவகுமாருக்கோ நித்யாவைப் பார்த்ததுமே பிடித்துப் போயிற்று. அய்யய்யோ... இது அந்தப் பிடித்துப்போயிற்று இல்லை. தான் விளையாட தட்டி உடைக்கும் ஒரு பொருளைப்போலவே நித்யாவைப் பார்த்தான் சிவகுமார். 

மிஸ் கேட்ட கேள்விக்கு எழுந்து நின்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு சமர்த்தாய் சரியான பதில் சொன்ன நித்யாவை சற்றே எம்பி தன் கைகளால் முதுகில் தட்டினான். அது சபாஷ் என்பதற்கான தட்டலில்லை. சிவகுமாரின் முதுகுத் தட்டலையெல்லாம் தாங்கிக்கொண்டு எதிர்வினை காட்ட நித்யா ஒன்றும் பரமானந்தம் சமீபத்தில் வாங்கித் தந்த ரப்பர் பொம்மை இல்லையே. அப்படியே தரையில் பொத்தென்று உட்கார்ந்த நித்யா , பயத்தில் உள்ளாடையிலே ஆய் போய்விட்டாள். சிவகுமாருக்கோ சிரிப்புத் தாள முடியவில்லை. பயத்தில் ஆய் போன நித்யாவை ஆயாம்மாதான் கழுவிவிட்டார். வகுப்பை சுத்தம் செய்து பினாயிலும் டெட்டாலும் கலந்து ஊற்றிக் கழுவி அறை காய்ந்ததும் வகுப்பின் உள்ளே நுழைந்தார்கள், அதுவரை பள்ளி மைதானத்தில் அமர்ந்திருந்த மாணவர்களும் டீச்சரும். நித்யா அழுதுகொண்டேயிருந்தாள். மறுநாள் காலை சிவகுமாரைப் பள்ளியில் விட வந்திருந்த ரஞ்சிதத்திடம் அந்த டீச்சர் ஏதோ இரண்டு ரயில்கள் ஒன்றையொன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதைப் பார்த்த வியப்பைக் கதையாய் சொல்வதுபோல் சிவகுமார் தட்டிவிட்டு  நித்யா ஆய்போன கதையைக் கை, கால், மெய், பொய், ஆய் சேர்த்து விலாவாரியாகச் சொன்னார். இறுதியாய், '' உங்க பையனைக் கொஞ்சம் கண்டிச்சி வைங்க மேம். ரொம்ப வாலா இருக்கான்'' என்றார். மாலை பள்ளி முடிந்து சிவகுமார் வீட்டுக்குத் திரும்பியதும் அவனை வேகமாய் இழுத்து தன் மார்போடு  அணைத்துக்கொண்டு ரஞ்சிதம் அவன் காதில் '' அப்பிடியெல்லாம் செய்யக் கூடாது செல்லம். அப்புறம் உன்னை எல்லாரும் பேட் பாய்னு சொல்வாங்க'' என்றாள் கொஞ்சலாய். சிவகுமார் அவள் மார்பில் ஓங்கி அடித்துவிட்டு சிரித்துக்கொண்டே அந்த அறையெங்கும் ஓடினான். அவன் ஓடும் அழகைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் ரஞ்சிதம். பத்தாம் வகுப்பு படிக்கும்போதெல்லாம் சிவகுமார் பள்ளி கிரிக்கெட்டில் சாம்பியனாகிவிட்டான். சட்டென்று கதை எல்கேஜியிலிருந்து பப்ளிக் எக்சாமுக்குத் தாவியதை எரிச்சலாய் கவனிக்கிறீர்களா... அபியும் நானும் படத்தில் மட்டும் ஓர் அறைக்குள் செல்லும் சிறுகுழந்தை அந்த அறையை விட்டு வெளிவரும்போது வளர்ந்து பெரிய த்ரிஷாவாகி உங்களைப் பார்த்துச் சிரிப்பதை எத்தனை கைத்தட்டலுடன் ரசித்தீர்கள். அதுபோல் சிவகுமாருக்கும் அவன் வீட்டில் அப்படியோர் அறை உண்டு. 

படிப்பில் சுமார்தான் என்றாலும் கிரிக்கெட்டில் ஜித்தனாக இருந்தான் சிவகுமார். எப்படிப் பந்து போட்டாலும் பேட்டால் ஜஸ்ட் லைக் தட் தட்டிவிட்டு பந்தை பவுண்டரிக்கு அனுப்புவான். மேட்ச் ஜெயிப்பதற்கான சமயங்களில் பந்தைத் தட்டிவிட்டே சிங்கிள் ரன்னாக எடுத்து மேட்ச்சை வின் பண்ணி விடுவான். தட்டி விடுவதென்றால் சிவகுமாருக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது உங்களுக்கே தெரியும்தானே. சிக்ஸர், பவுண்டரி சில சிங்கிள்களுக்குப் பின் கல்லூரியில் நுழைந்தான் சிவகுமார். கல்லூரியில்தான் சிவகுமார், ப்ரேமைச் சந்தித்தான். திவாகரைச் சந்தித்தான். நித்தீஷை சந்தித்தான். எல்லோரையும் தனித்தனியாக சந்தித்தான். அதனால்தான் இப்படி. பின்புதான் தெரிந்தது நால்வரும் ஒரே வகுப்பென்று. இதில் திவாகர் மட்டும் சென்னை. மற்ற மூவரும் வெளியூரிலிருந்து சென்னைக்குப் படிக்க வந்தவர்கள். இவர்கள் நால்வருக்கும் இன்னோர் ஒற்றுமை.  சிவகுமாரின் அப்பா சிவகுமார் பிறப்பதற்கு முன்பே லஞ்சம் வாங்கத் தொடங்கியவர். இப்போது அதிகமாய் வாங்குகிறாரே தவிர குறையவில்லை. அதுபோல் நால்வரின் அப்பாக்களும் லஞ்சம் வாங்குபவர்கள்தான். தனித்தனியாகத்தான் வாங்குகிறார்கள். என்ன ஒன்று இந்த ஒற்றுமை நால்வருக்கும் தெரியாது. கதையை வாசிக்கும் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். பார்ட்டி கலாசாரத்தைத் தொடங்கி வைத்தது ப்ரேம்தான். இந்தப் பெயர் வைத்தாலே இப்படித்தான் போலும்.

'' சிவா... நாளைக்கு ப்ரியாகிட்ட என் லவ்வ ப்ரொபோஸ் பண்ணப் போறேன். நைட்டு ட்ரீட் வந்துடு'' என்பான். '' நித்தி... ப்ரியா லவ்வு ப்ரேக் அப் ஆகிடுச்சிடா. நைட் ட்ரீட் வந்துடுறியா'' என்பான். இவர்கள் நால்வரும் மாறி மாறி பார்ட்டி கொடுத்துக்கொள்ள இப்படி ஏதாவது ஒரு காரணமிருந்தது. அதற்கான முதலீடு பாக்கெட்டில் எந்நேரமும் கையூட்டாக வந்துகொண்டேயிருந்தது. சிவகுமாரின் தொட்டிலுக்கு முந்தைய பழக்கத்தை விட்டுவிட்டு கதை திசை மாறுகிறது என்று நினைக்கிறேன். காலேஜ் என்று வந்துவிட்டாலே இப்படித்தான் பலவும் மாறும். ஒவ்வொரு முறை பார்ட்டியின் போதும் சிவகுமார் ஒரு நல்ல காரியம் செய்வான். அதை அவன் வெகு இயல்பாகத்தான் நிகழ்த்துவான். ஆனால் அது அவனையும் மீறி நிகழும் ஒன்று. இரண்டு முறை தாண்டியபிறகு மூன்றாவது முறைக்காக ஊற்றி வைத்திருக்கும் டிஸ்போசபிள் டம்ளரை சிவகுமாரின் கை தட்டிவிடும். இது அவனுக்காக ஊற்றி வைக்கப்பட்டிருக்கும் சரக்காய் இருந்தாலும்கூட. இதற்காக சிவகுமார் மெனக்கெட மாட்டான். தன் நாற்காலியிலிருந்து சற்றே நிமிர்ந்து எதிர்புறம் இருக்கும் சிக்கன் சுக்காவையோ மட்டன் லிவர் ஃப்ரையையோ எடுக்கிறேன் பேர்வழி என்று அவன் கை நீளும்போது இங்கே டம்ளர் தட்டிவிடப்படும். ஆரம்பத்தில் யாரும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒருமுறை பாதி பீருடன் பாட்டில் கவிழ்ந்தபோதுதான் இது சிவகுமாருக்கு உரித்தான பழக்க வழக்கமா, வியாதியா என்று கன்ஃபியூஸ் ஆனார்கள். அதன் பின்புதான் அவர்கள் பீர் என்றாலும் டம்ளரில் ஊற்றி வைத்து நுரை முழுவதும் அடங்கியபிறகு குடிக்கத் தொடங்கினார்கள். 

