Wednesday 31 October 2012

கொம்பன்


கொம்பன்

குருதி சிதறும் களத்தில் அலறும் களிறுகள்


யானையின் கண் அசைந்தது.இரு கைகளாலும் இறுகப் பிடித்திருந்த வாள் உயர்ந்து காற்றினை வெட்டியவாறு சரேலென கீழிறங்கியது. விழி மூடவந்த யானைச் செவிமடல்கள் ஒரு நொடி நின்று பின் விசிறின. யானையின் தந்தத்தின் மீதான சதைமீது இரத்தக் கவிச்சி உறைந்த வாள் பதிய பீறிட்ட இரத்தம் எதிரே குதிரை மீது அமர்ந்திருந்தவன் முகத்தில் பட்டுத் தறித்து குதிரையின் நெற்றியில் சிதறி இமைமயிர் நனைந்து வழிந்து கண்கள் மூடிய குதிரை முன் நகர்ந்தது. யானைச்சதையில் பதிந்திருந்த வாள் உருவமுடியாமல் பொதிந்து இருக்க, குதிரைவீரன் முழு பலமும் உபயோகித்து வாளினை உருவும் சமயம் நகர்ந்த குதிரை மீதிருந்து விழுந்தான். உடம்பெங்கும் வலி ஊடுருவியிருந்த யானை துதிக்கை உயர்த்தி நிலத்தில் வீழ்ந்துகிடந்த குதிரைவீரன் முகத்தில் அழுந்தியது. சதைமீது செருகிய வாளுடன் யானை நகர்ந்தது. பறந்து வந்த அம்பொன்று வயிற்றில் பதிய யானை  ஓடத் துவங்கியது.

நிலம் தன் நிறத்தினை மாற்றியிருந்தது. போர்க்கள பூமியின் வாசனையறிந்த பிணந்தின்னிக் கழுகுகளின் நிழல்கள் நிலத்தினில் புதிதாய் உருவாகியிருந்த சிறு சிறு பள்ளங்களில் உறைந்து தேங்கிக் கிடந்த கருஞ்சிவப்புக் குருதியின் மீது படியாமல் விலகின. சிறிது தூரம் தள்ளி வெண்மலையாய் குவிந்திருந்தன யானைத் தந்தங்கள். யானையின் பிளிறல் அலறல்களாக மாறி போர்க்களத்தை நடுங்கச் செய்திருந்தன. உடம்பெங்கும் செருகியிருந்த அம்புகளுடன் நகர்ந்த யானைகளின் பாதத்தில் நசுங்கிக் கூழாயின களமெங்கும் சிதறியிருந்த உடல்கள். இறந்து வீழ்ந்திருந்த யானைகளின் தந்தங்களை யானையாட்கள்  வாள் கொண்டு அறுத்து எடுத்தவண்ண்மிருந்தனர். தடாரியும் முழவும் உச்சமாய் ஒலித்துக் கொண்டிருக்க வாளினால் அறுபட்ட வீரனின் தலை மட்டும் தனியே உருண்டுவர, அதை தன் துதிக்கையில் ஏந்திய யானை வெகு தூரமாய் வீசி எறிந்தது. காற்றில் விரைந்த தலை குவித்து வைக்கப்பட்டிருந்த தந்தங்களின் நடுவில் விழுந்தது. பெரும் யானை மீதிருந்து குதித்த குஞ்சரமல்லன் அவனது கையில் நீண்ட வேலினை உயர்த்திப் பிடித்தவாறு மிக ஆவேசமாய் தன்னை நோக்கி ஓடி வருவதைச் செவியுற்ற அந்த யானைவேகமாய்த் திரும்பி கொம்பினால் அவன் வயிற்றில் செருகியது. குஞ்சரமல்லனின் முதுகில் வெளிவந்த கொம்பின் நுனியிலிருந்து இரத்தம் பூத்து வழிந்தது. தலையினை வேகமாய்ச் சிலுப்பியபடி அவனை உதற, கிழிந்த வயிற்றுடன் காற்றில் பறந்தவன் தலை விழுந்த இடத்தில் போய் விழுந்தான்.

 திடீரென்று லேசான மயக்கம் யானையினை ஆட்கொண்டது. களத்தில் பாதம் ஊன்றி நிற்க முடியாமல் சிரமப்பட்டது. கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள சிறு துவாரத்திலிருந்து கடும் மணத்துடன் பிசுபிசுப்பாய் மதநீர் வழிய அதன் குறி விறைத்து பீறிட்டது சுக்கிலம். யானை பதட்டத்திலிருந்த கணத்தில் காற்றில் சீறிவந்த வாள் அதன் துதிக்கையினை வெட்டியது. நிலம் அதிர துண்டாகி விழுந்தது துதிக்கை. அறுபட்ட இடத்திலிருந்து புனலெனப் பொங்கியது குருதி. நின்ற நிலையிலேயே நிலத்தில் சாய்ந்தது யானை. யானையைச் சாய்த்த வீரன் அப்போதுதான் கவனித்தான். அருகாமையில் மற்றொரு யானையின் மூச்சு. கையில் பிடித்திருந்த வாளினை வீசினான். யானையின் முழங்காலில் குத்தி நின்றது. யானை அவனை நோக்கி முன்னேறியது.

வேறு ஆயுதம் ஏதுமற்ற நிலையில்தான் உணர்ந்தான் தன் மார்பில் ஒரு வேல் செருகியிருப்பதையும் சந்தனம் தடவிய மார்பு முழுவதும் செந்நிறமாய் மாறியிருப்பதையும். யானை வேட்டையில் ஈடுபட்டிருந்த அவ்வீரன் தன் மார்பில் செருகியிருந்த வேலினையே மறந்திருந்தான். வீரம் வலியை வென்றிருந்தது.  சற்றும் யோசிக்காமல் தன் மார்பிலிருந்து வேலினை உருவியவன் தன்னை நோக்கி வந்த யானையின் சிரம் நோக்கி எறிந்தான். தலையில் செருகிய வேலுடன் திகைத்து நின்றது யானை. வேல் பதிந்த இடத்தின் அருகிலேயே சீழ் வழிந்தபடி புண் இருந்தது. யானையின் ஒரு கொம்பு பிடுங்கப்பட்டிருந்தது. உடம்பெங்கும் நிறைய அம்புகள் செருகப்பட்டிருக்க ஏகரத்தம் வெளியான நிலையில் வலி தாள முடியாமல் தள்ளாடியபடி இருந்த யானை, கால்களை மடித்து நிலத்தில் அமர்ந்து துதிக்கை உயர்த்த நினைத்து முடியாமல் சாய்ந்தது. யானையைக் கொன்ற வீரனும் தள்ளாடி யானை மீதே விழுந்தான். யானையின் உயிர் பிரிந்த அதே கணம் அவ்வீரனின் உயிரும் பிரிந்தது.

வானேகும் இறக்கையற்ற கருஞ்சர்ப்பங்கள்

சேரனின் புருவங்கள்  புன்னகையில் நெறிந்தன. களத்தின் நடுவில் தனது பட்டத்து யானை மீது அமர்ந்திருந்தான்.குன்றின் மீது ஏறி நின்று யானைப்போர் கண்ட தன் முன்னோர்களை எண்ணிக்கொண்டான். தனது வில் முத்திரை பதித்த கொடியினைத்தாங்கி நிற்கும் குன்றினை ஒத்த பட்டத்து யானையைத் தடவிக் கொடுத்தான் மன்னன். துதிக்கை உயர்த்தி விண் நடுங்கும் வண்ணம் பிளிறலை வெளிப்படுத்தியது யானை. புருவங்களின் மீது அழகாய்க் கோலம் வரையப்பட்டு நெற்றி நடுவில் செந்தூரமிட்டு கம்பீரமாக நின்றிருந்தது அரசனின் யானை. களத்தில் மன்னன் கண்கள் திரும்பிய திசையெல்லாம் களிறுகள் அலறின. வீரர்கள் சுற்றிச் சுழன்றபடி யானையின் உயிர் கவர்ந்து அரசனின் பாதத்தில் கொண்டு சேர்த்தனர்.

