Saturday 18 August 2012

குறுந்தகவலுக்கு முன்னும் பின்னும்






12 : 40


வீழும் கறுப்பு நயாகராவில் ரோஜா பூத்து அசைந்ததே...
வட்டத் தடாகத்தில் உயிர் சிமிட்டி மிதந்ததே இரு மீன்கள்...
ஈரச் செர்ரியில்   ஊறி அசைந்ததே அவன் பெயர்...
மியாவ் மயிர்களில் மிதந்து நகர்ந்ததே அவன் காற்று...

  12 :41

சிகை மொத்தம் வழித்து
சாக்பீஸில் எண் எழுதி கையில் திணித்த சிலேட்டுடன்
குற்றவாளிக் கூண்டில் ஏற்றினான்
கை நிறைய அமிலம் அள்ளி கண்களில் ஊற்றி அடைத்தான்
சிறுகத்திகொண்டு உதடுகளின் குறுக்கே ஒரே வெட்டு
நான்கு துண்டாக்கினான்
அதே கத்தியினால் கழுத்தறுத்தான்
தொடர்பு எல்லைக்கு அப்பால் பெருகிய ரத்தம்
பார்த்தபடி பதில் தகவல் அனுப்பினான். 






No comments:

Post a Comment