 ஒருமுறை '' இவன் என்னடா...சிகரெட் சாம்பல தட்டிவிடுற மாதிரி எதையாவது தட்டி விட்டுக்கிட்டே இருக்கான். டேய் சிவா... நீ நல்லவன்டா. இப்பிடில்லாம் பண்ணாதடா'' என்றான் திவாகர் காதுவழியே புகை விட்டவாறு முக்கால் போதையில். அப்போது அவன் சரக்கு கவிழ்க்கப்பட்டிருந்தது. ஒரு அக்டோபர் ஆரம்பத்தில் திவாகரின் அப்பாவும் அம்மாவும் ஊருக்குச் செல்ல ஒரே பிள்ளையான திவாகர் தனித்துவிடப்பட்டான். ரிஸ்க் இல்லாத லைஃப் வேஸ்ட்டுடா என்று ஜெயம் ரவி சொன்ன சினிமாவை அப்போதுதான் கே டிவியில் பார்த்திருந்தபடியால் அவனும் ரிஸ்க் எடுக்கத் துணிந்தான். ஒரு ஃபுல் ரம் வாங்கிவைத்துவிட்டு மூவருக்கும் மெசேஜ் அனுப்பினான். மெசேஜ் போய்ச்சேருமுன்னரே திவாகரின் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள் மூவரும். '' எப்பிடிடா?'' என்று மூக்கின் மேல் குந்த வைத்திருந்த திவாகரின் ஆச்சர்யத்தை சிறு ஸ்மைலியில் கடந்தனர். ஹாலில் டைனிங் டேபிள் இழுத்துப்போட்டு சிப்ஸ் பாக்கெட்டும் கிங்ஸ் பாக்கெட்டும் பிரித்து வைக்கப்பட்டன. வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்த ஃப்ரூட் சாலட்டும், கடையிலிருந்து ப்ரேம் வாங்கி வந்திருந்த சிக்கன் பகோடாவும் கலர்ஃபுல்லாக பரப்பி வைக்கப்பட , பாட்டில் திறக்கப்பட்டது. டம்ளரில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த சரக்கை வான் நோக்கி உயர்த்தி '' காலேஜுக்கு லீவு விட்ட காந்தி மகாத்மா வாழ்க. ச்சியர்ஸ்'' என்றபடி உதட்டில் வைத்து உறிஞ்சினர் நால்வரும். கடைசிச் சொட்டுவரை அருந்திவிட்டு டம்ளரைக் கீழே வைக்கும்போது சிவகுமார் அந்த ரம் பாட்டிலைத் தட்டிவிட்டான். முக்கால் பாட்டில் ரம்மும் ஸ்லோமோஷனில் சரிந்தது. அத்தனை சைடுடிஷ், சிகரெட் பாக்கெட் என எல்லாவற்றையும் நனைத்தவாறு டேபிள் முழுவதும் ஓடி விளையாடிய ரம் வழிந்து மொசைக் தரையில் ஓடியது நிதானமாக. சிவகுமார் கன்னத்தில் அறைந்தான் திவாகர். ப்ரேம் '' இன்னிக்கு கடையும் கெடையாதுடா'' என்றான் தான் வாங்கி வந்திருந்த சிக்கன் பகோடா ரம்மில் மூழ்கி தத்தளிப்பதைக் கண்கலங்க பார்த்தவாறு. சிவகுமாரே அதை எதிர்பார்க்கவில்லை. அவன் எதிர்பாராததும் அவ்வப்போது அவன் வாழ்வில் நிகழ்வதுதான். அவன்தான் அதைக் கவனிக்கத் தவறியிருந்தான். நேற்றுதான் ப்ரியா அவன் காதலை ஏற்றுக்கொண்டிருந்தாள். அந்தச் சந்தோசத்தை இரண்டாவது ரவுண்டில் சொல்லலாமெனத் தீர்மானித்திருந்தவனுக்கு முதல் ரவுண்டே முடிவு ரவுண்டானது அதிர்ச்சியாகத்தானிருந்தது. திவாகர் டஸ்ட் பின் எடுத்து வந்து எல்லாவற்றையும் அள்ளி அதில் போட்டான். ரம் பாட்டிலை எடுத்துக் கவிழ்த்துப் பார்த்ததில் இரன்டு தேக்கரண்டி மிச்ச ரம்மும் அதே டேபிளில் ஊற்றியது. பாட்டிலையும் டஸ்ட் பின்னில் போட்டான். யாரிடமும் எதுவும் பேசாமல் டேபிளைத் துடைக்கத் தொடங்கினான். ஒரு பக்கெட் தண்னீரில் பாதி பினாயிலும் முழு டெட்டாலும் ஊற்றிக் கலந்து வீடு சுத்தம் செய்யும் மாப்பினை அதில் நனைத்து டேபிளிலிருந்து ஹால் முழுவதும் துடைத்தான். ஃபேனைத் தட்டிவிட... மன்னிக்கவும் ஃபேன் சுவிட்சைப் போட ஈரத்தரை காயத்தொடங்கியது. '' ஸாரிடா'' என்றான் சிவகுமார். '' பரவால்ல... விடு'' என்றான் ப்ரேம். ப்ரியா இத்தனை நாளும் ஃபேஸ்புக்கில் தன்னை அன்ஃபாலோ செய்திருந்ததாகவும் நேற்றுதான் அதை ரிமூவ் செய்ததாகவும் அத்துடன் இல்லாது தனது போன வருட பதிவிலிருந்து சமீபத்திய ப்ரொஃபைல் வரைக்கும் ஹார்ட்டீன் சிம்பல் போட்டு அவளின் காதலைத் தெரிவித்ததாகவும் கிடைத்த கேப்பில் மெதுவாகச் சொன்னான் சிவகுமார். அதிர்ச்சியான ப்ரேம் '' கடைசில... கடைசில..'' என்றான். அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை. வெம்பி வழிந்தது கண்ணீர். '' இவன் நம்மகூட இருந்தா எதையாவது தட்டி விட்டுட்டுதான் இருப்பான். மொதல்ல இவனைக் கழற்றி விடணும்டா'' என்றான் திவாகர் ஆத்திரமாய். அவனின் கோப மூச்சில் பினாயிலும் டெட்டாலும் சரி விகிதத்தில் கலந்திருந்தன.  காலிங்பெல் அடித்தது.



         


சாப்ளின்

சாப்ளின்- ஞாபகப் பகிர்தல்






எல்லோருக்கும் பிடிப்பதைப் போலவே சாப்ளினுக்கும் மழை பிடிக்கும். எல்லோருக்கும் பிடிப்பதற்கான காரணம் சாப்ளினுக்கானதில்லை.

மெளன சினிமா காலத்தில் நடித்து எல்லோரையும் பேச வைத்தவர். பேசும் படங்கள் வந்தபின்னரோ  நடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொண்டார். அப்படி நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த ’தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் முதல் காட்சியிலே அதற்கான காரணம் பூடகமாகத் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். போரின் உக்கிரமான காட்சிப்படுத்தலில் படம் துவங்கியிருக்கும். சாப்ளினோ சத்தம் பொறுக்காமல் களத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பார். நிரந்தர சோகம் உறைந்த முகம் சாப்ளினுடையது. அந்த முகத்தால்தான் இந்த உலகைக் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தார்.  பால்யத்தின் வறுமையுடன்  போராடிக்கொண்டிருந்த சாப்ளினுக்கு நோய்மைக்குத் தன்னை ஒப்புவித்த அம்மாவையும் தன்னுடன் காப்பாற்றி வாழ்தல் என்பது சவால் நிரம்பியதாய் இருந்தது. எல்லோருக்குமான மாற்று என்பதே அவருக்கு பின்னாளில் வாழ்க்கையாகிப் போனது. தனது துயரங்களையெல்லாம் ஒளித்து வைக்கும் முகமூடியாய் நகைச்சுவையைப் பயன்படுத்தினார். தவறாய் பிரதிபலிக்காத கண்ணாடியே அவரின் ஆத்ம நண்பனாய் மாறிப்போனது அப்படித்தான். கையெறி குண்டினை தவறுதலாக தன் ஆடைக்குள் போட்டுவிட்டுத் தவிக்கும் சாப்ளின் அவரது வாழ்வின் ஏன்... ஒட்டுமொத்த உலகின் போக்கையே அந்த ஒரு காட்சியில் விளக்கிப் போனார். மனநலம் பிறழ்ந்த தன் அம்மாவின் முன்பு இந்த வாழ்க்கையை எள்ளி நகையாட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. தனது படங்களிலும் மேற்கோள்களிலும்  சாப்ளின் பேசியதெல்லாம் தான் விரும்பி ஏற்றுக்கொண்ட கோமாளி வேடத்தின் பிரதியே. இந்த சமூகத்தை ஒரு கேளிக்கை கூடமாகப் பார்த்த ஒருவரால்தான் ஒரு சர்வாதிகாரியையே சர்வ அலட்சியமாக கேலி செய்ய முடியும்.   மெளனப் பட காலத்தில் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் கதாபாத்திரங்களிலே தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்த சாப்ளின் ஓர் அற்புத நடிகர் என்பதை தி கிரேட் டிக்டேட்டர் படத்தின் க்ளைமாக்ஸ் உணர்த்தும். பெரிதான சலனங்கள் எதையும் வெளிக்காட்டாமல் மிகப்பிரமாதமான உரையை உணர்வுபொங்க ஆற்றியிருப்பார். எல்லா ஆட்சியாளர்களுக்கும் என்றைக்கும் பாலபாடமான ஒரு காட்சியது.  தன் கலைக்கு நிஜமாயிருக்கும் பட்சத்திலே அக்கலைஞனால் நாட்டின் அவலத்தை தைரியமாகக் காட்சிப்படுத்த முடிந்தது. அவரது சினிமாக்களில் காதலோ, உற்சாகமோ ஏன் துயரத்திலும் மெல்லியதாய் நகைச்சுவை இழையோடத்தான் செய்யும். இந்த உலகம் அவருக்கு என்ன தந்ததோ அதை முழுமையாய் ஏற்றுக்கொண்டு அதேசமயம் தன்னளவில் அதை மாற்றியும் தனக்கு வேண்டிய ஒன்றாக வழங்கினார் சாப்ளின். 




நீரின்றி அணைந்த உலகு

நீரின்றி அணைந்த உலகு- கட்டுரை




நீர் உயர வரப்புயரும் என்பது முதுமொழி. வயல்களே அற்ற நிலவெளியில் வரப்பெங்கே? நீரின்றி வெடிப்புற்ற நிலங்களை அழித்து முளைத்த கட்டடங்கள் முன்பொரு காலத்தில் என்று ஆரம்பித்து எழுதும் கட்டுரைகளுக்கு காரணமாகிவிட்டன. ஆனைகட்டி போரடித்த காலம் என்பதெல்லாம் புராணப்படங்களில் இடம்பெறும் ஈஸ்ட்மென்ட் கலர் காட்சிகளாகிவிட்டன மக்கள்தொகை பெருக்கம், வாழ இடம் தேடி விவசாயத்தை அழித்து நிலங்களை ஆக்ரமித்ததில் விவசாயிகள் இருண்டகால மனிதர்களானார்கள். மழை வேண்டியெல்லாம் யாகம் செய்ய இப்போது யாருமில்லை. வானம் தன் நிறம் மாற்றிவிட்டது. மனிதர்கள் வானம் பார்க்க நேரமின்றி டெக்னாலஜி அப்டேட்டுக்குள் மழைப்பதிவு இட்டு விருப்பமும் கருத்துகளும் தேடுகிறார்கள்.

