சரசரவென நெளியும்
கருநிற நாகம்
இடையின் இடையில் கொத்திக் கொத்தி
செத்துப்போகிறது
விஷம் தின்று பிழைக்கும்
ரசவாதியின் கனவில்
ராத்திரி தூதென அனுப்பிய மகுடிச் சொற்கள்
வந்து சேர்ந்ததா உன்னிடம்
திறவாத இமைகளுக்குள்
தேங்கிய இந்திரியம் துடைக்க
நகங்களில் முளைக்கிறது
பிளவுண்ட நாவின் முள்
கருக்கலில் தினமும்.
நன்றி மலைகள் .காம் இணைய இதழ்
No comments:
Post a Comment