லைலாவைத் தூக்கிக் கொண்டு பறந்த
மூசாவைத் துரத்திக் களைத்துப் போன சிந்துபாத்
பாலன் சலூனில் அடைக்கலமானான்
சிதறிக்கிடந்த புத்தகங்கள் எல்லாம் காதல்தான்
வலது மூலையின் உயரத்தில் இருந்த
அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சியின்
செய்திகளிலும் சினிமாக்களிலும்
காதல்தான் ஓடிக்கொண்டிருந்தது
பளபளவென்று ஷேவ் செய்து கொண்டு
காதலியின் திருமணத்துக்குப் போன பாலனோ
திரும்பி வரவேயில்லை
சலூன் எங்கும் திரிந்த
மழிக்கப்பட்ட தாடி மயிர்களில் தடவப்பட்டிருந்த
காதலின் கைவருடல்களைக்கண்ட
சிந்துபாத்தும் கலங்கித் தொலைந்து போனான்
பத்தாயிரத்து முன்னூத்தி பத்தாம் நாளில்
கன்னித்தீவின் ரகசியம் இந்த ஜென்மத்தில்
முடியாதெனத் தெரிந்த அவன்
லைலாவைக்கொன்றுவிடமுடிவெடுத்து
வளர்ந்துவிட்ட தாடியுடன்
இனி எப்போதும் திறக்காத சலூனில்.
No comments:
Post a Comment