Wednesday, 29 August 2012

நாகமனம்



நிலவுகளில் நெளியும் சட்டைகளை
இமை பொருத்தி உரிக்கிறாய்

விழிகருமணி விரையும்
வரைபடத்தின் இறுதி
அம்மணமாக்குகிறாய் சிசுக்கவிச்சியில்

சீறும் வாசனை நழுவும் நாசியில்
வெப்பத்தின் வாலில் துடித்துக் கடத்தும்
விரல்பின்னிய குளிர்நொடிகள்

ஊறிய எச்சில் உறைந்திருக்கிறது மாணிக்கப் பழமென

பெரும் இரை உண்ட  சாம்பல் மனம் அசையும் மெதுவாய்

பிளவுண்ட உதடுகளின் பிசுபிசுப்பில்
மிதக்கும் கண்களில் வழியும் பாம்புகளினால்
கனவுகளில் தேங்குகிறது விஷம். 

No comments:

Post a Comment