யானை வெற்றியின் அடையாளம்.யானை ஒன்றினை இழந்தாலும் அது பகை மன்னனுக்குப் பேரிழப்பாகும். இழப்பு அவன் வீரம் சேர்ந்தது. மானம் சார்ந்தது. போரின் மூன்றாம் நாள் அது. காலையில்தான் யானைப்படைகள் தங்கள் பணியைத் துவக்கியிருந்தன. வயிரமும் வலம்புரிச்சங்கும் ஒலிக்கத் துவங்கிய போர், மாலை நெருங்குவதற்குள் பகைவனின் படையில் பாதியினையாவது அழிக்கும் திட்டம் மன்னனிடமிருந்தது. அவனின் வீரப்பட்டியலில் அவன்  கவர்ந்த ஆயிரமாவது யானையின் உயிர் இடம் பெறுவதற்கு இன்னும் சில தூரமே இருந்தது. தன்னைப்பற்றிப் பாடப்போகும் பரணி எண்ணி மன்னன் நெஞ்சு விரிந்தது. 

பயந்து பிளிறிக்கொண்டு ஓடிய ஒரு யானை, நிலத்தில் அங்கங்கே சிறு பள்ளமாய் தேங்கியிருந்த இரத்தக் குளத்தின் மீது பாதம் பதிக்க தெறித்து காற்றில் விசிறப்பட்ட இரத்தம், பட்டத்து யானையின் பிடரியில் மிக வசதியாய் அமர்ந்திருந்த மன்னனின் முகத்தில் பட்டு அவன் அருகில் இருந்த கொற்றவையின் உதட்டில் விழுந்து உடம்பெங்கும் வழிய, சேரன் சிரித்தான். கொற்றவை கழுத்தில் சூடியிருந்த வஞ்சிப் பூமாலை குருதியில் மலர்ந்திருந்தது. மன்னனின் முழுக் கவனமும் தழும்பனின் மீதிருந்தது. தழும்பனுக்கு இது ஆறாவது போர். அதன் உடம்பெங்கும் விரியும் வடுக்கள் அளப்பரிய வீரத்தை விளக்கும். பத்தடிக்கும் மேலான உயரத்துடன் அகலமான பாதங்கள் எடுத்துவைத்து நடக்கும் ஒவ்வொரு  அடியிலும் கம்பீரம் தெறிக்கும். 

நீளமாக, நுனியில் லேசாக வளைந்து கூர்மை நிரம்பிய கொம்புகளும் அத்தனை பெரிய உடலில் தேடிக் கண்டுபிடிக்கும்படியான சிறிய கண்களும் சிவந்த உதடுகளும் தேடாமலே பளீரெனப் பார்வையில் அறையும் கண்களாய் விரிந்திருக்கும் விழுப்புண் அடையாளங்கள். தழும்பன் வேழப்படைத் தலைவன். தலைவனுக்கு தலைவனை மிகப் பிடிக்கும். முந்தைய போரில் தழும்பன் நிகழ்த்திய அழிவு கொஞ்ச நஞ்சமல்ல. களம் புகுந்து போர் இசை கேட்டுவிட்டால் போதும். குஞ்சரமல்லனின் இரும்பு அங்குசமே சற்று பயம் கொள்ளும்படியாய்த்தான் ஆட்டம் இருக்கும். 

அதிலும் பம்பையும் கடிகையும் தண்டிகையும் இணைந்து முழங்கும் உக்கிர இசை வீரர்களின் நரம்புகளுக்கு் வெறியூட்டுகிறதோ இல்லையோ தழும்பனின் சிறிய செவிகளுக்குள் நிகழ்த்தும் வெற்றி மந்திரம் கஜ சாஸ்திரம் பயின்ற அரசனும் அறிய முடியாதது. வீரம் தளும்ப தழும்பன் சுழற்றி வீசிய வீரர்கள் எத்தனை? இடித்த கோபுரங்கள், அழித்த மாடமாளிகைகளுக்கு கணக்கில்லை.  பகைவீரர்கள் வீசிய ஈட்டிகளை நெடுங்கரத்தில் வாங்கி திருப்பி வீசிக் கொன்ற உயிர்கள் பல. தழும்பனின் வீர வெளிப்பாடு கண்டு வியந்த மன்னன் சென்ற போர் வெற்றி விழாவின்போதுதான் தழும்பன் என்ற விருதுப்பெயர் சூட்டினான். 

மேற்கில் சூரியன் மறைய முற்பட அன்றைய தினத்துக்கான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. செருக்களத்தினை இசை வெறியூட்டிக்கொண்டிருந்தவர்கள் தங்கள் பணியை நிறுத்தினர். இசை நின்றதுமே கழுகுகளின் ஓலம் தொடங்கியது. ராட்சதக் கழுகுகள் போர்முடிந்த நிலத்தில் வட்டமிட்டு இறங்கின. தங்களின் பெரும் அலகால் களமெங்கும் அறுந்து சிதறிக்கிடந்த துதிக்கைகளைப் பற்றியபடி வானத்தில் பறக்கத் தொடங்கின. சிறகு முளைத்த சர்ப்பங்களாய் பறந்த அந்த கழுகுகளைக் கண்ட மன்னன் தன் இருக்கையிலிருந்து  திரும்பிப் பார்த்தான். தேர் போன்ற அமைப்புடன் கூடிய பெரிய வண்டிகள் நிறைய தந்தங்கள் குவித்துவைத்து படை வீட்டினை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. விழுப்புண்கள் நிறைந்த மன்னன் மகுடத்தில் கர்வம் ஊறியது. இறக்கை முளைத்த கரும் பாம்பென பறந்து கொண்டிருந்த கழுகொன்றின் அலகிலிருந்து நழுவிய துதிக்கை பூமி நோக்கி வந்தது. அத்தனை உயரத்திலிருந்து விழுந்த துதிக்கை தன் கண்களின் மீது மோதியதும் திடுக்கிட்டு விழித்தார் மோசிகீரனார்.


