Wednesday 1 August 2012

உயிர்



நான்கு நாட்களாக
கிழிபடாமல் இருக்கும்
நாட்காட்டியில் தொடங்கி
அறைக்கதவின் உட்பக்கத் தாழ் தொட்டு
சுழலாத மின்விசிறியின்
உச்சிக்குச் சென்று
இறுகித் தொங்கும் நைலான் கயிற்றின் வழி
கீழிறங்கிப் படரும்
தன  வாழ் விடத்தின் வாசலை
பின்னத் தொட ங்குகிறது அச்சிலந்தி
பிதுங்கிய அவ்விழிகளின் மீது.

No comments:

Post a Comment