மனிதன் இன்னமும் தன் உணவை பூமியில்தான் தேடுகிறான். ஆனால் நிலத்தை மலடாக்கிவிட்டு செயற்கை வாழ்க்கை வாழத் தயாராகிவிட்டான். தான் வாழ்வது சக்கை வாழ்க்கை எனத் தெரிந்தும் பழகிவிட்டான். சக்கையே  சர்க்கரையாய் இனிக்கத் தொடங்கிவிட்டது. எல்லாமே சிறிதுகாலம்தான் மனோபாவம் வந்தபிறகு மனிதன் செய்த முதல் அலட்சியம் இயற்கையைப் புறக்கணித்ததுதான். அகண்ட காவிரி ஆடு தாண்டும் காவிரியானது என்ற லலிதானந்த் கவிதை உணமையாய் சுடுகிறது. நீரிலிருந்து தொடங்கிய மனிதன் வாழ்வு நெருப்பில் அடங்கலாம்.

தாகம் தீராது எப்போதும் அலையும் மனிதனுக்கு வாட்டர் பாட்டில்கள் தீர்வு தருவதில்லை. ஆனாலும் பழக்கிவிட்டோம். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றெல்லாம் போற்றப்பட்ட தஞ்சை விவசாயிகள் அருகிவிட்டார்கள். அவர்களுக்கும் நாம் கோக், பெப்சி என்று பழக்கிவிட்டோம். கொளுத்தும் வெயிலுக்கு ஒதுங்க நிழல் இல்லா இடங்களில் ஏ.டி.எம் சென்டர்கள் உருவாக்கி ஏ.சி அறைகளில் தஞ்சமடைய வைத்து பழக்கிவிட்டோம். எல்லாமே பழகிவிடும் கொஞ்சநாளில் நீரின்றி வாழப் பழகுவானா?

நெருப்பில் வெந்து நீரில் மூழ்கி அழியும் உலகம் என்கிறது மனு நீதி. அதற்கான  அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்குகிறோம் நாம். பனிக்குட நீரில் இருந்து பிறந்து ஒரு குடம் நீரில் முடியும் மனிதன் தன் வாழ்வை நீர் தவிர்த்து அலட்சியப்படுத்துகிறோம். அசுத்தப்படுத்துகிறோம். நீரினைக் குற்றப்படுத்துகிறோம். பிறகு என்ன செய்யப்போகிறோம்?  

நடந்தாய் வாழி காவேரி மாறி, அடைத்தாய் வாட்டர் பாக்கெட்டில் காவேரி என்றாகிவிட்ட சூழலுக்கு நாம்தான் காரணம். நதியை நதியாகவே இருக்கவிடாமல் நாம் என்னவெல்லாமோ செய்துவிட்டோம். சரி இப்போது என்ன செய்யலாம்? எதுவும் செய்ய வேண்டாம்.மழையை மழையாகவே, நதியை நதியாகவே, கடலினை கடலாகவே விட்டுவிட்டால் போதும். முப்புறமும் நீரால் சூழப்பட்ட கண்டம். எதை அலட்சியப்படுத்திவிட்டு நாம் எதைக் காப்பாற்றப் போகிறோம்?

பல வருடங்களுக்கு முன்பெல்லாம் மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். அவர்களுக்கு எல்லாமும் இயற்கைதான் தந்தது. மழைநீர் சேகரித்தார்கள். அது அவர்களுக்கு இயல்பான ஒன்றாயிற்று. காடுகளைக் காத்தார்கள். அது அவர்கள் வாழும் இடமாயிற்று. உழைத்த இடங்களில் தங்கள் வியர்வை தெளித்து உயர்ந்தார்கள். காற்றில் மாசில்லை. மனிதர் சுவாசப்பையில் அசுத்தங்கள் படியாத வாழ்வு வாழ்ந்தார்கள். இப்போது அட்வான்ஸ் டெக்னாலஜி முன்னேற்றத்துக்கு நாம் ஒன்றே ஒன்றைத்தான் பலி தந்திருக்கிறோம். அது இயற்கை. காடழித்து கட்டடங்கள் எழுப்பி, பொழியத் தயாராயிருக்கும் மேகங்களின் கர்ப்பப்பையில் வாகனப்புகை பூசி மழை மறக்கடித்தோம். ஒன்றை அடைய இன்னொன்றை இழப்பது இயற்கை விதியென்று சமாதானம் கூறி நாம் இயற்கையையே இழந்தோம்.


நதிக்கரை ஓரமாக நாகரிகம் வளர்த்தவன் தமிழன். நீரின்றி அமையாது உலகு என்று உலகிற்கே அறிவித்தவன். அவனின் நதியின் கதிதான் இது. மெளனமாகத் தன் பயணத்தைத் தொடரும் நதியின் அலறல் நமக்குக் கேட்கவில்லையா? மனிதன் தன் காதினை இறுகப் பொத்திக்கொண்டுவிட்டானா? நதியில் முகம் பார்த்துக் கழுவி நதிநீர் அருந்தி வாழ்ந்த காலமெல்லாம் கனவாகிவிட்டதா? குப்பைகளையும் கழிவுகளையும் சுமந்து நகரமுடியாமல் தேங்கி நிற்கும் ஒவ்வொரு நதியும் மனிதனின் அலட்சிய சாட்சிகள்.

நதி என்பது நீர் என்ற சொல்லினால் அர்த்தப்படுத்தப்படும். நதி மட்டும் அல்ல. ஏரிகள், குளங்கள், குட்டைகள் என நீரினால் ஆன அத்தனைக்கும் அடையாளம் அதுவே. கோடை நாட்களின் விடுமுறையில் தாத்தாவின் விரல் பிடித்து காய்ந்த ஆற்றுமணலில் சாயங்கால நேரங்களில் நடை பழகிய நாட்கள் நம் வெம்மையின் சாட்சி. இன்று வருடத்தின் அத்தனை நாட்களும் கோடைதான். ஆறுகளில் நீர் மட்டும் இல்லை. மணலும் இல்லை. அம்மைத் தழும்புகள் நிறைந்த உடலாய் ஒவ்வொரு ஆறும் பள்ளம் வெட்டப்பட்டுக் காட்சியளிக்கின்றன. மலையில் உருவாகி பூமி தழுவி ஓடும் நதி இன்று உலகின் அத்தனை அசுத்தங்களையும் கரைத்துக்கொண்டு ஓடுகிறது. ஒட்டுமொத்தமாய் இயற்கை மீது பழி போட்டுவிட்டு  தப்பிக்கும் மனித மனம்தானே அனைவருக்கும் வாய்த்திருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

முன்பெல்லாம் பேருந்தில் பயணிக்கும்போது ஜன்னல் வழி தெரியும் கொள்ளிடம் ஆற்றின் இரண்டு பக்க வெள்ளப்பெருக்கு மிகப் பெரிய ஆச்சரியமூட்டும். இப்போதும் கடக்கிறேன் அந்தப் பாலத்தை. நீரற்று வறண்டு அங்கங்கே மணல் தோண்டப்பட்டு தன் பிரமாண்டத்தையெல்லாம் இழந்த ஒரு பெருநதியின் கையறு நிலை கண் முன்னே விரிய, ஒரு காலத்தில் ஆச்சரியமூட்டிய அதே நதிதான் இன்று அச்சமூட்டுகிறது. நீர் வரும் பாதையெல்லாம் அடைத்தது நாம்தான். வறண்டிருந்த ஆற்றில் மணல் அள்ளி லாரிகளில் ஏற்றி மிச்சமிருந்த கடைசி ஈரம் சொட்டச் சொட்ட பிற மாநிலங்களுக்கு கடத்தியதும் நாம்தான். என்ன செய்யப் போகிறோம்?

பழங்காலப் புராணங்களும் நிஜ வரலாறும் சொல்வதெல்லாம் தாகமென்று வந்து நிற்பவர்களுக்கு தண்ணீர் தருவதில் நாம் எவ்வித யோசனையும் காட்டியதில்லை. ஆனால் இன்று உள்ளங்கையில் உலகம் என்று டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் தருவதற்கு யோசிக்கிறோம். கடைகளில் வாட்டர் பாக்கெட்டில் சுருங்கிவிட்டது அகண்ட காவிரி. பெருமழை பெய்து ஊரே மூழ்கினாலும் அடுத்த ஆறு மாதத்தில் அனல் வெயிலில் பிளாஸ்டிக் குடங்களோடு வீதியில் தண்ணீர் வண்டி முன் சண்டை போடுகிறார்கள் மக்கள். மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் இப்போது பாம்புகள் வளர்கின்றன. நீர் சேமிப்புக்கு ஏதும் வழியில்லை. எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு என்ன செய்யப் போகிறோம்?

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் மாற்றாக கிட்டத்தட்ட எல்லாமே வந்துவிட்டது. விஞ்ஞானப் புரட்சியில் உலகம் ஒற்றை கேப்ஸுயூலில் பசி அடக்கி வாழக் கற்றுக்கொண்டுவிட்டது. நம் நீரெல்லாம் அசுத்தப்படுத்திவிட்டு கற்றுக்கொள்வோம் நீரின்றி வாழ.

100 வருடங்களுக்குப் பிறகான மழை என்றார்கள். இவ்வளவு நாட்களாக போக்குவரத்து சிக்னலுக்கு நின்று கவனித்து மனிதர்களைக் கவனியாமல் விரைந்துகொண்டிருந்தவர்களின் சென்னை வாழ்வு ஸ்தம்பித்துப் போனது. இன்னும் இரண்டு நாட்கள் இப்படியே மழை தொடர்ந்தால் சென்னை மூழ்கிவிடும் என்றார்கள். சென்னையைக் காப்பாற்றுங்கள் என்ற ஹேஷ்டாக் தமிழ்நாடெங்கும் வைரலானது. அரசாங்கம் கைவிட்டாலும் ஒவ்வொரு தனிமனிதனும் இயற்கையை எதிர்த்துப் போராட ஆரம்பித்தான். நீரால் நிறைந்து வழிய ஆரம்பித்தது நகரம்.

பெருகிய வெள்ளம் எல்லாக் கழிவுகளையும் சேர்த்துக்கொண்டு கடலினை நோக்கிப் பயணப்பட்டது. வரலாறு காணாத மழையை சேமித்துவைக்க புவியில் இடமில்லை.  கொட்டிய மழைக்கு ஏழை பணக்கார வித்தியாசமில்லாமல் போனது. நாட்டில் நல்லோர் ஒருவர் இருந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால் பெய்யெனப் பெய்தது மழை. இந்த மழைக்கு முன்பான சில நாட்களுக்கு முன் இதே சென்னை,  வெயிலால் காய்ந்தது. பல பகுதிகளில் குழாயில் நீர் வராமல், போர் போடுகிறேன் பேர்வழி என்று பூமியைத் துளைத்தார்கள். ஆழமோ கணக்கின்றிப் போக, சட்டென்று வானிலை மாறி பெருமழை பெய்தபோது அதை சேமித்து வைக்கத்தான் இடமின்றிப் போனது. 