வாரணம் ஆயிரம் வீழ்த்திய தமிழ்



இதயம் முரசறிவித்துக் கொண்டிருந்தது. வியர்த்திருந்தார். தான் படுத்திருந்த கட்டிலை விட்டு கணமும் தாமதியாமல் இறங்கி கீழே நின்றார். உடல் அதிர்வு அடங்கவில்லை. கட்டிலை உற்றுப்பார்த்தார். தந்தமிழந்த ஆயிரம் யானைகள் ஒன்றாகப் படுத்திருப்பதுபோல் காட்சி  தோன்றி மறைந்தது. இந்த ஒரு கட்டில் செய்வதற்கு எத்தனை தந்தங்களை சீவி பக்குவப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு எத்தனை யானைகளை பலி தந்திருக்க வேண்டும். மோசிகீரனாரின் செவிக்குள் யானைகளின் கதறல். அருகில் நின்று புன்னகையுடன் கவரி வீசிக்கொண்டிருந்த மன்னனை பெருமூச்சுடன் நிமிர்ந்து நோக்கினார் புலவர். பலவீனமாய் உதடுகளை அசைத்தார். '' முரசு இரத்த வேட்கை கொண்டது. அச்சந்தருவது. அதன் குற்றமற்ற வாராய் இழுத்துக்கட்டி வாரின் கருமையான பக்கம் அழகு பெற மயிலின் தழைத்த நீண்ட பீலியும் ஒளிரும் பொறி கொண்ட அழகிய பூமாலையும் தளிருடன் உழிங்கைபூ விளங்கசூடி நீராடச்சென்றதை அறியேன். எண்ணெயின் நுரையை முகர்ந்தது போன்ற மென்மையான மலர்கள் தூவிய படு்க்கை மேல் தெரியாமல் படுத்து உறங்கிவிட்டேன்.என்னைப் பார்த்து கோபம் கொண்டு இரண்டு துண்டாக்காமல் நின் வாளின் வாயை ஒழித்தாய். அது ஒன்றே போதும். நீ நல்ல தமிழ் முழுவதும் அறிந்தவன் என்பதை அறிவதற்கு. என்னைக் கொல்லாமல் விட்டதோடு சும்மாயிருக்காமல் என்னிடம் வந்து நின் வலிமை மிக்க முழவு போன்ற தோளை ஓங்கி குளிர்ச்சியான அகன்ற இடம் முழுவதும் மணம் வீசக் கவரி வீசினாய். வெற்றிபெற்ற குரிசில். நீ இங்கு இப்படிச் செய்தது இந்த உலகத்தில் புகழுடன் வாழ்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அங்கு உயர்ந்த நிலையிலுள்ள தேவ லோகத்தில் வாழ முடியாதுதென்பதைக் கேட்டதன் பிரதியுபகாரமா?- ( புறநானூறு- 50)    களம் வனம் கடந்த இறுதி

வரிசையில் நின்றிருந்த கொம்பனின் முகம் இறுகிப் போயிருக்க எவ்வித சலனத்தையும் வெளிப்படுத்தாத கண்களின் நிழலில் பட்டத்து யானை மீது அமர்ந்திருந்த மன்னன் தெரிந்தான். லேசாகத் தலை குனிந்த கொம்பனின் துதிக்கை நுனி நிலம் உரச இரத்தம் ஊறிக்கிடந்த  பூமியினைக் கண்டதும் தாளா வலியொன்று உடல் முழுவதும் ஊடுருவி நகர்ந்ததை உணர்ந்தது. குதிரைகள் பூட்டிய பெரிய பெரிய வண்டிகளில் குவித்துவைத்துக் கொண்டு செல்லப்படும் தந்தங்களைக் காண கொம்பனின் வலி மேலும் அதிகமானது. காலம் காலமாய் மனிதன் தன் வீரத்தினை முரசறிவிக்கக் கொன்று குவித்த தன் மூதாதையர்களை எண்ணி மனம் கலங்கியது. காலையில் கட்டுத் தறியிலிருந்து    அழைத்து வரும்போதே ஒரு முடிவிலிருந்தது கொம்பன். இனியும் மனிதன் கையில் பொம்மையாய் அவனின் இரும்பு அங்குசத்துக்கு அடிமையாய் இருக்க முடியாது எனத் தீர்மானித்திருந்தது. வயிரமும் வலம்புரிச்சங்கும் ஒலிக்கத் துவங்கிய சில நிமிடங்களில் மெல்லப் பின் நகர்ந்த கொம்பன் சட்டென்று திரும்பி தன் நடையை வேகப்படுத்தியது. கொம்பனின் பிடரியில் அமர்ந்திருந்த குஞ்சரமல்லனுக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை.   தன் கால்களினால் கொம்பனின் தாடைப்பகுதியைத் தட்டினான். கொம்பனிடம் வேகம் கூடியது. போர்க்களத்தில் யானைகள் அங்குமிங்கும் ஓடியபடி சமர் புரிந்து கொண்டிருக்க கூட்டத்திலிருந்து பிரிந்து களம் விட்டு வெளியேறி காட்டுப்பகுதியினை நோக்கி ஓடிய கொம்பனைக் கவனிக்க யாருமில்லை. ஒரு மணல் மேட்டின் மீது கொம்பன் ஏறி இறங்க நிலைகுலைந்த குஞ்சரமல்லன் தவறி நிலத்தில் வீழ்ந்தான்.  திரும்பிப் பார்க்காமல் ஓடியது கொம்பன். விழிகளின் மூலையில் தெரிந்த அங்குசத்தின் முனையை விழிமூடி முறித்துப் போட்டது. 

பச்சைப் பசேலென விரிந்தது காடு. வலது பாதத்தினை உயர்த்தி வைத்து காட்டுக்குள் நுழைந்தது கொம்பன். வழி என்று ஏதுமில்லை. சுவடேதும் படியாத அடர்ந்த கன்னி வனம். மரங்களும் கிளைகளும் நிரம்பியிருக்க துதிக்கையினால் துதிக்கையினால் கிளைகளை வளைத்தது. முறித்து எறிந்தது. காட்டுக்குள் போர் ஒலிகள் இல்லை. கொம்பன் நிற்காமல் ஓடியது. திடீரென்று காடு முடிந்து வயல்வெளி விரிந்தது. வரப்புகளை மிதித்துக்கொண்டு ஓடியது. தூரத்தில் சாலை தெரிந்தது. அப்போதுதான் கவனித்தது தன் அருகிலேயே ஓடி வந்து கொண்டிருந்த பெண் யானையை. மாதங்கி.


மாதங்கி பெரும் அழகி. மன்னனுடன் நகர்வலத்தில் வருபவள். கழுத்து மணிகள் ஒலிக்க நாணம் குவித்து வைத்து மென்மையான நடையுடன் மாதங்கி மன்னனைத் தாங்கி வலம் வருவதைக் காணும் நகர் மக்கள் மாதங்கியி்னனழகில் மனம் தொலைப்பதா, மாதங்கியின் பிடரியில் அமர்ந்திருக்கும் மன்னனின் கம்பீரத்துக்கு மயங்குவதாவெனத் தவிப்பார்கள். கொம்பனின் கனவுகள் மாதங்கியின் எச்சில் முத்தங்கள் நிறைந்தது. எப்போது தன்னுடன் மாதங்கி இணைந்தது எனத் தெரியாத கொம்பனின் நடையில் சி்று உற்சாகம். இரு யானைகளும் ஓடிக்கொண்டிருக்க சாலையின் இரு புறங்களிலும்  நிறைய கட்டடடங்களும் வீடுகளும் தென்பட்டன. மெலிதான வெப்பவலை தன் முகத்தில் மூடுவதை கொம்பன் உணர்ந்த நேரம் அந்த வளைவினைச் சந்தித்தது.அபாயகரமான வளைவு அது. சாலையின் வளைவில் அதி வேகமாய்த் திரும்பிய, காட்டுமரத் துண்டுகளை ஏற்றிவந்த லாரி யானையின் மீது மோதிக் கவிழ்ந்தது. சிறு சப்தமின்றி நிலத்தில் சாய்ந்து உயிர்விட்டது பெண் யானை. கண்களிலிருந்து வழிந்த இரத்தம்   உலர் மண்ணை ஈரமாக்க கொம்பன் நிற்காமல் ஓடியது. 

