செவிகளில் அந்திமழை பொழிய
இதழ்களிலும் விழியினிலும் சிறு நகையாட
மாநகரை வேடிக்கை பார்த்தபடி
பேருந்தில் பயணிக்கிறாள்
ஒருத்தி
தேனில் வண்டு மூழ்கும்போது
முதல் நிறுத்தத்தினைக் கடக்குமவள்
தண்ணீரில் நின்றும் வேர்க்கும்
பரிதவிப்பின் விளிம்பில்
விழிகளில் நிறம் மாற கவனிக்கிறாள்
இருளணியும் ஆகாயத்தினை
மன்மதன் அம்புகள் தைத்த இடங்களில்
ஒளிரும் நகரினைக் கடக்குமவள்
நெற்றி சிகையினை கலைத்து விளையாடும்
காற்றினை ஒதுக்கியபடி எழுகிறாள்
சிப்பியில் தப்பிய நித்திலமென
தனது நிறுத்தத்தில் இறங்குமவள்
கண்களில் இருந்து உடையும் நீரில்
தொடரும் அடுத்த பயணம்.
உயிரோசைஇணைய இதழ் 2011
இதழ்களிலும் விழியினிலும் சிறு நகையாட
மாநகரை வேடிக்கை பார்த்தபடி
பேருந்தில் பயணிக்கிறாள்
ஒருத்தி
தேனில் வண்டு மூழ்கும்போது
முதல் நிறுத்தத்தினைக் கடக்குமவள்
தண்ணீரில் நின்றும் வேர்க்கும்
பரிதவிப்பின் விளிம்பில்
விழிகளில் நிறம் மாற கவனிக்கிறாள்
இருளணியும் ஆகாயத்தினை
மன்மதன் அம்புகள் தைத்த இடங்களில்
ஒளிரும் நகரினைக் கடக்குமவள்
நெற்றி சிகையினை கலைத்து விளையாடும்
காற்றினை ஒதுக்கியபடி எழுகிறாள்
சிப்பியில் தப்பிய நித்திலமென
தனது நிறுத்தத்தில் இறங்குமவள்
கண்களில் இருந்து உடையும் நீரில்
தொடரும் அடுத்த பயணம்.
உயிரோசைஇணைய இதழ் 2011
No comments:
Post a Comment