நம் முன்னோர்கள் வாஸ்து பார்க்காமல்தான் வீடு கட்டினார்கள். ஆனால் காற்று வரும் திசை, சூரியன் உதிக்கும் திசை பார்த்து கட்டினார்கள். கூடவே மழை பெய்தால் சேமித்துவைக்க முற்றம் கட்டினார்கள். பெய்த மழை சுற்றுப்புறத்தை மட்டுமல்ல. மக்கள் மனதையும் ஈரப்படுத்தியது. தாகமென்று வந்தவர்களுக்கு வீட்டுத் திண்ணையில் மண்பானை வைத்து நீர் வழங்கிய மூத்தகுடிகள் காலத்தின் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார்கள்.

இவ்வளவு மழை பெய்தும் மறுபடியும் வெயில் கொளுத்துகிறது. ஒண்ணு பேஞ்சு கெடுக்குது. இல்ல காஞ்சு கெடுக்குது என்று உபமொழி பேசி நாம் வியர்வை ஆடைகளை அகற்றத் துவங்கிவிட்டோம். ஒரு துளி நீர் ஒருவனின் தாகம் தணிக்கலாம். நாம் சேமிக்கத் தவறியது நீரை மட்டுமல்ல. உலகின் நீதியையும்தான்.

சரி முடிவாய் என்ன செய்வது என்றால், மறுபடியும் ஆரம்பத்துக்குச் செல்ல வேண்டியதுதான். தொடக்கத்தில் ஆறுகள் நீரால்தானே நிரம்பியிருந்தது. இப்போது நீருக்குப் பதில் கழிவுகளும் குப்பைகளும். அதற்குக் காரணம் நாம். கடல் என்பதன் அர்த்தம் கழிவுத்தொட்டி என்று மாறிப்போனது. அதற்குக் காரணம் நாம். குப்பைகளை அதற்கு உரிய இடத்தில் போடாமல் சாக்கடையில் வீசினோம். சாக்கடையின் விஸ்தீரணம் கடல் என்றானது. மழைநீர் சேமிக்க வழியின்றி தெருக்களை மூழ்கவிட்டோம். கழிவுகள் சுமந்து நீர் விரைந்தது கடல் நோக்கி. அசுத்தமடைந்த கடல் மூச்சுத்திணறிப் பேரழிவினை உருவாக்கியது. வினை விதைத்தோம், வினையே அறுவடை செய்தோம்.

ஒரு விவசாயியைப் பார்த்து நீ விவசாயம் செய்யாதே  என்பதுபோல் கொடுமை உலகில் வேறெதும் இல்லை. ஆனால் நாம் சொன்னோம். நிலங்களை ஆக்ரமித்தோம். ஃப்ளாட்கள் உருவாக்கினோம். மென்பொருள் கம்பெனிகளிடம் நம் நிலத்தை விட்டுக்கொடுத்தோம். வயல்வெளிகள் இழந்தவன் கதியற்றுப்போனான். நம் பாரம்பரியம் தொலைந்து போவதைப் பற்றி எந்த விதக் கவலையுமில்லை. வானம் பார்த்து மழை வேண்டுபவனையே மறுத்தோம். ஆறுகளில் மணல் தோண்டினோம். நீரற்ற ஆற்றில் கிரிக்கெட் விளையாட பழக்கிவிட்டோம் நம் எதிர்காலத் தலைமுறையை. காடுகளை அழித்துக் கட்டடங்கள் கட்டினோம். மரங்கள் உமிழும் சுவாசங்கள் இன்றி மேகங்கள் களைப்படைந்தன. நீர் சுமக்க மறுத்து கலைந்தன. மழையும் இல்லை. பெய்யும் மழை சேமிக்க வழியும் இல்லை. வறண்டது மனிதமும் உலகமும்.

கடற்கரையில் வாக்கிங் போகும் மனிதன் வசதியாய் ஒன்றை மறந்தான். நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை  உள்வாங்கி சுத்தம் செய்யும் மகத்தான பணியினைப் புரியும் கடலினை நாம் கொன்றோம். பின் எங்கிருந்து வரும் சுத்தமான காற்று? கடலினையும் அசுத்தம் செய்துவிட்டு காற்று வாங்க வாக்கிங் போகும் நம் மனநிலையை என்ன சொல்வது? ஆக்ஸிஜன் தரும் மரங்கள் அழித்தோம். அசுத்தக் காற்றினை சுத்தம் செய்யும் கடலினைக் காணாமலடித்தோம். சுற்றுப்புறச்சூழலைத் தொலைத்துவிட்டு நம் எதிர்காலம் எங்கே இருக்கப்போகிறது? நம் எதிர்காலம் என்பது இயற்கை சார்ந்துதானே... அதை விடுத்து என்ன இருக்கப்போகிறது?

என்னை எப்படி என்று 20-ம் நூற்றாண்டு தீர்மானித்தது. 21-ம் நூற்றாண்டு எப்படி என்பதைத் தண்ணீர் தீர்மானிக்கும் என்ற  பார்க் ஆக்டனின் வரியை மனதில் நிறுத்துவோம். உலகில் நீரினை சேர்ப்போம். நீரின்றி அணையாமல் உலகைக் காப்போம்.


     



 

   





 





 

.


Friday 14 June 2019

தூக்கம்

தூக்கம் 





இரவு 10 மணிக்கு மேல் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. 9 மணிக்கு செட்டிநாடு ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டான். அப்போது கவனமெல்லாம் பரோட்டாவின் மேல் ஊற்றப்பட்ட சால்னாவில் லேசாய் தென்பட்டுக்கொண்டிருந்த கறி வாசனையில் இருந்தது. அதைத் தவிர்த்து பரோட்டா சாப்பிடக் காரணமாயிருந்த ஊருக்குச் சென்றுவிட்ட மனைவி மகன் மீதிருந்தது. இருவரும் இருந்திருந்தால் இந்த பரோட்டா டின்னர் நிகழ்ந்திருக்காது. இவ்வளவுக்கும் இவன்தான் அறிவுரை கூறுவான், பரோட்டா சாப்பிடுவது எத்தனை கெடுதலென்று. ஒரே ஒருநாள் மட்டும் என்று மனைவியும் மகனும் கெஞ்சினாலும் பிடிவாதமாய் மறுத்துவிடுவான். அவர்கள் கண்ணுக்கு அப்போது அவன் எப்படித் தெரிவானென்று நினைத்து சிரித்துக்கொள்வான். அவன் ஏன் சிரிக்கிறான் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் ஒரு ரகசிய ஆசையாய் கல்லில் கிடந்து வெந்துகொண்டிருக்கும் அவனுக்கான பரோட்டா. மனைவியும் மகனும் ஊருக்குச் செல்லும்போது மட்டுமே அந்த பரோட்டா புரட்டிப்போடப்படும். அது ஒரு அபூர்வ நிகழ்வு. அந்த அபூர்வமென்பது இவனுக்கான பரோட்டா, தட்டில் வைப்பதை விட அரிதாய் நிகழும் ஒன்று.
நான்கு பரோட்டாக்களை சால்னாவில் முக்கியடித்து உபரியாய் ஒரு ஆஃப் பாயிலுடன் இரவுணவை முடித்தபோதுகூட அவனுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தான். கையில் இருந்த ரிமோட் கூட ஓர் அபூர்வ நிகழ்வுதான். மனைவிக்கு சீரியல், மகனுக்கு ஏதோ ஒரு கார்ட்டூன் சேனல் என்று ஒதுக்கப்பட்டுவிட்டதால் இவன் அதிகம் டிவியைத் தேடுவதில்லை. அதுவுமில்லாமல் ஆபீஸ் முடிந்து இந்நகரத்தின் போக்குவரத்து சிவப்பையும் பச்சையையும் அணைத்து முடித்து வீட்டுக்கு வந்தால் போதும் என்று அலுத்து வருபவனுக்கு இந்தத் தொலைக்காட்சி விருப்பமற்ற ஒன்று. தொலைக்காட்சியில் ஏதோ பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. கறுப்பு வெள்ளை காட்சிகளை வைத்துதான் பழைய படமென்று தீர்மானித்திருந்தான். அப்போதுதான் ஒரு காட்சியாகவோ எழுத்துருவாகவோ அவன் மூளைக்குள் சில நொடிகள் தோன்றி மறைந்தது ஒரு பிம்பம் அல்லது எண்ணம். ’விடியறதுக்குள்ள நாம செத்துடுவோமோ...’ 