மூச்சிரைத்த கொம்பனின் கண்களில் இருப்புப் பாதை தென்பட்டது. ஆட்களற்ற பாதுகாப்பான கதவுகளற்ற சாலையின் நடுவில் குறுக்கிட்ட இரும்புத் தண்டவாளங்கள் கண்டதும் குழம்பிய கொம்பன் திசை தடுமாறி இரும்புப் பாதையின் ஊடே ஓடியது. எதிர் திசையிலிருந்து வந்த சத்தம் கேட்டதும் நின்றது. வந்த பாதையிலே திரும்பி ஓடமுயல... கொம்பனால் நகர முடியவில்லை. தண்டவாள இடுக்கில் சிக்கியிருந்தது கொம்பனின் பாதம். ஓசை அருகில் கேட்டது. கொம்பன் துதிக்கை உயர்த்தி பிளிறியது.உடல் அசைத்தது. ஒரு அடிகூட கால்களை அசைக்க முடியாமல் கதறியது. எதிரே ரயிலைப் பார்த்தது கொம்பன். அதன் விழிகள் விரிந்தன.

ஆவேசமாய் பாய்ந்துவந்த மன்னன்  துதிக்கையினை வெட்டினான். தந்தம் அறுத்து அமலையாடினான். காடுகளை அழித்தான். சமநிலமாக்கப்பட்டு மனிதன் வசிக்க வீடுகள் முளைத்தன. வாழ இடமின்றி வெளியேறிய யானைகள் கூட்டம் கூட்டமாய் வாகனங்களில் அடிபட்டு இறந்தன. மரங்களின்றிப் போனதால் மழையின்றி நீர் நிலைகள் வற்றி தாகம் கொண்ட யானைகள் மதம் பிடித்து அலைந்தன. அங்குசம் முறித்துப் போட்டன. பாகன்களை எறிந்தன. துப்பாக்கி உயர்த்தி யானைகளைச் சுட்டான் ஒருவன். தலைகளை வெட்டி வரவேற்பறையில் வைத்து அழகு பார்த்தான். மமதை கொண்ட மனிதனுக்கு எல்லாமே விளையாட்டாயிற்று. ஆதி அடிமை வாசம் மாறா சில  யானைகள் துதிக்கையேந்தி பிச்சையெடுத்தன. ஆயிரம் பொன் மதிப்புடைய யானையின் நாசி முனையில் அலுமினியக் காசினை வைத்து ஆசி பெற்றான் மாமனிதன். அத்தனை பலத்தினையும் உணராமல்  ஆசி தந்து நகர்ந்தன யானைகள். அதன் எண்ணிக்கை குறைந்தன. கண்காட்சியில் வைக்கப்படும் உயிரானது  யானை. கொம்பன் விழிகளை மூடியது. 

வேகமாய் வந்த இரயில் கொம்பன் மீது மோதியது. கால் இரும்புப்  பிடியில் சிக்கியிருக்க இரத்தம் கக்கியபடி சாய்ந்த கொம்பனின் கால் எலும்புகள் முறிந்தன. பெரும் ஓலம் எழுப்பியவாறு நிலத்தில் வீழ்ந்தது. உயிர் பிரியும் முன்பு தன்னுடன் இணையாய் ஓடிவந்த மாதங்கியினை ஒரு கணம் எண்ணியது. மெல்ல கண்களை மூடியது. அசைந்து கொண்டிருந்த செவி மடல்களின் இயக்கத்தினை  நிறுத்தியிருந்ததது உலகின்  கடைசி யானை.

முற்றும்.


Thursday 25 October 2012

பெருந்திணைக்காரன்




பெருந்திணைக்காரன்

ரவி சித்தப்பாவை பெஞ்சில் படுக்க வைத்திருந்தார்கள்.ஏகப்பட்ட மாலைகள்.கடைசி நொடியில் அவர் விலக்க முயன்றிருக்கக் கூடிய வலி முகத்தில் நிரந்தரமாய் உறைந்திருந்தது. எப்போதும் சித்தப்பாவின் கண்தான் முதலில் சிரிக்கும். பிறகுதான் மீசை, உதடு என்று சிரிப்பு விரியும். எவ்விதச் சலனுமுமின்றி மூடியிருந்த கண்களுக்குள் கண்ட கடைசிக் காட்சியின் பிம்பம் பிரித்துப் பார்க்கும் ரகசிய ஆசை அந்த வேதனையிலும் இவனுக்குள் கிளர்ந்தது. மீசைஎன்றால் கம்பீரம் மட்டுமல்ல. அத்தனை மென்மையும் கூட. லேசாக நரைத்திருந்தாலும் கம்பீரம்  கொஞ்சமும் குறையவில்லை. புன்னகை தொலைந்த முகத்தை பார்க்கப் பார்க்கத் தாங்கவில்லை. பெரிதாய் அழவும் முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்திருந்தது.
சித்தப்பாவை மதியம் போல் குளிப்பாட்டினார்கள். தலையிலிருந்து ஊற்றிய தண்ணீரில் நனைந்த நரைத்த முடியடர்ந்த நெஞ்சை அழுந்தத் துடைத்துவிட வேண்டும் போலிருந்தது. பரிமளமா நாற்றமா எனத் தீர்மானிக்க முடியாத அத்தர் மனம் அப்பிரதேசமெங்கும் துக்கத்தின் வாசனையை பரப்பியிருந்தது. சித்தப்பாவின் வாசனையோ வேறு. அதை இனி உணர முடியாது என்று நினைக்கும்போதே சுவாசிக்க சிரமமாயிருந்தது. தான் அணிந்திருந்த கட்டம் போட்ட வெள்ளை முழுக்கை சட்டையை ஒருமுறை ஆழ முகர்ந்து பார்த்துக்கொண்டான். யாரோ ஒருவர் சித்தப்பாவின் பழைய வேட்டி முடிச்சை அவிழ்த்து நழுவவிட்டுச் சட்டென்று அதே வேகத்தில் புது வேட்டி மாற்றினார். சித்தப்பாவின் பிறப்பேந்திரியம் நொடிப்பொழுது கண்ணில் பட்டு மறைந்தது. கறுப்புச் சாம்பல் பூக்களால் அழகாகக் கோர்த்திருந்த சங்கிலியின் முதல் இணைப்பு இவனுக்குள் லேசாக விரிவுபட்டது. நிறையக் காற்று தேவைப்பட்டது.

சித்தப்பாவின் இறுதிப் பயணம் கொட்டு முழக்கோடு புறப்பட்டது. சுடுகாட்டில் வரட்டி அடுக்கிச் சித்தப்பாவைப் படுக்க வைத்துக் கை காலை மடக்கிக் கட்டியபின் ,முகம் மூடுவதற்கு முன்பாக, வாய்க்கரிசியும் காசும் நெஞ்சின் மீது போட்டுவிட்டுப் பானைத் தண்ணீரில் கைகழுவி உதறியபோதும் அழுகை வரவில்லை. திகுதிகுவெனப் பற்றியெரிந்த சித்தப்பா கரும்புகையை எழுப்பியபடி காற்றோடு கலந்தார். அவ்வளவுதான். இனிச் சித்தப்பாவின்  வெதுவெதுப்பான உள்ளங்கையைப் பற்றியவாறு பேசிக்கொண்டிருக்க முடியாது. அவர் நெஞ்சில் தலை சாய்த்து தூங்க முடியாது. வியர்வையூறிய அவருடைய நெற்றியில் பதிக்கும் உதடுகளில் பரவும் உப்புச்சுவைக் கிடைக்காது. இவனுக்குள் மேலும் சங்கிலி இணைப்புகள் சில பட்பட்டென்று விடுபட்டன. தளர்ந்து திரும்பிய வழியில் புதரோரம் ஒதுங்கி உட்கார்ந்தான். சிறுநீர் பெருகி மடை திறந்ததுபோல் வெதுவெதுப்பாகக் கொட்டியது. நேற்றிரவிலிருந்து சிறுநீர் கழிக்காதது ஞாபகம் வந்தது.

