கோடையிளைப்பாறும் நதியினில் வாழும் சிறுமீன்கள்
சூரியனை வேடிக்கைப் பார்க்கும்
நதியுடலில் துளைகள் இட்டு
பசியூறிய இரைப்பையுடன் பறக்கும்
பருந்தொன்றின் நிழல்
நதியுடலில் உரச
உள்சென்று ஒளியும் மீன்கள்
அரை நொடியில் சிறு சிறு பதற்ற அலைகளை உருவாக்கும்
விரிந்துகொண்டேபோகும் நீரலையொன்று
கடல் சேர்ந்து பேரலையாகும்
நிழலறியா மீன்கள் காத்திருக்கும்
நீர் ஆழத்தில்
நிலவு தொலையும் நாளினை எதிர்கொண்டு.
நன்றி: கணையாழி. -2011
No comments:
Post a Comment