ஒரு ஃபிளாஷ் வெளிச்சம் போல் இப்படி ஒன்று அவனுக்குள் தோன்றிய அடுத்த நொடி அவனுக்கு வயிறு வலித்தது. மலம் கழிக்க வேண்டுமெனத் தோன்றியது. மனைவி மகனுக்குத் தெரியாமல் சாப்பிட்ட பரோட்டா மீது பழியைப் போடாமல் வெஸ்டர்ன் டாய்லெட் சென்று அமர்ந்தான். அந்தக் குழப்பமான எண்ணம் அதிகமானது. எதற்கு இப்படித் தோன்றுகிறது என்ற பதற்றத்திலே அவசர அவசரமாய் வெளியே வந்தான். டிவியை அணைத்தான்.  அவனுக்குள் அந்த எண்ணமே மீண்டும் மீண்டும் சுற்றியடித்தது. இப்படி தான் மட்டும் தனியாய் இருக்கும்போது தோன்றிய எண்ணம் எதன் பொருட்டு என்று திரும்பத் திரும்ப நினைத்தான். எதுவும் புரியாமல் தலையை அழுந்தப் பிடித்துக்கொண்டான். படுக்கையில் வந்து படுத்தான். லேசாக மூச்சுத் திணறுவதுபோல் இருந்தது. எழுந்து வந்து மீண்டும் சோபாவில் அமர்ந்தான். அறை லைட் எரிந்துகொண்டிருந்தது. ஹாலிலும் அப்படியே. பாத்ரூம் லைட் ஏற்கெனவே எரிந்துகொண்டுதான் இருந்தது. பாத்ரூம் கதவு மூடியிருந்தது. வீடு முழுவதும் வெளிச்சத்தில் இருக்க அவன் விடிவதற்குள் மரணித்துவிட மாட்டோம் என்று முழுமையாய் நம்பினான். பெயின்ட் தயார் செய்யும் கம்பெனியில் உயர் பதவி. நேரிடையாக பெயின்ட்டுக்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென்றாலும்  பிரமாண்டமான கட்டடத்தையோ மிகப்பெரிய வண்ணமயமான வீட்டையோ கடக்கும்போது இவனுக்குள் புதிதாய் ஒரு வண்ணம் லேசாய் ஒரு தீற்று தீற்றிவிட்டுச் செல்லும்.  புன்னகைத்துக்கொள்வான். மனைவி என்பதற்கு இவனுக்கு சரியான அர்த்தம் தெரியாது. ஆனால் அழகான மனைவியின் கம்பீரம் என்றால் அது அவன் மனைவிதானென்று உறுதியாய் நம்பினான்.  அவனின் பால்ய நாட்களையெல்லாம் ஞாபகப்படுத்தியபடி வளரும் அவன் மகனின் சிரிப்பு நினைவுக்கு வந்தது. இவர்களையெல்லான் விட்டுவிட்டு அவன் மட்டும் இறந்துபோகிறதுபோல் அத்தனை பலமாய் ஒரு வரி மனதில் உதிர்ந்ததும் தலையை வேகமாய் ஆட்டி அவ்வெண்ணத்தைக் கலைத்தான். இதற்கு மேல் வேகமாய் சுற்றமுடியாது என்றபடி சுற்றிக்கொண்டிருந்த ஃபேனையே கவனித்தவன் அவனது நெற்றி, முகம் எங்கும் படிந்திருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டபடி எழுந்தான். இன்னொரு ஃபேனின் சுவிட்சினைப் போட்டான். 

நிறைந்த சம்பளத்தில் உயர் பதவி, எவ்விதப் பிரச்சினையுமில்லாத குடும்ப வாழ்வு இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அவன் மட்டும் இவ்வளவு சீக்கிரம் இறந்துபோவதை நினைத்து முதலில் பயமாகவும் பிறகு வெறுப்பாகவும் பின் வருத்தமாகவும் இருந்தது. மனவிக்கு போன் செய்து சொன்னால் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்குமென்று நம்பினான். ஊருக்குச் சென்றிருப்பவர்களை ஏன் பயமுறுத்த வேண்டும் என்று உடனே அந்த எண்ணத்தை அழித்தான். தான் அவவளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டோம்...இது ஏதோ ஒருவித பிரச்னை, தற்காலிக பயம் சிறிது நேரத்தில் உடலும் மனதும் இயல்பாகிவிடும் என்று நம்பும்போதே வேறு ஏதோ ஒன்று அவ நம்பிக்கையாய் உள் எழுவதைக் கவனித்தவன் இரண்டு ஃபேன் சுற்றியும் ஏன் இப்படி வியர்க்கிறது என்று குழம்பினான். ஜன்னலைத் திறந்துவைத்தால் கொசு வந்துவிடும் பயமும் இருந்தது அவனுக்கு. கொசு வந்து அவனைத் தூங்கவைக்கப் போவதில்லை, அவனது மரணத்திலிருந்து அவனைக் காப்பாற்றப் போவதுமில்லையென்று அழுத்தமாக ஓர் எண்ணம் வந்தது. அதே நேரம் அபத்தமாகவும் பட்டது அவனுக்கு. நகரத்தில் ஏழை, பணக்காரன், குடிசை, அபார்ட்மென்ட் வித்தியாசமில்லாமல் வாழும் ஒரே உயிரினம் கொசு மட்டும்தானே என்று சம்பந்தமில்லாமல்  அவன் ஞாபகத்தில் வந்துபோனது. நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட உணர்வு  பயமுறுத்தியது. பெட்ரூமில் ஏசி இருக்கிறது. உள்ளே செல்ல சின்னதாய் ஒரு பயம் இருந்தது. இந்த வயதிலேயே இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்த தனக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு மரணம் நிகழ வேண்டும் என்ற கேள்வி மட்டும் மீண்டும் மீண்டும் அவனுக்குள் தன்னை எழுதிக்கொண்டே இருந்தது. எங்கேயோ படித்ததோ யாரோ சொன்னதோ அவனுக்குள் தோன்றி புதிதாய் ஒரு பூட்டு திறக்கும் செயலை நிகழ்த்திக்கொண்டிருந்தது. 

நிறை வாழ்வு வாழ்பவர்கள் மனதில் அவ்வப்போது இதுபோன்ற எண்ணம் தோன்றி மறைவது உளவியல் ரீதியாக சாதாரணமான ஒன்றுதானே என்ற குரல் அவன் காதுக்குள் கேட்ட சமயம் யதேச்சையாக பார்வை கடிகாரத்தின் மீது சென்றது. அவன் இதயத்தில் நொடி முள் மிக மெதுவாய் நகர்ந்து நின்றது. 12. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாய் இதைப்பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறோமா... ச்சே என்ன இது? தான் இறந்துவிடுவதுபோல் எந்தச் சம்பவமோ பேச்சோ கனவோ முந்தைய நாட்களில் எதுவும் நிகழவில்லையோ என்பது வேறு குழப்பமாய் இருந்தது அவனுக்கு. அவனுக்குத் தெரிந்த கடவுள்களை மனதுக்குள் வழிபடத் துவங்கினான். காலையில் சிடியில் கேட்கும் சுப்ரபாதமோ காயத்ரி மந்திரமோ கணபதி அகவலோ இளையராஜாவின் புத்தம் புது காலையோ வரிசைப்படி ஊர்வலம் போயின. சிறுவயதில் ஊரில் இருக்கும்போது கெட்ட கனவு கண்டு நடு ராத்திரி விழித்து கத்தினால் அவன் அம்மாதான் சாமி ரூமிலிருந்து விபூதி எடுத்துவந்து நெற்றியில் பூசிவிடுவாள். அதுபோல் இப்போது செய்தால் தூக்கம் வருமா? நகரத்துக்கு வந்த பிறகு சாமி ரூம் என்று தனியாய் அமைந்த பிறகு பெரிதாய் சாமியெல்லாம் பற்றி யோசிப்பதில்லை. அது சாமியின் அறையாயிற்று. அவ்வளவுதான். விபூதி பற்றிய யோசனையைக் கைவிட்டான். மற்ற எந்த பிளாட்டிலும் எந்தச் சத்தமும் இல்லாமல் இத்தனை அமைதியாக இருக்குமா இந்த இரவு? ஏன் மற்ற பிளாட்டில் எல்லோரும் தூங்கிவிட்டார்களா? 12 மணிக்குள் இந்த நகரம் இப்படியான மெளனத்துக்குள் தனனைப் புதைத்துக் கொள்ளுமா? கேள்விக்குறியின் அளவு அவனுக்குள் பெரிதாகிக்கொண்டே போனது.  அவனது மரணம் குறித்து ஏதோ செய்தி சொல்வதாய் இருந்தது அவனுக்கு அவ்விரவு. அவனுக்குதான் இந்நகரின் நடுமை என்பது எப்படி இருக்குமென்று தெரியாதே. கதவு திறந்து வெளியே சென்று பார்க்கலாமா...வராந்தாவில் நடந்து சென்று இந்த மூன்றாவது மாடி சிட் அவுட்டின் மேலிருந்து இந்நகரத்தின் இரவை உற்று கவனிக்கலாமா... அவன் தொந்தரவில் விழித்துக்கொள்ளும் இந்த இரவாவது அவன் மரணத்தைத் தள்ளிப்போடாதா... ஏதேனும் ஒரு நாயின் குரைப்புச் சத்தம் அவனது இத்தகைய மனநிலையைக் குலைத்துப் போட்டு விடாதா...தலையில் பட்டென்று அடித்துக்கொண்டான். என்ன யோசித்தாலும் அவனுக்கு மீண்டும் மீண்டும் அவனது மரணம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. இப்போது வெளியே சென்று உறங்கிக்கொண்டிருக்கும் மற்றவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டுமா என்ற யோசனையும் அவனுக்குள் ஓடியது. நாளை விடிவதற்குள் அவன் இறந்துவிடுவான் என்று அவர்களிடம் சொன்னால் அவனைப் பைத்தியம் என்று நினைக்க மாட்டார்களா... அது மேலும் அசிங்கமாகிவிடாதா... ஏன் ஒரு சாட்சியை வைத்துக்கொண்டு அவன் இறந்துபோக வேண்டும் என்று சிந்தித்தான். எழுந்தான். 