திடீரென்றுதான் உணர்ந்தான். மலம் கழிப்பது போல் உட்கார்ந்துதான் எப்போதும் இவன் சிறுநீர் கழிப்பான். இப்படிக் கால்விரல்களை மட்டும் அழுந்தப் பதிந்து பாதத்தை உயர்த்தியவாறு உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது சித்தப்பாவின் வழக்கம். இனிச் சாகும் வரையிலும் சித்தப்பாவாக இருக்கப் போகிறோமென்று எழுந்து நடந்தபோதே இவனுக்குத் தெரிந்து போயிற்று. மூளைக்குள் இருள் பரவ அப்படியே தரையில் சரிந்தான்.



*          *             *

ரவி சித்தப்பாவின் மடியில் இவன் அமர்ந்திருந்தான். ஆற்றுப் பாலத்தின் நிழல் இருவரையும் அணைத்திருந்தது. நிழல் முடிந்த இடத்திலிருந்து  தொடங்கிய வெயில் போர்த்திய வறண்ட ஆறு மிகத் தொலைவில் கானல் நீரைக் காட்டித் தத்தளித்தது. நீர்ப் பிம்பங்களாய் ஆடியபடி இவன் நண்பர்கள் தெரிந்தார்கள். ஏதோ ஒரு விளையாட்டு. சற்று முன் வரை அவர்களோடு ஆட்டத்தில் இவனுமிருந்தான். விளையாட்டு என்றால் அவர்களுக்கு ஆறுதான். பிள்ளைகள் விளையாடுவதற்காகவே வறண்டுவிட்டதைப்போல்இவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே  ஆறு அப்படித்தான் இருக்கிறது. வருடம் முழுவதும் உயரக் கரைகளில் திமிறியபடி வெயில் வழிந்தோடும். இவனுக்கு அன்று புதிதாய் ஒரு விளையாட்டுக் காட்ட வந்த சித்தப்பாவின் வாசனை காற்றைத் தழுவி இவன் நாசியில் நுழைந்து மனம் முழுவதும் நிரம்பியிருந்தது.

சித்தப்பாவின் மேலுதட்டைக் கவ்வும் பெரிய மீசை இவனுக்கு மிகவும் பிடிக்கும். மீசை என்றால் என்னவென்று இவனுக்குத் தெரியும். மீசை என்றால் அது அப்பா அல்ல. அப்பாவுக்கு மீசை முளைக்கும். மூன்று நாட்களுக்கொருமுறை செய்யும் சவரத்தில் மீசையோடு மென்மையும் காணாமல் போய்க் கடுமை சேர கன்னப் பகுதியில் சதையுமற்ற மிக ஒல்லியான அப்பா இவன் வெறுக்கும் ஆட்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றார். இவனுடைய பள்ளிக்கூட வாத்தியார்கள் அனைவருக்கும் சிறியதும் பெரியதுமாய் மீசை இருக்கும். கணக்கு வாத்தியார் கண்ணன் உயரமாகத் தடியான உருவத்தில் அடர்ந்த மீசையுடன் நடந்து வந்தால் மற்ற வாத்தியார்கள் அவர் கம்பீரத்துக்கு  முன்னால் காணாமல் போவார்கள். மீசையென்றால் கண்ணன் வாத்தியார் போல் கம்பீரம், தனபால் வாத்தியார் போல் அழகு, மணிராஜ் சார் போல் படிப்பு என்றிருந்தவனுக்குப் பட்டாளத்திலிருந்து வந்திறங்கிய சித்தப்பாவின் மீசை தன் அப்பாவுக்கு எப்படி இருக்கவேண்டும் என இவன் எதிர்பார்த்திருந்தானோ அப்படியே இருந்தது.

பல வருடங்களுக்குப் பிறகு பட்டாளத்திலிருந்து வந்திருந்த சித்தப்பாவிற்கு காடை சமைத்து விருந்து நடந்தது. தின்றது செரிக்க இவன் ஆற்றுக்கு விளையாடச் சென்றிருந்தான். கோடை விடுமுறை என்பதால் பிள்ளைகள் குழுமியிருந்தார்கள். தனித்துக் கிடந்த ஆறு வா வா என்று அழைத்துப் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடிக் களைத்தது. விளையாடிக் கொண்டிருந்தவன்  சித்தப்பாவைக் கண்டதும் சந்தோசத்தில் பூரித்தான். பாலத்து நிழலில் அமர்ந்த சித்தப்பா சிகரெட் பற்றவைத்ததும் பரமு'' ஐயைய...என்னடா ஒங்க சித்தப்பா பீடிஎல்லாம் குடிக்கிறாரு?'' என்று முகம் சுளித்தான். இவனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது. சட்டென்று சொன்னான். '' அவரு வேலை பார்த்த இடத்துல இதெல்லாம் குடிக்கணும்டா.'' எதிலும் அவரைக் குறைத்துப் பேச விருப்பம் கிடையாது. அவர் தன் உருவகம். பிற்காலத்தில் இவன் ரவி சித்தப்பாவாகத்தான் போகிறான்.

பரமுவை விட்டு விலகிச் சித்தப்பா அருகில் சென்றான். இவனைக் கண்டதும் சிரித்த சித்தப்பாவின் நெஞ்சின் மீது தங்கச் சங்கிலி வெகு அழகாக புரண்டு கிடந்தது. சித்தப்பாவின் மூக்கு வழியே புகை வெளியேறுவதைக் குதூகலமாய் கவனித்தவனிடம் கேட்டார் '' வெளையாடப் போகல?''
''அப்புறம் வாறேனுட்டேன்.''
சரி. இப்பிடி வா.''
அழைத்து மடியில் அமரவைத்துக்கொண்ட சித்தப்பாவிடம் வாசனை இருந்தது. இவன் விரும்பும் வாசனை. வந்த அன்றே மிலிட்டிரி ரம் என்று சொல்லி அப்பாவுக்கு ஒரு பாட்டில் தந்தபோது அவர் பெட்டியில் வேறேதோ பாட்டிலும் இருந்ததைக் கவனித்திருந்தான். அதிலிருந்த பொன்னிறத் திரவம் ஊறவைத்த எச்சிலைத் தொண்டை விழுங்கியது. ஒருமுறை சித்தப்பா அதை அருந்தியபோது இவன் அருகில் இருந்தான். பின்பு சித்தப்பாவின் வார்த்தைகள்  அந்த வாசனையில் நனைந்து வந்தன. சித்தப்பா எப்போதாவது போட்டுக்கொள்ளும் சென்ட் வாசனையும் அருந்தியிருந்த பானத்தின் வாசனையும் கூடுதலாய் அவருக்கே உரிய வியர்வை வாசனையும் ஒன்றாய்க் கலந்து அவரைச் சுற்றியிருந்த  காற்றின் மணத்தை மாற்றியிருந்தன.சுவாசிப்பின் வழி இவன் வேறுலகம் சென்றிருந்தான். வேட்டி கட்டியிருந்த சித்தப்பாவின் மடியில் அமர்ந்த இவன் நினைவுகளில் பாலத்துக் காற்று பூஞ்சை பூசி மயங்கச் செய்திருந்தது.

