எனக்கு வாய்த்த 1008 சாபங்களில் ஒன்று
நேற்றெனை பெரும்பசி கொண்டு துரத்தியது
பதறி ஓடி மூச்சிரைக்க அடைக்கலமானேன்
நண்பனிடம்
மூக்கு வழியே புகைவிட்டு சிரித்தவன்
' ஒனக்கு சாவே இல்லடா...
இப்பதான் ஒன்னப்பத்தி நெனச்சேன்' என்றான்.
ஆகப்பெரும் எதிரிகள் பட்டியலில்
முதல் இடத்தை நண்பன் பெற்றது அப்போதுதான்.
No comments:
Post a Comment