உறங்காமல் விழித்தபடி இருந்தால் இப்படித்தான் கண்டபடி எண்ணம் ஓடும். படுக்கையறைக்குள் நுழைந்தான். மொபைலை எடுத்து பாடல்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று ஓப்பன் செய்தான். இளையராஜா பாடல்கள். எத்தனையோ பேருக்கு இரவுத் தாயாய் தாலாட்டி தூங்கவைக்கும் இளையராஜா அவனை உறங்கவைத்து அவன் மரணத்தைத் தள்ளி வைக்க மாட்டாரா... சின்னதாய் புன்னகைத்தான். இப்படியெல்லாம் எப்போதும் தான் இல்லையே என்பதை நினைத்து கவலை கொண்டான். இந்த இளையராஜா பாடல்கள் கூட மற்றவர்கள் சொல்லியதுதான் அவனுக்கு. படுப்பதற்கு முன் பாடல்கள் கேட்டால் தூக்கம் வரும் என்றெல்லாம் அவனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும்  தலையாட்டியபடி பாடல்களைத் தேர்வு செய்து மெளனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம் என்ற பாடலை குறைவான சவுண்டில் வைத்தான் எஸ். ஜானகியின் குரல் அறையின் செயற்கை குளிரை மேலும் குளிராக்கியது. லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு படுத்தான். கண்ணை மூடினான். கைக்கெட்டும் தூரத்தில் மொபைலை வைத்துக்கொண்டான். தூக்கம் கண்ணைச் செருகும்போது கவனமாய் மொபைலை அணைக்க அதுதான் வசதியாய் இருக்கும். மெளனமான நேரம் முடிந்தது. அடுத்த பாடல் துவங்கியது. புரண்டு படுத்தான். பாடல்கள் வரிசை கட்டி வந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு பாடலும் அப்பாடல் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்றை அவன் மூளையில்  பழைய ஞாபகங்களின் சாட்சிகளாய்  ஓடவைத்துக்கொண்டிருந்தன. மல்லாந்து படுத்து மார்பின் மீது இரு கைகளையும் வைத்தபடி நீளப் பெருமூச்சு விட்டவன் வினோதமாய் ஏதோ ஒன்று உறுத்த மொபைலை எடுத்துப் பார்த்தான். மணி 2: 30 என்று காட்டியது. லேசாகக் கை நடுங்கியது. எழுந்து உட்கார்ந்து இரண்டு கைகளாலும் தலையை இறுகப் பிடித்துக்கொண்டான். அப்படியென்றால் இரண்டு மணி நேரம் பாட்டு மட்டுமே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறோம். தூங்கவில்லை . தூக்கமும் வரவில்லை. ஆழ்ந்த உறக்கம் என்பதே 12 லிருந்து 3 வரக்கும்தானே...அப்படிப்பட்ட உறக்கத்தைக் காணாமலடித்துவிட்டதை உணர்ந்தான். இனிமேல் உறங்கி என்னாகப்போகிறது. கண்கள் எரிச்சலில் மிதப்பதை வெறுத்தான். இதயத்தின் படபடப்பு அவன் உள்ளங்கையில் தெரிந்தது. மொபைல் எடுக்கும்போது கை நடுங்கியதை கவனித்து அதிர்ந்தான் . எதற்கான அறிகுறி இது? மரணத்தை நோக்கிய பயணத்தில் இருக்கிறானோ. அவ்வளவுதானா எல்லாம்... வாழ்ந்தது போதுமா... அழுகை வந்தது அவனுக்கு. பாட்டை நிறுத்திவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான். 

ஹாலில் லைட் எரிந்துகொண்டிருக்க ஒரு நொடி தயங்கினான். லைட்டையும் ஃபேனையும் அணைக்காமல் சென்றுவிட்டதை அவன் மூளை தாமதமாக உணர்ந்தது. மனம் குழம்பியதுதான் இதற்குக் காரணமா என நினைத்தவன் இல்லை இல்லை இது வேறு விதமானது இப்படி ஒரு ராத்திரி தூங்காவிட்டாலெல்லாம் எவரும் செத்துவிட மாட்டார்கள் என்பதை மனதுக்குள் வலிமையாய் நிறுத்திக்கொள்ள முயன்றான். கூடவே அப்படிச் சாவதில் தான் ஏன் முதல் ஆளாக இருக்கக் கூடாது என்றொரு எண்ணமும் வால் பிடித்தபடி வந்தது. எந்த வியாதியும் இல்லாமல் எத்தனையோ பேர் இறப்பதில்லையா... அதுபோல் இவனும் இறந்துவிடுவானா...அவனுக்குத் தோன்றிய எண்ணம் உண்மைதான். அதுதான் தூக்கம் இல்லாமல் இப்படி வதைக்கிறது. அவன் தன் எண்ணத்தை முழுமையாக நம்பினான். இப்படி நம்பி நம்பித்தான் வாழ்க்கையில் முன்னேறினான். இப்போது சாவிலும்.  இவனது மரணம் என்பது இப்படித் தூங்காமல் விடிய விடிய விழித்திருந்து நடக்கப் போகிறதோ... தனது மரணம் வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டுமென எப்போதோ விரும்பியவன்தான். அது எப்படிப்பட்ட வித்தியாசம் என்பதை இப்போது உணர்ந்தான். ஒருநாள் தூங்காமல் இருந்தால் எதுவும் விபரீதமாய் நடந்துவிடப் போவதில்லை என்று உள் மனம் நம்பியது. அதே ஆழ்மனத்தில் உருவான விடிவதற்குள் தான் செத்துவிடுவோம் என்ற எண்ணம்தான் இப்படிப் பாடாய்படுத்துகிறது என்பதையும் அறிந்தான். இப்படி இருப்பது நோயா, மூளையில் நிகழும் ரசவாதமா என கூகுளில் தேடலாமா என்று யோசித்தான். மூன்று மணிக்கு மேல் எதற்கு தேவையில்லாமல் நெட்டை ஆன் செய்ய வேண்டும் என வேண்டாமென்று தீர்மானித்தான். மணி மூன்றுதானா என்பதை உறுதி செய்துகொள்ள கடிகாரத்தைப் பார்த்தான். 3: 51 என்று நியான் பச்சை ஒளிர்ந்தது. இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடுமோ... வாக்கிங் கிளம்பிப் போகலாமா என்று நினைத்தான். வீட்டுக்குள்ளே இருப்பதனால் இப்படியெல்லாம் மோசமான எண்ணம் வந்து தூங்காமல் படுத்துகிறதோ என்று யோசித்தவன் அப்படியே சோபாவில் சாய்ந்தான். 

தலையை வலிப்பது போல் இருக்க அடிவயிறு கனத்திருந்தது. எரிந்துகொண்டிருந்த லைட்டை அணைத்து விடலாமென எழுந்தவன் டாய்லெட் சென்று சிறுநீர் கழித்து வந்தான். பசித்தது. ஃப்ரிட்ஜைத் திறந்து பார்த்தான். ப்ரெட்டும்  ஜாமும் இருந்தது. எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்துக்கொண்டு  டைனிங் டேபிளில் அமர்ந்தான். இப்படி யாராவது விடியவிடிய தூங்காமல் விழித்திருந்து 4 மணிக்கு ப்ரெட் சாப்பிடுவார்களா...ப்ரெட்டை பிட்டு ஜாமில் தோய்த்து வாயில் திணித்தவனின் யோசனை அப்படியே ஒரு நொடி நின்றது. ஒருவேளை திடீரென மரணிப்பவர்களுக்கு இப்படித்தான் சம்பந்தமில்லாமல் பசிக்குமா? மூளையைப் பிறாண்டிய கேள்விகளுடன் சாப்பிட்டு முடித்தான். உடலில் புத்துணர்ச்சி கூடியது போல் இருந்தது. வாஷ் பேசின் சென்று கை கழுவியவன் டவலில் கை துடைத்தபடி ஜன்னல் கண்ணாடி பார்த்து புருவங்கள் சுருக்கினான். சாம்பல் நிறத்தில் இருந்தது ஜன்னல். லேசாக நீர் படிந்திருந்தது. ஒரு நீரின் ஆரம்பம் கண்ணாடி மேலிருந்து வழிந்ததைக் கவனித்தான். விடிந்தே விட்டதா... வாக்கிங் போகலாம் என ஆவல் எழுந்ததை ஆச்சர்யமாய் கவனித்தவன் தூங்காமல் வாக்கிங் போனால் எதுவும் ஆகிவிடாதாவென கேள்வி தொக்கி நிற்க வேண்டாமெனத் தீர்மானித்தான். போகிற உயிர் இந்த வீட்டிலேயே போகட்டும். ஆமாம் அப்படியே இப்போது இறந்துவிட்டாலும் மற்றவர்களுக்கு எப்படி தெரியப்படுத்துவது? இதென்ன மடத்தனமான யோசனையாய் உள்ளது. தலையின் பின்புறம் தட்டிக்கொண்டான். எல்லோரும் தாங்கள் இறந்ததைத் தாங்களேவா தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பெரும் குழப்பமாய் இருந்தது அவனுக்கு. ஒன்று மட்டும் முடிவெடுத்தான். கதவைத் திறந்துவைத்துவிட்டு இறந்துபோய் விடலாம். அனாவசியமாய் ஏன் கதவை உடைத்துக்கொண்டு மற்றவர்கள் உள்ளே வர வேண்டும். பிணவாடை வெளியே தெரிந்து யாராவது வந்து கதவை உடைக்க வேண்டியதில்லை. அந்தச் சிரமத்தை ஏன் அவர்களுக்குத் தர வேண்டும் என்று வாய்விட்டு மெதுவாய் முனகினான். உடல், மன அளவில் மிகத் தளர்ந்திருந்தான். சிறிது நேரத்துக்கு முன்பிருந்த உற்சாகம் எங்கே என ஆச்சர்யப்பட்டான். எழுந்தான். லேசாகத் தள்ளாடியவன் கதவைத் திறப்பதற்காக அதன் உட்புற லாக்கில் கை வைத்தான். கதவு திறந்தே இருந்தது.





                        

எறும்பு

எறும்பு






'' ஜன்னல்தான் தெறந்து இருக்குல்ல...கூப்புட்டா வந்து திறக்க மாட்டேனா...கதவ போட்டு இந்த தட்டு தட்டணுமா?’’ என்றபடி கதவைத் திறந்த வசந்தி அப்போதுதான் குளித்ததைப் போல் அத்தனை மலர்ச்சியாய் இருந்தாள்.இரு புருவங்களுக்கு நடுவில் லேசான குங்குமத் தீற்றல். உச்சந்தலையின் வகிட்டு ஆரம்பத்தில் ஒழுங்கற்று உறைந்திருந்த குங்குமம் நீளமான வெள்ளை நிற ஒற்றையடிப் பாதையின் முன்பான கதவு போல மூடியிருந்தது. சிறிய கொணடை அவிழ்ந்துவிடக் கூடாதென மல்லிகைப் பூவால் ஏகப்பட்ட சுற்று சுற்றியிருந்தாள். ஃபேர் அண்ட் லவ்லி வாசனையும் மல்லிகைப் பூ வாசனையும் கலந்து பிரசாத்தின் சுவாசிப்பைத் தாண்டி தெருவுக்குச் சென்று கடந்துகொண்டிருந்த காற்றில் கலந்தது. பிரசாத் திரும்பிப் பார்த்து, வீட்டின் உள்ளே நுழைந்தான். புருவம் உயர்த்தாமல் விழிகளை மட்டும் உயர்த்தி வசந்தியைப் பார்த்துக்கொண்டே வேகமாய் சட்டையைக் கழற்றினான். ஊஞ்சல் மீது சட்டையை வீசியவன், அதே வேகத்தில் பனியனையும் கழற்ற, ‘’ என்னங்க... அடி எதுவும் பட்டுடுச்சா’’ பதறினாள் வசந்தி. தன் முதுகை அவளிடம் காண்பித்து, ‘’ எதுவும் பூச்சி கீச்சி இருக்கான்னு பாரு’’ என்றான். கண்களால் மேய்ந்தவள், கைகளால் தொட்டுத் தடவியபடி, ‘’ அப்பிடி எதுவும் தெரியலைங்க...ஏன் என்ன பண்ணுது?’’  ‘’ ட்ரெயினை விட்டு எறங்குனதிலேர்ந்து எறும்பு ஊறுற மாதிரி ஒரே நமச்சல்... தட்டிப் பாத்துட்டேன். சொறிஞ்சும் பாத்துட்டேன். அடங்கல’’ ஆயிரம் எறும்புகள்  ஊறுவதுபோல் முகம் சுழித்தான் பிரசாத்.’’ கூட்ட நெரிசல்ல வர்றீங்க. வேர்வை கசகசப்பு வேற. போய் குளிங்க. ஃப்ரெஷ்ஷாகிடுவீங்க. வந்து சாப்புடலாம்’’. குளித்துவிட்டு வந்து லுங்கியுடன் ஈரத்தலையைத் துவட்டிக்கொண்டிருந்த பிரசாத்தின் மார்பு முடிகளையே பார்த்த வசந்தி நீல நிற ஒளியில் அம்முடிகளில் தன் நாசி உரசியதைக் கண்களால் உணர்ந்தாள். அன்றிரவு படுத்து பத்து நிமிடம் கழித்து கட்டிலை விட்டு இறங்கி லைட்டைப் போட்ட பிரசாத் ‘’ மெத்தையைத் தட்டித்தானே போட்டே’’ என்றான் கேள்வியாய். ‘’ ஏன் என்னாச்சு?’’   ‘’ முதுகுப்பக்கம் ஊறுற மாதிரியே இருக்கு’’ என்றவன் தன் பங்குக்கு தலையணையை இருமுறை தட்டிவிட்டுப் படுத்தான். மார்பின் மீது விழுந்த வசந்தியின் கைகளை எடுத்துவிட்டு, ‘’ வேணாம்மா கசகசன்னு இருக்கு’’ என்று திரும்பிப் படுத்தான்.