முடியடர்ந்த முரட்டுக் கையால் மென்மையாய் அணைத்திருந்த சித்தப்பா இவன் இடதுதோளின் மீது முகம் அழுத்தி ஆழமாக மூச்சிழுத்தார். விரல்கள் வருடியபடி மார்பிலிருந்து  மெல்லக் கீழிறங்கி நாபி தாண்டியபோதே இவனுக்கு உடம்பெங்கும் சிலிர்ப்பான கூச்சம் எழுந்து அடங்கியது. கண்களை மூடிக்கொண்டான். அவர் மீசை இவன் காதுமடளைத் தொட்டு உரசியவாறிருக்க ட்ரவுசரை மீறி உட்சென்ற சித்தப்பாவின் விரல்கள் இவனை வருடத் தொடங்கின. அவர் பிடிக்குள் ஒரு கோழிக்குஞ்சு போல் ஒடுங்கியிருந்தான். அந்தக் கதகதப்பு இவனுக்குத் தேவையான பாதுகாப்பைத் தந்திருந்தது. அவர் விரல்பட்ட இடம் தனியாகவும் உடல் தனியாகவும் இரண்டாய் மிதந்தான். எவ்விதக் கிளர்ச்சியும் ஏற்படுத்தாமல் சுண்டி இழுத்தாற்போல் சிறுவலி மட்டும் தந்து சட்டென்று சோப்பு நுரைபோல் வெளிப்பட்டது. சித்தப்பாவின் கைகளில் பட்டு, இவன் ட்ரவுசரிலும் படிந்தது. மயக்கமா களைப்பா என்று புரியாத நிலையில் அவர் நெஞ்சில் சாய்ந்துகொண்டான். ''வீட்டுக்குப் போறியா...இல்ல வெளையாடவா?'' காதோரம் கிசுகிசுத்த சித்தப்பாவிடம் '' தூக்கம் தூக்கமா வருது'' என்றபடி கண்ணயரத் தொடங்கினான். அவரும் கண்களை மூடிப் பாலத்து சுவர்மீது சாய்ந்து கொண்டார். பெரும் இருள் இருவரையும் போர்வையாய் மூடியது.


*                *                   *

இவன் துரத்த வெயில் ஓடிக்கொண்டிருந்தது. உடல் முழுவதும் வியர்வை வழிந்திருக்க மூச்சிறைத்து நின்றவன் சித்தப்பாவை தேடினான். பாத்தி கட்டி நீர் பிரித்துக்கொண்டிருந்த சித்தப்பா அங்கிருந்தபடியே '' என்னடா?'' என்றார்.
''அம்மா ஒங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னுச்சு.''
சரி... போ வர்றேன்.''
கால்களைச் சுடுமணலில் ஓங்கி உதைத்து கைகளால் காற்றைத் திருகி உடல் திருப்பி உதடுகள் துடிக்க பெரும் சப்தத்துடன் வெகுவேகமாக வீட்டுக்கு விரைந்தான்.

அன்றிலிருந்து மூன்றாம் மாதம் இவன் ஏழாம் வகுப்புக் காலாண்டுத் தேர்வு விடுமுறையின் ஒரு நாளில் சித்தப்பாவுக்கு திருமணம் நடந்தது. பள்ளிபடிப்பு முடிந்து அடங்காதக் காளையாய் திமிறி திரிந்து கொண்டிருந்த ரவி பட்டாளத்துக்குச் சென்றபின் அண்ணன் திருமணத்துக்குக்கூட ஊர்ப்பக்கம் வரவில்லை. திருமணம் பற்றி சிந்திக்காமல் வயது தாண்டியபின் கிராமத்துக்கு வந்தபோது ரவி சித்தப்பாவாகியிருந்தான். சித்தப்பா என்றழைத்த  இவனோ பன்னிரண்டு வயதை எட்டியிருந்தான். அருவமாய்க் கேள்விப்பட்டிருந்த ரவி சித்தப்பா உருவமாய் மனதில் பதிந்தது அப்போதுதான். தனதாளுமையாகவும் தனக்கான ஒட்டுமொத்த நம்பிக்கையாகவும் விளங்கிய சித்தப்பாவின் திருமணத்தில் இவன் சோகமாகத் திரிந்தான்.

சாதாரண நூல் புடவையையே மிக நேர்த்தியாகக் கட்டிக்கொண்டு கோவில்சிலைபோல வடிவம் கொண்டிருந்த சித்தியைப் பார்த்த உடனே இவனுக்குப் பிடிக்காமல் போயிற்று. திருமணத்தன்று இரவில் இவன் மீண்டும் அப்பா அம்மாவுடன் முற்றத்தில் வந்து படுத்துக்கொண்டான். முன்னெல்லாம் முற்றத்தில் அப்பா அம்மா. வாசல் திண்ணை ஒன்றில் கட்டில் போட்டுத் தாத்தா. மறு திண்ணையில்  அம்மாயா. சித்தப்பா வரும்வரை முற்றத்தில் அப்பா அம்மாவோடு படுத்திருந்தவன் அவர் வருகைக்குப் பிறகு வீட்டின் உபயோகமற்ற அந்த அறைக்குள்ளே அவருடன் உறங்கத் தொடங்கினான். கரணம் சித்தப்பா சொன்ன ராணுவக் கதைகள், சித்தப்பாவின் கண் சுருங்கும் சிரிப்பு, மீசை. பள்ளிக்கூடத்துக்கு இவன் வாசனை சென்ட் பூசிப் போனான். அந்த அறையின் ஒரு மூலையிலிருந்து  வாசனை கசிந்துகொண்டே இருக்கும். நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் பாலத்து நிழல் படிந்த ஆற்று மணலில் அமர்ந்தபடி அவர் தந்த ஆதரவான அணைப்பு மீளமுடியாத கிறக்கத்தைத் தந்திருந்தாலும் எல்லாவிதத்திலும் தனக்கான பாதுகாப்பாய்ச் சித்தப்பாவை உணரத் தொடங்கியிருந்தது அப்போதுதான்.  இரவு தூக்கத்தில் புரள்கையில் இவன் கை சித்தப்பா மீது பட அந்த ஆழ்ந்த  உறக்கத்திலும் மெல்லிய சந்தோசம் இதழ்க் கோடியில் புன்னகை பூசி விலகும். எவ்விதக் கவலையுமின்றி கனவுகளுடன் உறங்க சித்தப்பா தந்த உத்திரவாதமான ஸ்பரிசம் நிகழ்ந்த அந்த அறைதான் திருமணத்தன்று இவனை மீண்டும் முற்றத்தில் உறங்கவைத்த முதலிரவு அறையாய் ஆனது. திருமணத்துக்கு மறுநாள் சிரித்து நின்ற சித்தப்பாவை நெருங்கியவன் புதிதாய் இன்னொரு வாசனையை உணர்ந்தான். நிமிர்ந்து அவர் முகம் பார்க்க அதே சிரிப்பு அதே மீசையுடன் இருந்தாலும் ஏதோ புது மனிதனைப் பார்ப்பது போல்தான் இருந்தது. '' என்னடா?'' என்று இவன்  கையைப் பற்றிய சித்தப்பாவின் விரல்களில் மோதிரங்கள் மேலும் உறுத்தலைத் தந்தன. புதிதாய்க் கல்யாணமான தம்பதிகள் கோவில், சினிமா என்று போனபோது சின்னப்பையன் என்று இவனையும் உடன் அழைத்துக்கொண்டு போனார்கள் . அவர்கள் அன்னியோன்யத்தை பார்க்கச் சந்தோசமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. அவர்கள் குழந்தையாய் இவன் அலைந்தான். குறிப்பாகச் சித்தப்பாவின் பார்வையில் தன்னைக்  காத்துக்கொண்டான்.

