Sunday 9 August 2015

ஆயிரம் மைல்களுக்கப்பால் பெய்யும் மழை


வழியனுப்ப வந்தவர்களும் 
கையசைத்து இருப்பிடம் திரும்பிவிட
வெறிச்சிட்ட இரயில் நிலையத்தில்
வீசி வீசிப் பெய்யும்
மழையின் தனிமை

ஈரம் விலக்கிய
இரயிலின் பயணமோ
வெடிப்புற்ற நிலம் வழி நிகழ்கிறது
பற்ந்துகொண்டிருந்த கொடுங்கழுகின்
கால்களிலிருந்து விடுபட்ட
பாலைச்சர்ப்பமொன்றின் உயிர்
காற்றில் நழுவி
விரையும் இரயில் முதுகில் மோதி
நெளிந்து நெளிந்து கீழே விழுந்து
சக்கரங்களில் சிக்கி அரைபடுகிறது

சிதைவுண்ட வறண்ட பிரதேச உடலுதறி
விரையும் இரயிலின் ரத்தத்தினை
பல்லாயிரம் மைல்களுக்கப்பால் பெய்யும் மழை
கழுவலாம்.

No comments:

Post a Comment