ஒருவாரம் முடிந்து ஒருநாள்...பாத்ரூமிலிருந்து ‘’ வசு...வசந்தி’’ என்று கத்தினான் பிரசாத். லன்ச் பாக்ஸில் சாப்பாட்டை வைத்துக்கொண்டிருந்த வசந்தி பதற்றத்துடன் பாத்ரூமை நோக்கி ஓடினாள்,  ‘’ டவல் உள்ள இருக்குங்க’’ என்றபடி.உடம்பின் இடதுபுறம் மட்டும் நனைந்திருக்க, ஜட்டியுடன் பாத்ரூமின் பாதிக் கதவைத் திறந்தபடி நின்றிருந்தான் பிரசாத். ’’இங்க பாத்தியா’’ என்றான் பாத்ரூமின் மூலையைச் சுட்டிக் காட்டியபடி. பார்த்த வசந்திக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டு ‘’ இதுக்குதான் இப்படி கத்துனீங்களா...இது மலையெறும்புங்க. ஒண்ணும் பண்ணாது. எங்கூர்ல புள்ளையார் எறும்புன்னு சொல்வாங்க. தண்ணி ஊத்துனா போயிடும். கடிக்கல்லாம் செய்யாது’’ என்றவளிடம், ‘’ அதெல்லாம் எனக்கும் தெரியும். காலைல நீ குளிக்கிறப்ப பாத்தீல்ல... அப்பவே தண்ணி ஊத்தியிருக்க வேண்டியதுதானே. பார்த்தாலே எரிச்சலா இருக்கு. ச்சை’’ வசந்தியை முறைத்தான். ‘’ என்ன நீங்க... வரவர எறும்புக்கெல்லாம் பயப்புட ஆரம்பிச்சிட்டீங்க’’  ‘’ பயமும் இல்ல. மண்ணாங்கட்டியும் இல்ல...அருவருப்பாதான் இருக்கு’’ உலகத்து கோபத்தைக் கண்களில் காட்டியவன், ஒரு குவளை தண்ணீர் எடுத்து கறுப்பு வெள்ளை ஊர்வலமாய் பெருங்கூட்டமாய் அழகாய் அவசர அவசரமாய் சென்றுகொண்டிருந்த எறும்புகளின் மீது விசிறினான். நனைந்த எறும்புகள் கண்களைச் சிமிட்டி நீர் உதறி உடல் சிலிர்த்து கண்ணுக்குத் தெரிந்த திசையில் நகரத் தொடங்கின முணுமுணுத்தபடி.

பீக் ஹவரில் பேருந்திலும் ரயிலிலும் பயணம் செய்வது சென்னைவாசிகளின் எளிய சாபம். ஒருமுறை சக அலுவலன் பிரசாத்தின் வீட்டின் வழியே செல்வதாகக் கூறி பிரசாத்தை வீட்டில் விட்டுச் செல்கிறேன் என்று சென்னை டு கூடுவாஞ்சேரியின் அத்தனை இண்டு இடுக்குகளில் புகுந்து சந்து பொந்துகளைக் கடந்து சிக்னல்களில் நின்று மூச்சுவாங்கி வழக்கமாய் பிரசாத் வீட்டுக்கு வரும் நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாய் வந்தது ஓர் உயர் சாபம். பிரசாத்தின் பெற்றோர்களுக்கு அவன் ஒரே பிள்ளை. அவர்களின் வயதான காலத்தில் வந்து பிறந்த பிள்ளை. பிரசாத் வளர்ந்து படித்து வளர்ந்து வேலைக்குச் சென்று வளர்ந்து திருமணம் முடிப்பதற்குள் அவர்களின் காலத்தில் நரை பூத்திருந்தது. தன் மகனின் திருமணக் கோலத்தைப் பார்த்த நிறைவில் அடுத்தடுத்த வருடங்களில் இருவரும் இறந்துபோக அவர்கள் வாழ்ந்த அந்த பழங்காலத்து வீடு மட்டுமே பிரசாத்துக்கு ஞாபக மிச்சமானது. வந்து சென்று அவ்வீட்டை நிறைக்கும் உறவுகள் எல்லாம் வசந்தியுடையதாயிருந்தன.

காலையில் ஆபீஸ் புறப்படும்போதே வசந்தி சொல்லியிருந்தாள்.  ’’ஈவ்னிங் சீக்கிரம் வாங்க. டாக்டரைப் பார்க்கப் போகணும்’’. ஏற்கெனவே பார்த்த டாக்டர்தான். கல்யாணமாகி ஐந்து வருடங்களாகியும் கரு தரிக்கவில்லையே என்ற அணுகலுக்குக் கிடைத்த பதில் ‘’ அஞ்சு வருசமெல்லாம் ஒரு கணக்கா... சில பேருக்கு பத்து வருசமாகியும் குழந்தை உண்டாகியிருக்கு. எதுக்கும் டெஸ்ட் பண்ணிடலாம்’’. இன்று ரிப்போர்ட் வாங்க வரச் சொல்லியிருந்த நாள். கிளினிக்கில் காத்திருந்து அவர்கள் முறை வந்ததும் உள்ளே சென்றார்கள். டாக்டரின் பார்வை பிரசாத்தின் மீதே இருந்தது. ‘’ வசந்திக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல. ஷீ இஸ் நார்மல். பிரசாத்தின் செமன்லதான் கவுண்ட்டிங்க்ஸ் குறைச்சலா இருக்கு. ட்ரீட்மெண்ட்ல சரி பண்ணிடலாம். இது ஜெனிட்டிக் ப்ராப்ளமா கூட இருக்கலாம். பிரசாத் அவர் பேரண்ட்ஸுக்கு லேட் பேபிதானே. அதனால கூட இருக்கலாம். டோண்ட் ஒர்ரி. சரியாகிடும்’’.

வசந்திக்குதான் பெரும் ஆச்சரியமாக இருந்தது. எல்லாவிதத்திலும் அழகாய் இருக்கிற, அழகாய் சிரிக்கிற, சிரிக்கும்போது கண்களில் குழந்தைமை வழிகிற, மார்பில் முடிகள் அடர்ந்த, சமயங்களில் குளித்துவிட்டு வரும்போது சரியாகத் துவட்டாமல் மார்பின் முடிகள் மீது தேங்கி நிற்கிற நீர்த்துளிகள் சுமந்த, உடல் சேர்க்கையில் போதும் போதுமென்ற அளவுக்குத் தன்னை மூச்சுத் திணற வைக்கிற, வியர்வையிலே தனியாய் ஒரு ஆண்மை வாசனையைப் பரவவிடுகிற தன் கணவனிடம் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகும் தகுதியில்லையா? பிரசாத்தின் கை பற்றி ஆறுதலாய் அழுத்தினாள். ஏறிட்டுப் பார்த்த பிரசாத்தின் கண்களின் நிறம் மாறியிருந்தது. இருவரும் அதிகம் பேசிக்கொள்ளாமல் வீட்டுக்கு வந்தனர். சாப்பிடும்போதுதான் கவனித்தான். அவன் தட்டிலிருந்து சற்றுத் தள்ளி எறும்பு வரிசை தொடங்கியிருந்தது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியக்கூடிய எறும்பும் வரிசையும். அவன் பார்வை எறும்புகளைப் பின் தொடர, தன்னிச்சையாகக் கை இட்லியைப் பிட்டுக்கொண்டிருந்தது. தரையிலிருந்து சுவர் நோக்கிச் சென்ற எறும்புகள் அங்கிருந்து தங்கள் பயணத்தை செங்குத்தாகத் தொடங்கி சட்டென்று இடதுபுறம் திரும்பி சீப்பு, பவுடர், எண்ணை வைக்கும் கண்ணாடி ஸ்டாண்டைத் தொட்டு அங்கிருந்து எங்கோ சென்று கொண்டிருந்தன. சுவரின் பளிச்சென்ற வெளிர் நிற பச்சைப் பின்னணியில் நேர்கோட்டில் தங்கள் தேடலை நிகழ்த்திக்கொண்டிருந்தன எறும்புகள்.