ஏழாம் மாதம் முடிந்து சித்தியை அவர்கள் அம்மா வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். இவனுக்கு ஏழாம் வகுப்பு முடிந்து கோடை விடுமுறை. பெரும்பாலும் வயல் வேலைக்குப் பிறகு மீதிப் பொழுதெல்லாம் சித்தியைப் பார்க்கச் சித்தப்பா சென்றுவிடுவதுண்டு.  டீ.வி.எஸ். பிஃப்டியில் போனால் அரைமணி நேரத்தில் சித்தியின் வீடு. சாப்பாடு முடித்துத் தாமதமாய்த் திரும்பும் நேரங்களில் இவன் அவருடனே அறையில் படுத்துவிடுவான். ஆனாலும் அத்தனை எளிதில் தூங்கிவிடமாட்டான்.  படுத்த ஐந்தாவது நிமிடமே குறட்டைவிட ஆரம்பிக்கும் சித்தப்பாவை இருட்டில் உற்றுப் பார்த்தபடி படுத்திருப்பான். திருமணத்துக்கு முன் அவருக்கு இவ்வளவு சதையில்லை. குறட்டையும் கிடையாது. அருகில் படுத்து அவர் வாசனையை சேகரிக்க முயல்வான். அவர் கையை தன் கை தொட்டுக் கொண்டிருக்க  படுத்திருப்பான். தூக்கம் வராது. சட்டென்று புரண்டு படுக்கும் சித்தப்பாவின் கை இவன் விரல்களை விட்டு விலகிச் செல்ல தாள முடியாத துக்கம் பெருகி  கண்ணீர் துளிர்க்கும். சித்தப்பாவின் முதுகு பார்த்தபடி சத்தமில்லாமல் அழுவான்.

சித்திக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. இவன் போய் பார்த்தான்.சித்தப்பாவைப் போலவே கறுப்பு. குழந்தை கண் மூடி சிரித்தபோதெல்லாம் இவனுக்குச் சித்தப்பா ஞாபகம் வந்தது. அவரைப் போல் மீசையில்லை. அவ்வளவுதான். குழந்தை மீது அளவு கொள்ளாத வெறுப்பு ஏற்பட்டது. வேறு யார் மாதிரியாவது பிறந்திருக்கலாம். இப்படி சித்தப்பா மாதிரியே யார் பிறக்க சொன்னது. சித்தப்பா என்றால் ஒருவர்தான். சித்தப்பா மட்டும்தான் அப்படி இருக்க வேண்டும். அவர் நகலோ ஜாடையோ கூடாது. இவனுக்கு எரிச்சலாய் வந்தது.

அந்தக் கிராமத்துப் பள்ளியில் பத்தாவது வரைதான். மேற்கொண்டு படிக்க பக்கத்து ஊர் செல்லவேண்டும். இவன் ஹாஸ்டலில் தங்கிப் படித்தபோது சித்தப்பாவின் வாசனை இவனைவிட்டு விலகாமல் காத்தது ஒரு தீபாவளிக்கு சித்தப்பா எடுத்துத் தந்த கட்டம் போட்ட வெள்ளை முழுக்கை சட்டையெங்கும் பரவியிருந்த அவர் வாசனையே. சித்தப்பாவுக்கு நிறைய  சதைவிழுந்து ஆளே மாறிப்போனார். மீசையும் சிரிப்பும் மட்டும் அப்படியே இருக்க எப்போதாவது இவனைப் பார்க்க ஹாஸ்டல் வந்து போகும் நாளன்று இரவு தனியே கொஞ்ச நேரம் அழுவான். இவன் எப்போதாவது ஊருக்குப் போகும்போது அவர் அருகில் அமர்ந்து பேச வேண்டியதெல்லாம் பேசுவான். இவனுக்கென்று பிரத்யேகமான வார்த்தைகள் சித்தப்பாவிடம்  இருக்கும். இருவருக்குமான பகிர்தலில் இவனுக்கு மனம் நிறையும். சித்தப்பாவுக்கு இரண்டாவதும் பையனே பிறக்கக் குழந்தை சித்தி ஜாடையில் இருந்தது.

முதல் செமஸ்டர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது  வீட்டில் சித்தப்பாவைத் தவிர யாருமில்லை. சித்தியின் ஊரில் கோயில் திருவிழாவுக்காக எல்லோரும் சென்றிருந்தார்கள். வயல் வேலை காரணமாய் அவர் இரண்டு நாள் கழித்துச் செல்வதாக இருந்தார். அன்றிரவு முற்றத்தில் பாய்விரித்து இருவரும் படுத்தார்கள். முற்றத்துக் கம்பி இடுக்கின் வழியே கசிந்த நிலா வெளிச்சத்தில் அவர் உறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். பால்யம் புரண்டெழுந்தது. இவன் அருகில் படுத்துக் கிடந்த சித்தப்பாவின் வலது உள்ளங்கையைத் தொட்டான். உள்ளே அலையடித்தது. சித்தப்பா எழுந்து தன்னை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அமர்ந்த நிலையிலேயே அவர் உள்ளங்கையில் முத்தமிட்டான். வாசனை சர்ரென்று நாசியைத் தொட்டுக் கண் நெற்றி கடந்து உச்சிக்குச் சென்று மூளையெங்கும் பரவியது. காதுமடல் சூடாகி வெப்பம் பரவியது. காற்று வியர்வையை அள்ளி இவன் நெற்றியில் பூசியது. மெலிதான குறட்டையொலியுடன் உறங்கிக் கொண்டிருந்த சித்தப்பா விழித்தார். '' தம்பி'' என்றார். படக்கென்று நிமிர்ந்தான். '' என்னப்பா?'' எழுந்து அமர்ந்த சித்தப்பா உடம்பெங்கும் நிலாக் கோடுகள். '' ஒண்ணுமில்ல சித்தப்பா'' அவர் இவனை உற்றுப் பார்த்தார். இருட்டில் பளபளத்த இவன் விழிகளில் இறைஞ்சுதல் அலைந்தது. '' தண்ணி         குடிச்சிட்டு படுப்பா'' என்ற சித்தப்பாவின் மார்பின் மீது கைவைத்து அணைத்துக்கொண்டான். அவர் இதயம் ஒரு நொடி அதிர்ந்தது. இவன் தடுமாறியதையும் அலை பாய்ந்ததையும் உணர்ந்தவராக '' நீ பெரிய மனுசனாயிட்டடா'' என்று இறுக்க அணைத்துக்கொண்டார். சித்தப்பாவின் வாசனை மாறவே இல்லை. இவன் மிகப் பாதுகாப்பாய் உணர்ந்த கணங்கள் பல வருடக் கொடிய தனிமைக்குப் பிறகு மீண்டன. தான் எப்போதும் சிறுபிள்ளைதான் என்பதை மீண்டும் ஒருமுறை சித்தப்பாவுக்கு உணர்த்தினான். வெயில் தழும்புகளின் வெம்மையை நிலா ஆற்றிக்கொண்டிருந்தது.

*                    *                        *
அலுவலகத்திலிருந்தபோது போன் வந்தது.  சித்தப்பாவுக்கு நெஞ்சுவலி பெரியாஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாய். ஆஸ்பத்திரி சென்று பார்த்தபோது சலைன் ஏறிக்கொண்டிருந்தது. மார்புவரை போர்த்தியிருந்த துணியில் அவர் உடம்பு தெரியவில்லை. மாறாக உள்ளுக்குள் புதைந்திருந்த வலி நெற்றிச் சுருக்கத்தில் தெரிந்தது. முதல் அட்டாக். இவனுக்கு மனம் கனத்து ஊசி குத்துவது போல் விட்டுவிட்டு உடம்பெங்கும் வலி பரவியது. இவனைப் பார்த்ததும் மெதுவாய்ப் புன்னகைத்தார். இயலாமையில் விரியும் கண்களில் வேண்டுதல் தத்தளித்தது. வலது கையில் கட்டியிருந்த திருப்பதிக் கோயில் கயிறு மிகத் தளர்ந்திருந்தது. படுக்கையில் அமர்ந்து அந்தக் கையைத் தொட்டான். பதறினான். சித்தப்பாவின் அத்தனை வலியையும் தான் ஒருவனே உறிஞ்சிக்கொள்ள வேண்டுமென மனம் தவித்தது. அந்த அறையில் அவர்கள் இருவரும் மட்டும் இருக்க வேண்டுமென விரும்பினான். தொண்டை வறண்டு உடம்பெங்கும் ஒருவித நடுக்கம் பரவ வெளியேறினான்.

