Wednesday 29 August 2012

நிழல் மீன்


கோடையிளைப்பாறும் நதியினில் வாழும் சிறுமீன்கள் 
சூரியனை வேடிக்கைப் பார்க்கும்
நதியுடலில் துளைகள் இட்டு

பசியூறிய இரைப்பையுடன் பறக்கும்
பருந்தொன்றின் நிழல்
நதியுடலில் உரச
உள்சென்று ஒளியும் மீன்கள்
அரை நொடியில் சிறு சிறு பதற்ற அலைகளை உருவாக்கும்

விரிந்துகொண்டேபோகும் நீரலையொன்று
கடல் சேர்ந்து பேரலையாகும்

நிழலறியா மீன்கள் காத்திருக்கும் 
நீர் ஆழத்தில்
நிலவு தொலையும் நாளினை  எதிர்கொண்டு.

நன்றி: கணையாழி. -2011   

No comments:

Post a Comment