வசந்தி நிமிர்ந்து பிரசாத்தின் முகத்தைப் பார்த்தாள். பிரசாந்தின் பார்வை சென்ற இடத்தை உற்று கவனித்தவள் ‘’ சித்தெறும்பு...எங்கேர்ந்து வந்துச்சின்னு தெரியலியே... இருங்க... எறும்பு மருந்தை எடுத்துட்டு வந்துடுறேன்’’ எழுந்து அறைக்குள் சென்று வந்தாள். பிளாஸ்டிக் டப்பாவில் பிளாஸ்டிக் ஸ்பூன். எறும்பு மரண மருந்து. வரிசையைக் கவனித்து எறும்புகளைப் பின் தொடர்ந்தவள், ‘’ தேங்காயெண்ண பாட்டில் சாஞ்சிருக்கு. அதுக்கு வந்திருக்கு எல்லாம்’’ என்றபடி தரையிலிருந்து எறும்புகள் சுவர் ஏறும் இடத்தில் மருந்தக் கொட்டினாள். கை கழுவிவிட்டு பிரசாத் அருகில் அமர்ந்தாள்.

‘’ சொல்றேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க. ஒங்க அம்மா அப்பா வாழ்ந்த வீடுங்கிறதால இந்த வீட்டை விட்டு வெளியே வர அடம் புடிக்கிறீங்க. நான் புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. இந்த வீட்டை வித்துட்டு சென்னையில ஒரு பிளாட் வாங்கிடலாங்க. வாசல் திண்ணை, உள்ளே முற்றம், ஊஞ்சல், சுத்தி நாலு தூணு, கொல்லைல ஒரு முருங்க மரம்னு இந்த நூற்றாண்டு வீடா இது. எப்பவும் தரை சில்லுன்னு இருக்கு. இந்த மாதிரி வீட்ல இருக்கிறது நல்லதுதான். வாழத்தான் கஷ்டமாயிருக்கு’’ இட்லி மீது சட்னி ஊற்றினாள் வசந்தி. பிரசாத்தின் பார்வை இறந்துபோன எறும்புகள் மீதிருந்தன.

டாக்டரிடம் சென்று வந்த பின்பு வசந்தியைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்வில் தவித்தான் பிரசாத். ஊரிலும் உறவினர்களிடம் இரண்டு பேரிடம் குறை என்று சொல்லியிருந்தாலும் குற்றவாளி தான் மட்டும்தானே என்று உணரும் நொடிகளில் அருவருப்பான எறும்புகள் பிரசாத்தின் உடம்பெங்கும் ஊர்ந்தன. தான் சிறு வயதிலேர்ந்து தொட்டு விளையாடிய தூண்களும் முற்றமும் திண்ணையும் விட்டுவிட்டு செல்வதற்கு அவன் மனம் இடம் கொடாமல் இருந்தது. டாக்டர் ட்ரீட்மெண்ட் தொடங்கியபின்பு வசந்தியுடன் முன்பு போல் சேர முடியாமல் திணறினான். மன ரீதியான விருப்பமின்றி கடமைக்கு எனத் தொடும் பிரசாத்தின் அணைப்பில் முன்பிருந்த இறுக்கம் இல்லாதது வசந்திக்கும் உறுத்தலாயிருந்தது. வீட்டின் தரை தன் ஈரம் இழக்காமல் அப்படியே இருந்தது. எறும்புகள் போவதும் வருவதுமாய் இருந்தன. இருவர் கண்களுக்கும் தெரியாத எறும்புகள்.

ஆபீஸிலிருந்து வந்ததுமே பிரசாத்திடம் சொன்னாள். ‘’ பாத்ரூம் போறப்ப பாத்துப் போங்க. முருங்க மரத்திலேர்ந்து நெருப்பெறும்பு இங்க கிச்சன் வரைக்கும் வந்துடுச்சி. கதவைச் சுத்தி மருந்து போட்ருக்கேன். மிதிக்காம போயிட்டு வாங்க’’ அதையும் மீறி தன் காலைக் கடித்துவிட்ட எறும்புகளைத் திட்டிக்கொண்டே காலை உதறினான் பிரசாத். ‘’ இதுக்கே இப்படியா... எங்க ஊர் பக்கம்லாம் கட்டெறும்பெல்லாம் கொடுக்கோட திரியும். ஒரு எறும்பு கடிச்சாலும் வலி உச்சிக்கு ஏறும். கொடுக்கு நம்ம வெரல்லதான் இருக்கும். அந்த வலியெல்லாம் நீங்க எப்புடி தாங்குவீங்களோ...’’ இந்த உலகத்திலேயே பிரசாத் அதிகம் வெறுக்கும் உயிரினமாய் போயிற்று எறும்பு.

ஒருநாள் மதியம் ஆபீஸில் மயங்கி விழுந்தான் பிரசாத். டாக்டரை சென்று பார்த்ததில் ஃபுட் பாய்ஸன் ஆகியிருப்பதாகவும் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று இஞ்ஜெக்‌ஷன் போட்டு அனுப்பி வைத்தார். ஆபீஸ் ஸ்டாஃபின் பைக்கில் வீட்டுக்கு வந்து இறங்கினான் பிரசாத். ஜன்னல் மூடியிருக்க கதவைத் தட்டினான். திறக்கப்படவில்லை. பெயர் சொல்லி அழைக்க அக்கம் பக்கத்தினர் எட்டிப் பார்த்தனர். போன் செய்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. பத்து நிமிடத்துக்கும் மேல் எடுக்கப்படாமல் போக எரிச்சலானான். ஊசி போட்டிருந்ததும், பைக்கில் வந்த அசதியும் உடல் அளவில் களைப்பாக்கியிருக்க, திறக்கப்படாத கதவு மனதளவில் தளர்த்தியிருந்தது. நிற்க முடியாமல் தவித்தான். பொறுமை இழந்த கணம் கதவு திறக்கப்பட்டது. ஆத்திரத்துடன் நிமிர்ந்த பிரசாத்தின் கண்களில் ஈரக் கூந்தலில் டவலைச் சுறியிருந்த, மார்பு வரை பாவாடையை ஏற்றிக் கட்டியிருந்த, வெறுமனே புடைவையை உடம்பின் மீது சுற்றியிருந்த வசந்தி தென்பட்டாள். வீட்டுக்குள் பிரசாத் நுழைந்ததும் வசந்தி உடனே கதவை மூட அவளின் கன்னத்தில் வேகமாய் இறங்கியது பிரசாத்தின் கை. முள் கிழித்தது போல் கன்னம் எரிந்தது வசந்திக்கு. ‘’ இப்ப எவன் வர்றான்னு குளிச்சு முடிச்சி சீவி சிங்காரிக்கப் போற. அரை மணி நேரமா கதவ தட்டிட்டுருக்கேன் ...ச்சே’’ எரிச்சல் பரவிய கையை உதறிக்கொண்டான் பிரசாத்.

மறுநாள் பிரசாத் வீட்டுக்கு வரும்போது ஜன்னல் மூடியிருந்தது. கதவு திறந்திருந்தது. திறந்ததும் வீடு வெளிச்சமாயிருந்ததை ஆச்சரியமாய் கவனித்தபடி உள் நுழைந்தவன், வலதுபக்கம் உத்திரத்திலிருந்த ஃபேனிலிருந்து கயிறு மாட்டி அதன் சுருக்கில் கழுத்தை நுழைத்து இறுகித் தொங்கிக்கொண்டிருந்த வசந்தியைப் பார்த்தான். பிரசாத்தின் அலறலில் அவ்வீதி அவன் வீட்டுக்குள் கூடியது. யாரோ போலீஸுக்கு போன் செய்தார்கள். விழிகள், நாக்கு வெளித்தள்ளி தொண்டை இறுகியிருந்ததில் நரம்புகள் புடைத்துக்கொண்டிருந்தன. கழுத்தைச் சுற்றியிருந்த பழைய கயிற்றின் முடிச்சில் சிறு பிசிறொன்று நீட்டிக்கொண்டிருந்தது. இறுகி மூடியிருந்த வசந்தியின் கையில் இருந்த பேப்பரைப் பிரித்துப் படித்தான் பிரசாத். 

‘ எங்கள் கல்யாணத்தின் போது யாரோ சொன்ன வார்த்தைகள் அந்த மேளச் சத்தத்தையும் மீறி என் காதில் கேட்டது. கேட்டிருக்கக் கூடாதுதான். ’ என்னதான் இருந்தாலும் அழகுலையும் கலர்லையும் மாப்பிள்ளைய விட பொண்ணு ஒரு பிடி கம்மிதான்’. என் கணவர் மிக அழகானவர். பார்வைக் குறைபாடு என்று கண்ணாடி போட்டதும் இன்னும் அழகானார். நிஜமாகவே அழகிலும் கலரிலும் என் கணவரை விட நான் குறைந்தவள்தான். சொல்லப்போனால் அவருக்குக் கொஞ்சமும் நான் பொருந்தாதவள். ஆனாலும் இந்த ஐந்து வருடங்கள் நாங்கள் மிக நன்றாகவே வாழ்ந்தோம். குழந்தையில்லா குறையைத் தவிர இந்த வீடு எந்தக் குறையும் இல்லாமல்தான் இருந்தது. என்னால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாது என்பதையும் மீறி அவர் என்னை நேசித்தார். என் கணவர் அழகில் மட்டுமல்ல; குணத்திலும் அழகானவர். அவர் நலனுக்காகத்தான் இந்த முடிவெடுத்தேன். என்னை மன்னித்து விடுங்கள்’

வசந்தி சாவதற்கு முன் ஒருமுறை குளித்திருந்தாள். தலையில் சிறிய கொண்டையிட்டு மல்லிகைப் பூ சுற்றியிருந்தாள். கயிறு இறுகும்போது உடம்பு உதறியதில் புடைவை லேசாக நெகிழ்ந்திருந்தது. முகத்து கிரீம் வாசனை அந்த இடத்தில் பரவியிருந்தது. யாரோ கவிழ்ந்திருந்த ஸ்டூலை நிமிர்த்தி வைத்தார்கள். தலையில் கை வைத்தபடி சுவரோரம் சாய்ந்து உட்கார்ந்தான் பிரசாத். அவன் காலை உரசியபடி கிடந்தது வசந்தியின் கழுத்தை இறுக்கிய கயிறு. கயிற்றிலிருந்து வந்த கட்டெறும்பொன்று பிரசாத்தின் பேண்ட்டில் ஏறி சட்டைக்கு வந்து அவன் விரலைக் கடித்தது. உதறினான். கொடுக்கை அவன் விரலில் விட்டுவிட்டு பறந்து வாசலில் நின்ற எறும்புக்கு ஒரு வாலும் ஒரு துதிக்கையும் இருந்ததை பிரசாத்தின் கண்கள் கவனித்தன.