ஆலமர நிழலில் இவன் படுத்திருந்தான்.  அருகில் சிமெண்ட் மேடைமீது இவன் வயதொத்தவர்கள் கேரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  பலகையில் தெறித்த விளையாட்டுக் காய்களைப் போல் இவன் மனம் நான்கு திசைகளிலும் மோதிச் சிதறிக்கொண்டிருந்தது. சித்தப்பாவுடன் விளையாடியது ஞாபகம் வர கண்களை மூடினான். சித்தப்பா புன்னகைத்தார். அவர் வலது கையில் கட்டியிருந்த சிவப்புக் கயிறு தளர்ந்து இவன் கண் முன் ஆடியது. குடும்பத்தோடு திருப்பதிக்குச் சென்று வந்த  நினைவு அலைமோதியது. கண் திறந்தாலும் சித்தப்பா. மூடினாலும் அவரே. அவரில்லாத நாள்களின் எண்ணமே இவனை அச்சுறுத்தியது. எழுந்து நடந்தான்.
*         *         *
வீட்டில் யாருமில்லை. எல்லோரும் ஆஸ்பத்திரியில். இவன் மட்டும் அந்த அறையில் தனித்திருந்தான். மூலையிலிருந்து கசிந்து கொண்டிருந்த வாசனை அறை முழுவதும் சித்தப்பாவை நிரப்பியிருந்தது. கொல்லைப்புறம் சென்று கிணற்றில் நீர் இறைக்கும் வாளியிலிருந்து கயிற்றை விடுவித்தவன் அறைக்கு வந்து மேலே தெரிந்த மின்விசிறியில் நுழைத்துப் பார்த்தான். மிகச் சரியாக இருந்தது. ஒருமுறை ஆழமாக மூச்சிழுத்தான். உடல் முழுவதும் சித்தப்பா பரவினார். ஸ்டூலை உதைக்கும் முன் அறைக் கதவு திறந்திருக்கச் சித்தப்பா இவனைப் பார்த்துச் சிரித்தபடி நின்றிருந்தாற்போல் தெரிந்தது. வாசலில் யாரோ செருப்பை உதறினார்கள்.

இவன் வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தான். சித்தப்பாவும் இவனும் நடந்திருந்த அய்யனார்  கோயில் வெளி தாண்டிய சாலை இப்போது தார்ப் பாதையாக மாறிச் செம்மண் சாலையில் படிந்திருந்த அவருடைய பாதச் சுவடுகளைச் சிதைத்திருந்தது. கானல் அழுகை காட்டி தழுதழுத்த சாலையிலிருந்து முளைத்த வெப்பம் இவனைக் கருக்கிக் கொண்டிருந்தது. பாலத்து மேடேறி வந்த  லாரி அலை அலையாய் நெளிந்தது. இவன் நடையை வேகப்படுத்தினான். சட்டென்று நின்று நடுச் சாலைக்கு வந்தான். ஹாரன் அடித்தபடி வேகமாய் வந்த லாரி பெரும் சப்தத்துடன் பிரேக் போட்டு இவன் அருகில் நின்றது.  யாரோ இவனை சாலை ஓரத்துக்கு இழுத்தார்கள்.

*           *                    *

சித்தப்பாவின் மார்பு மேலேறித் தணிந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு நாட்களாக மூச்சுக்குப் போராடி மீண்டும் இயல்பு நிலைமைக்குத் திரும்பியிருந்தார். மூடியிருந்த இமைகளுக்குள் விழிகள் உருள்வது தெரிந்தது. கால் பக்கம் அமர்ந்து போர்வையை விலக்கினான். அவர் கடுமையான உழைப்பாளி. வயல், காடுகரை என்று எங்கும் வியர்வை தெளித்துத் திரும்புவார். பாதங்களைப் பார்த்தான்.  பல இடங்களில் முள் ஏறி முறிந்த அடையாளமாய்க் கெட்டித்துப் போயிருந்தது. கால் விரல்களை வருடினான். மனம் தாள முடியாமல் கலங்கினான். வலதுகை உயர்த்தி இவனை அருகில் அழைத்தார். முகத்தருகே குனிந்தான். வாய் அசைந்து மெல்லிய குரல் காதில் விழுந்தது.
'' வலிக்குதுடா''


*          *                        *
 
இவன் அந்த அறையில் ஸ்டூல் மீது அமர்ந்திருந்தான்.கறுப்புக் கட்டம் போட்ட வெள்ளைச் சட்டை அணிந்திருந்தான். வாசலில் அம்மா யாரிடமோ அழுகை தெறிக்கப் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ''ஆகாரமெல்லாம் குடுக்கலாம்னு டாக்டர் சொன்னதால நேத்துதான் ஒரு இட்லி சாப்பிட்டாரு. திடீர்னு காலையில ரொம்ப முடியாமப் போயி...'' மிச்சமிருந்த சென்ட்டை உடல் முழுவதும் பீச்சிக்கொண்டு எழுந்தான்.
சித்தப்பாவை பெஞ்சில் படுக்க வைத்திருந்தார்கள். அறுந்த வாழையாய் அப்படியே தரையில் சரிந்து விழுந்தான்.
இத்தனை வருடங்களில் ஆற்றில் தண்ணீர் வரவில்லையென்றாலும் நிறைய மாற்றங்கள். அங்கங்கே மணல் தோண்டியிருந்ததி்ல் அம்மைத் தழும்புகள் நிறைந்திருந்தன. உயரக் கரைகளிலிருந்து  இறங்கும் படிகளைக் கூட காணவில்லை. உடைந்து சிதிலமாகியிருந்த படிகளெங்கும் புல் முளைத்து மறைத்திருந்தது. நீளநீளமான கோரைகளின் மீது இவன் சரிந்து இறங்கினான்.   முன்பு சித்தப்பாவும் இவனும் அமர்ந்திருந்த இடம் இப்போது இருளில் கிடந்தது. பெளர்ணமிக்கு மறுநாளானதால் நிலா மஞ்சள் ஆடையை உதறி ஆறெங்கும் வெண்ணிற ஒளியை அள்ளி வீசியபடி விரைந்து கொண்டிருந்தது. இவன் நடந்தான். முழுக்கைச் சட்டையெங்கும் நிறையப் புழுதி படிந்திருந்தது. அங்கே சென்று அமர்ந்தான். சித்தப்பாவின் வாசனை காற்றில் சரசரவெனப் பரவியது. இவன் நாசி அதை உணர்ந்தவினாடி  இவனுக்கு விறைத்துக்கொண்டது. சித்தப்பாவின் விரல்கள் இவன் உடலெங்கும்   பரவி வருடி குவிந்ததாக இவன் உணர்ந்தான். கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிய ஈனஸ்வரத்தில்  முனகியபடி வானத்தில் விரைந்த நிலவைப் பார்த்தவாறு இயங்கத் தொடங்கினான். உடல் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது. உச்சக்கட்டத்தில் பீச்சியடித்த சுக்கிலம் சித்தப்பாவின் கைகளில் தெறித்து இவன் அணிந்திருந்த கட்டம் போட்ட சட்டையிலும் பரவி வழிந்து அதன் வாசனையைத் தின்னத் தொடங்கியது.

முற்றும்.