Monday 16 July 2012

சர்ப்பச்சொல்



சரசரவென நெளியும்
கருநிற நாகம்
இடையின் இடையில் கொத்திக் கொத்தி
செத்துப்போகிறது
விஷம் தின்று பிழைக்கும்
ரசவாதியின் கனவில்

ராத்திரி தூதென அனுப்பிய மகுடிச் சொற்கள்
வந்து சேர்ந்ததா உன்னிடம்

திறவாத இமைகளுக்குள்
தேங்கிய இந்திரியம் துடைக்க
நகங்களில் முளைக்கிறது
பிளவுண்ட நாவின் முள்
கருக்கலில் தினமும்.



நன்றி மலைகள் .காம் இணைய இதழ் 

No comments:

Post a Comment